விஷ்ணு, மதுஸூதநன், த்ரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பன. ஸத்யவ்ரதன், தேவீ, பக்தி, நாமம், புத்தி, புண்யம்-வடசொற்கள். (433) 281.-தருமபுத்திரன் வெல்லுதல். உருட்டிய கவறு நேமி யுடையவ னருளினாலே மருட்டிய சகுனி யெண்ணின்வழிப்படா துருண்ட காலை இருட்டிய விழியான் மைந்தனிதயமு மிருண்டு சோரத் தெருட்டிய வுணர்வின்மிக்கோன் செப்பிய யாவும் வென்றான். |
(இ -ள்.) உருட்டிய - (தருமபுத்திரன்) உருட்டியாடிய, கவறு - பாச்சிகையானது, நேமி உடையவன் அருளினாலே- (சுதரிசன மென்னுஞ்) சக்கரத்தை ஆயுதமாகக்கொண்டுள்ள திருமாலினது திருவருளினால், மருட்டியசகுனி எண்ணின் வழிப்படாது - மாயஞ் செய்த சகுனியினது விருப்பப்படி உருண்டு விழாமல், உருண்டகாலை-(தருமனது விருப்பத்தின்படியே) உருண்டு விழுந்த சமயத்தில்,-தெருட்டிய உணர்வின் மிக்கோன்- தெளிந்த அறிவுமிக்குள்ளவனாகிய தருமபுத்திரன்,-இருட்டிய விழியான் மைந்தன் இதயம்உம் இருண்டுசோர-இருளின் தன்மையை யடைந்துள்ள கண்களையுடையவனான [குருடனான] திருதராட்டிரனது புதல்வனாகியதுரியோதனனது மனமும் மயங்கித் தளரும்படி, செப்பிய யாவும்- பந்தயமாகக் குறிக்கப்பட்டஎல்லாவற்றையும், வென்றான்-சயித்தான்; (எ - று.) கடவுளருளை முன்னிட்டுக்கொண்டு ஒரு காரியஞ் செய்பவர் வெற்றி பெறுவரென்பது, இதனாற் பெறப்படும். பஞ்சபாண்டவரும் திரௌபதியும் புதல்வரைவரும் முதலியவர்களின் அடிமை எதிரிகள் வைத்த பந்தயப்பொருளாகவும், தனது புண்ணியம் தனது பந்தயப்பொருளாகவுங் கொண்டு தருமன் சூதாடித்திருமாலருளால்வென்றன னென்பதாம். தெருட்டிய=தெருண்ட; தன்வினைப்பொருளில் வந்த பிறவினை; இனி, திரௌபதியினால்தெளிவிக்கப்பட்ட எனினுமாம். (434) 282.-தம்பிமார் முதலியவருடன்தருமபுத்திரன் திருதராட்டிரன் முதலியோரிடம் விடைபெற்றுக் காட்டிற்குச் செல்லுதல். வென்றுதன் னிளைஞ ரோடும் மேதகுபுதல்வ ரோடும் மன்றலந் தெரிவை யோடும்மற்றுளோர் தங்க ளோடும் அன்றுதன் குரவர் பொற்றாளன்புடன் வணங்கிக் கானஞ் சென்றன னென்ப மன்னோசெழுநில முடைய கோமான். |
(இ -ள்.) செழுநிலம் உடைய கோமான் - பலவகைவளங்களும் நிறைந்த பூமிக்குத் தலைவனானயுதிஷ்டிரராஜன், வென்று (அந்த மறுசூதில் தான்) ஜயித்து, தன் இளைஞரோடும் - தனது தம்பிய |