2512. | பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்; மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்; கொண்டல்தன் ஆணையால் குகனும் போயினான். |
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் - பழமையான வேதங்களை ஆராய்தறிந்தபரத்துவாச முனிவனும் (தன்னிடத்திற்குச் சென்றான்; மண்டு நீர் நெடுநகர் மாந்தர்போயினார் - நிறைந்த அகழி நீராற் சூழப்பெற்ற பெரிய அயோத்தி நகரவாசிகளாயமணிதர்களும் புறப்பட்டுச் சென்றார்கள்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார் - வெளிப்பட்டு விண்ணிற் கூடிய தேவர்களும் அங்கிருந்து நீங்கித் தத்தம் இடம் சேர்ந்தார்கள்;கொண்டல்தன் - இராமபிரானது; ஆணையால் - கட்டளையால்; குகனும்போயினான் - குகனும் தன் இடமாகிய சிருங்கி பேரத்துக்குச் சென்றான். குகன் சற்றுப் பின்தங்கி இராமனது ஆணை பெற்றுச்சென்றானாதல் வேண்டும். விண்டு - வெளிப்பட்டு. மறைந்துள்ள தேவர்கள், தம் காரியசித்திக்காக இராமனை அயோத்தி செல்லவொட்டாது தடுக்க வெளிப்பட்டுக் கூடினார் ஆதலின்‘விண்டு உரை தேவர்’என்று கூறினார். 138 |