பக்கம் எண் :

சூதுபோர்ச் சருக்கம் 410

அடிமையாகிய பாண்டவர்கள் தமது தலைவரிடத்தில் பணிவிடை செய்வதே
முறைமையாகுமாதலாலும், திருதராஷ்டிரராசனதுகட்டளைப்படியே
அடிமையாகிய பாண்டவர்கள் வனத்திற்குச் சென்றாலும் குறித்தகாலங்கழித்து
மீண்டுவந்தபோது அடிமையாகிய உங்கட்குச் செல்வத்தில் உரிமையில்லை: 
உங்கட்குத் தலைவர்களானஎங்களிடத்து அடிமை செய்துகொண்டிருப்பதே
உங்கள் கடமையாகுமன்றி, நீங்கள் இராச்சியம் முதலியசெல்வ
வாழ்க்கைகளைப் பெற விரகில்லை;  நாங்கள் சம்மதித்து உங்களை
அடிமையாதலினின்றும்விடுவிக்க வில்லையே!  எனத் துரியோதனாதியர்
கூறுவர்களாதலாலும், திரௌபதி தங்களைஅடிமையினின்று நீக்குமாறு
சூதாடவேண்டுமெனக் கூறினளென்க. யுதிஷ்டிரனுக்குப்ரதிவிந்த்யனென்பவனும்,
வீமசேனனுக்கு ஸு தஸோமனென்பவனும், அருச்சுனனுக்கு
ஸ்ருதகீர்த்தியென்பவனும், நகுலனுக்கு ஸதாநீகனென்பவனும், சகாதேவனுக்கு
ஸ்ருதஸேநனென்பவனுமெனத்திரௌபதியினிடத்தில் ஐவர்க்கும் ஐந்துமக்கள்
தோன்றினர்;  இவர்கள்உபபாண்டவரெனப்படுவர்.  'எனது மைந்தரைவர்'
என்றது, மற்றும் சுபத்திரை முதலியோரிடத்துப்பிறந்திருந்த அபிமந்யு
முதலியவரையும் உபலட்சணத்தாற் குறிக்குமென்னலாம்.  மூன்றிழை
சேர்த்துஓரிழையானது மூன்றுகொண்டது ஒரு வடமாக, அங்ஙனம் மூன்று
வடங்கொண்டு பூணூல் செய்யப்படுவதனால், அது'முந்நூல்' என்றும்,
'முப்புரிநூல்' என்றும் சொல்லப்படும். ஸ்ருதி, வரபதி -
வடசொற்கள்.                                            (431)

279.-திரௌபதி கூறியபடி தருமன்மறுசூதாட
மன்னவர் காணுதல்.

தையலங் குரைத்த மாற்றந் தருமனுங்கேட்டு நாங்கள்
கையறு தொண்ட ராகிக்கான்புகல் வழக்கு மன்றால்
ஐயுறா தொருகா லின்ன மாடுதுமருஞ்சூ தென்றான்
மெய்யுற விருந்த வேந்தர்மீளவுங் காண லுற்றார்.

     (இ -ள்.) தருமனும் - தருமபுத்திரனும், அங்கு-அப்பொழுது தையல்
உரைத்த மாற்றம் கேட்டு - திரௌபதிகூறிய வார்த்தையைக் கேட்டு,-
'(நாங்கள்-, கை அறு தொண்டர் ஆகி கான் புகல் -சுவாதந்தரியமற்ற 
அடிமைகளாயிருந்துகொண்டு காட்டிற்குச் செல்லுதல், வழக்கும் அன்று -
முறைமையுமன்று;  ஆல் - ஆதலால், ஐயுறாது - மங்கலங்காது, இன்னம் -
இன்னமும், ஒருகால் -ஒருதரம், அருஞ் சூது - (வெல்லுவதற்கு அரிய)
சூதை, ஆடுதும் - ஆடுவோம்,' என்றான் - என்று கூறிச்சூதாடத்
தொடங்கினான்; (அப்பொழுது), மெய் உற இருந்த வேந்தர் -
சாட்சியாகவிருந்தஅரசர்கள், மீளவம் - மறுபடியும், காணல் உற்றார் -
(அச் சூதாட்டத்தைப்) பார்க்கலானார்கள்;(எ - று.)

    'நாங்கள் மீண்டுவந்த பிறகு இராச்சியத்தைக் கொடுப்பதற்குத்
துரியோனாதியர்கள் ஏதாவதுபோக்குச் சொல்லக்கூடு