தென்புலத்தவர் யாவர்உம் களி கூர - தென்திசையிலுள்ளவரான பிதிருதேவதைகள்எல்லாரும் மகிழ்ச்சிமிக, சிறந்த நான்மறை விதியினால் - சிறப்புற்ற வேதவிதிப்படி,உலகு இயல் - உலகில் நிகழும் இயல்பின்படியே, செய்தபின்-,- செழுந்திங்கள்மறைந்த யாமினி நிகர் என - விளங்குந் தன்மையுள்ள சந்திரன் மறையப் பெற்ற இரவுஒப்பு என்னுமாறு, குரு குலம் மன்- குருகுலத்தலைவனான வீடுமன், மயக்குஉறும்எல்லை - சோகமயக்கத்தை அடையும்போது,- அறம்தவா வகை - (பிதாவின்விருப்பத்தை நிறைவேற்றுதலென்ற) தருமம் தவறாதவாறு, துறந்த -(மண்பெண்ணாசைகளைத்) துறந்தவனான, வாள் - ஒளிபொருந்திய, அரசனுக்கு -வீடுமராசனுக்கு, அன்னை - சந்தனுவின் மனைவியான காளி. மற்று-பின்பு, இது-இவ்வார்த்தைகளை, சொன்னாள்-; (எ -று.)- அன்னை சொல்லியதை, மேலிருகவிகளிற் காண்க. உரிய - பெயர்: பெயரெச்சமெனக்கொண்டு, உலகியல் - சடங்கு என்றுமாம். விசித்திரவீரியனிறந்த துயரினால் மயங்கும் வீடுமனுக்கு, சந்திரன் நீங்கியதனாலான இருளினால் விளக்கமற்றிருக்கும் யாமினி உவமை. துறந்து வாழரசனுக்குஎன்றும்பாடம். (157) 3.-இதுவும் அடுத்த கவியும் - ஒருதொடர்:காளி கொழுந்தி யரிடத்து மகவை யுண்டாக்குமாறு வீடுமனிடம் சொல்ல, வீடுமன் மறுத்துக்கூறலைத் தெரிவிக்கும். மைந்தகேட்டிநின்றுணைவன் வானடைந்தபின்மதிமுதலெனத்தக்க இந்தமாமரபரும்பனிப் பகைச்சிரத்தெழலியொத்ததுமன்னோ முந்தைநான்மறைமுதலிய நூல்களின்முறைமைநீயுணர்கிற்றி எந்தநீர்மையினுய்வதென் றறிகிலேனிடரினுக்கிருப்பானேன். |
(இ-ள்.) மைந்த - குமாரனே! கேட்டி - கேட்பாய்: நின் துணைவன் - உனது உடன்பிறந்தான், வான் அடைந்தபின் - விண்ணுலகத்தை யடைந்தபின்பு, 'மதி முதல்சந்திரனே குலமுதல்வன்,' என தக்க - என்று சொல்லுந் தகுதிபெற்ற, இந்த மா மரபு - இந்தச்சிறந்தவமிசமானது, (இடையறாமைக்குக் காரணமான புதல்வரையில்லாமையால்),எழிலி சிரத்து - முகிலின்மேல், [மேகத்தினால் மறைக்கப்பட்ட என்றபடி], அரும்பனிபகை-சூரியனை, ஒத்தது - நீ-, முந்தை நான்மறை முதலிய நூல்களின் முறைமைஉணர்கிற்றி-பழமையான நான்குவேதம் முதலிய நூல்களின்முறைமையையுணரவல்லாய்: எந்த நீர்மையின் உய்வது - எந்தமுறைமையினால்(இந்தக்குலம்) அழியாமல் நிற்கவல்லது? என்று - என்பதைபற்றி, அறிகிலேன் -அறியும்வல்லமையில்லேன்: (அதனால்), இடரினுக்கு- துன்பத்திற்கு, இருப்பு ஆனேன்- இருப்பிடமானேன்; (எ-று.)- மன்ஓ - அசை. சூரியன் மேகத்தினால் மறைப்புண்டு மழுங்கிக்கிடப்பதுபோல, உன் தம்பி யிறந்தபின் இந்தச்சந்திரகுலம் மழுங்கிக்கிடக்கின்றதென்பது, முதலிரண்டடியின்பொருள். "அரும்பனியச்சிரத்து" என்ற பாடத்துக்கு - பனியைக்கொண்ட முன்பனிக்காலத்து,எழிலி [மேகத்தை] யொத்தது என்க: முன்பனிக்காலம் பனியால்மூடி மழுங்கியிருக்குமென்க.அச்சிரம் - முன்பனிக்காலம். (158) |