சகுனி- காந்தாரத்தலைவன், திரௌ -37: சூதில்வல்லவன்: துரியோதனனுக்கு உற்றதுணை, வார -102. சதசிருங்கம்- ஒருமலை: பாண்டு மரித்ததும், இம்மலையிலிருந்த காசிபன் முதலியோர் பாண்ட வரை அரச நகரிற்சேர்த்தனர், சம் - 107. சந்திரன்- திருமாலின் மனத்தினின்று தோன்றியவன், குரு-1: நட்சத்திரங்களை நாடொறும் புணர்பவன், தேவர்கட்கு அமு தளிப்பவன், சிவன் முடியிலிருப் பவன், குரு - 2: பூமியைக்குளிரச் செய்பவன், குரு -3: பாற்கடல் கடைந்த காலத்து அடைதூணாயினான், பாற்கடலில் தோன்றினான்,குரு - 4: பதினாறுகலைகளையுடையவன், அத்திரிமுனிவர் விழியினில் தோன்றியவன், குரு-5. புதனுக்குத்தந்தை, குரு-6 சந்தனு - சந்திரகுலத்தவனான ஓரரசன், குரு -33: வருணன் பிரம சாபத்தினால் இம்மன்னனாகப் பிறந்தான், குரு -59, 69, 72: கங் கையாளை மணந்தவன், குரு -46, கங்கையின் புதல்வனான வீடு மனால் தாசபூபதி வளர்த்த காளியை மணந்தான், குரு - 107. சராசந்தன்- மகததேசத்தரசன்: க்ருஷ்ணனை வடமதுரையி னின்று துவாரகை சேருமாறு செய்தவன், திரௌ - 48, 52. சல்லியன்- மத்திரநாட்டரசனான வீரன், திரௌ - 45, 51. சன்மிட்டை- வ்ருஷபர்வன் மகள், தேவயானைக்குப் பாங்கியா யிருந்து பின் பணிப்பெண்ணானவள், குரு-18: யயாதியால் காந்தருவ மணஞ்செய்யப்பட்டவள், குரு-19: பூருவைப் பெற்றவள், குரு-20: பின்னும் (த்ருஹ்யு அனு என்ற) இருவரை ஈன்றாள், குரு -21 | சாத்தகி- க்ருஷ்ணனுக்கு இளவல்: போசகுலத்தலைவன், திரௌ -42 சாதேவன்- ஸகதேவன்: மாத்திரி, குமாரன், நகுலனது தம்பி, சம் - 86, 87 சாலிகோத்திரமுனிவனம்- பாண்ட வர்வேத்திரகீயமடையுமுன் தங் கிய இடம், வேத - 26 சாலுவன்- வீடுமனோடுஅரசர்செய்த சமரில் வீரத்தாற்சிறிது முந்திய மன்னவன், குரு-127: அம்பையை மணமறுத்தவன், குரு -129 சிகண்டி- அம்பைதவஞ்செய்து யாகசேனனிடஞ் சேர்ந்தபோது பெற்ற பெயர், குரு -146. சிசுபாலன்- சேதிபதி: கண்ணனைப் பழித்தலையே தனக்கு வலிமையென நினைப்பவன், திரௌ - 42 சித்திரரதன்- கங்கைக் கரையில் ஜலக்கீரிடை செய்துகொண்டு அருச்சுனனொடுபொருது பிறகு நண்பாய்த் திரௌபதியின்சுயம் வரத்துக்குச் செல்லும் பாண்டவர்க்கு வழிமுதலிய காட்டியவன், திரௌ -8 சித்திரவாகனன்- மகப்பெறாது தவம் புரிந்து சித்திராங்கதை யைப்பெற்ற பாண்டியன்: அருச்சுனனுக்குத் தன்மகளையீந்து அவன் தன் மகளிடத்துப் பெற்ற புதல்வனைத் தான்தத்து மகனாகக் கொண்டவன், அருச் -26 சித்திராங்கதன்- சந்தனுவுக்குக் காளியினிடம் பிறந்தவன், குரு- 111, 112: வீடுமனால் அரசனாயினன், குரு 113: சித்திராங்கதனென்னும் கந்தருவனாற் கொல்லப்பட்டான், குரு - 114. சித்திராங்கதன் ஒரு கந்தருவன்: சித்திராங்கத மன்னனைக் கொன்றவன், குரு -114. சித்திராங்கதை- சித்திரவாகன பாண்டியன்புதல்வி, அருச் -26: அருச்சுனனை மணந்தாள், அருச்- |