பக்கம் எண் :

அபிதானசூசிகையகராதி501

கடோற்கசன்- வீமனுக்கு இடிம்பி
   யென்னும் அரக்கியினிடம்
   பிறந்த குமாரன், வேத் -30
களிந்தாநதி - யமுனை, அருச் -11
கன்னன்- குந்தியின்மகன், சம் - 64:
   இந்திராதிய ரிரந்தன தரத்தக்க
   வன், சம் - 38: கவசகுண்டலங்
   களுடன் பிறந்தவன், சம் - 39.
   நதியில் விடப்பட்ட இவனை
   அதிரதனெடுத்து வளர்த்தான்:
   இவன் கதிரவன் தரு புதல்வன்:
   பரசுராமனிடம் படைக்கலப்
   பயிற்சி செய்தான், சம்-42:
   அரங்கத்தில் அருச்சுனனினும்
   வின்மையில் விஞ்சியவன், வார -
   62:
   அங்கதேசாதிபதி யாயினான்,
   வார -70: துரியோதனனுக்கு
   உற்றதுணை, வார - 102:உண்மை
   முதலியவற்றி வொப்பற்றவன்,
   திரௌ - 39.
கன்னித்துறை,அருச் - 47
காஞ்சீபுரம்,அருச் - 13.
காண்டவப்பிரத்தம்,இந் -8
காந்தாரி- சுபல மகள், சம்71,81:
   வடமீனனையாள், சம் -23:
   கணவன் விழியிலானென்று அறிந்து
   பிறரெவரையும் பாராதவாறு
   பட்டத்தினால் கண்ணை
   மறைத்துக்கொண்டாள்; திருதராட்
   டிரனோடு விவாகஞ் செய்வித்தார்,
   சம் - 24: வியாசனருளால்
   நூறுமகவான கருப்ப மெய்தினள்,
   சம் -58; குந்திபுதல் வனைப்
   பயந்தமை கேட்டுப் பொறாமையால்
   உதரமுட்  குழம்புமாறு
   மோதியவள், சம் - 70. வியாதன்
   அந்தக் கருப்ப கோசத்தசையினைத்
   தாழியிலிழு  திலிட்டுவைத்தல்,
   சம் -72; சுயோதனன் முதலியோர்
   தோன்றுதல், சம் - 78, 80.
- சாபத்தால் அரமகள் மீன்
  வடிவெய்தி வசுவின் வீரியத்தை
  விழுங்க அம்மீன்வயிற்றுப்
  பிறந்தவள், குரு -105: தாசபூபதியால்
 

 வளர்க்கப்பட்டவளும் வியாசனுடைய
 தாயுமாகிய இவளைச்சந்த
 னுவுக்குவீடுமன்மணஞ்செய்வித்
 தான்;குரு-100: சம்-6,7: தன்
 மேனி யோசனை தூரம்
 மணம் வீசப்பெற்றவள், குரு -91:
 இன்னும் இவளைப்பற்றியன யோஜந
 கந்தி என்ற இவள் பெயர்
 காட்டுமிடத்துக் கூறப்படும்.
கிந்தமன்- மானுருவங்கொண்ட
   மனைவியோடு அம்மானுருவங்
   கொண்டே புணர்கையில்
   பாண்டுமன்னவன் கணையால்
   தாக்கப்பட்டு உயிரொடுங்கிய
   ஓர் முனிவன்: பாண்டுவுக்குச்
   சாபமளித்தவன், சம் - 49,51
- சேதிமரபினனாயவசுவென்
  பவனுக்கு மனைவி, குரு -104.
கிருபன்- கோதமன்பேரன், வார-29,
  பாண்டவரின் வில்லாசிரியன்,
  வார - 30,மூத்திருந்தான், வார -66
கிருபி- கிருபற்கிளையாள்,
  துரோணன் மனைவி, வார - 41;
  அசுவத் தாமனை வளர்த்தாள், வார -
  42.
கிருஷ்ணன்- வசுதேவகுமாரன்:
   பூபாரந்தீர்க்கப் பிறந்தவன்,
   சம் - 111: யதுகுலத்துக்குத் திலகம்: 
   மாமனுயிர் முடித்தான்; கற்பகச்
   சோலையைப் பூமியிற் கொணர்ந்தான்,
   திரௌ -41: அருச்சுனனுக்குச் சகாயன்,
   திரௌ - 49: இந் -8. அருச்-73,64,
   85, 90: காண் -13,
குந்தி- பிரதையைப்பார்க்க.  [19.
குந்திபோசன்- பிரதையைவளர்த்த
   தந்தை, சம் -25
குரு- சந்திரகுலத்து மிகு சிறப்
    புடையரசன், குரு -31, 32.
கூடல்- தமிழேடு எதிரேறிய
   வைகைத்துறையை யுடையது,
   அருச் - 20
கோதமகன்- கிருபனுக்குத் தந்தையான
  சரத்துவந்தனுக்குத்
  தந்தை, வார - 29.
கோகர்ணம்- சிவக்ஷேத்திரம்,அருச்
             -48