பக்கம் எண் :

100பாரதம்ஆரணிய பருவம்

     (இ-ள்.)'நீபுரி தவம் பயன் - நீ செய்த தவத்தின்பிரயோசனம், நீடு
வாழி - பலகாலம் (அழிவில்லாமல்)வாழ்வதாக;சாபம்உம் - (உனது)
வில்லும், தூணிஉம் - அம்பறாத்தூணீரமும்,சரம்உம் - அம்பும், வாழி -
வாழ்வனவாக;தீபம் மெய் ஒளியுடன் சேர்ந்து போர் செயும் - விளக்கினது
உண்மையான பிரகாசத்துடனே (தன்னொளிக்குஒப்பாகாதென்னுங்கருத்தால்)
நெருங்கிப் போர்செய்கின்ற, மா பெரு நீலம் மெய் - அழகிய பெரிய
நீலநிறமான (உன்)உடம்பு, வாழி வாழி - நன்கு வாழ்வதாக';(எ-று.)

     பின் இரண்டடிக்கு - விளக்குப்போல ஒளிவடிவமான பரமசிவத்துடனே
நெருங்கிப் போர்செய்த மிகவும் சிறந்த நீலரத்தினம் போன்ற உன்மேனி மிக
வாழ்க என்றும் பொருள் கொள்வர். வாழி வாழி, அடுக்கு - மகிழ்ச்சிபற்றியது.
நீடு - நீண்டகாலத்துக்கு முதனிலைத் தொழிலாகுபெயர்: வினைமுதற் பொருள்
விகுதி புணர்ந்த கெட்ட தெனினுமாம்; வினைப்பகுதி வினையுரியாய்,
நீடியதாக என்னும் பொருள்பட்டு நின்றதெனினுமாம்; நீண்டு என்பதன்
விகாரமாகவுமாம்.                                            (132)

133.என்றுகொண்டிணையடியிறைஞ்சுமைந்தனைத்
தன்றிருத்தேரின்மேற் றாழ்ந்தகைகளால்
ஒன்றியவுவகையோடேற்றியும்பர்கோன்
சென்றனன்றன்பெருந்தெய்வவானமே.

     (இ-ள்.)என்றுகொண்டு - என்று சொல்லிக்கொண்டு,- உம்பர்கோன் -
தேவேந்திரன்,-இணைஅடி இறைஞ்சும் மைந்தனை- (தனது)
உபயபாதங்களைவணங்குகிற புத்திரனான அருச்சுனனை,- தாழ்ந்த
கைகளால் - (தனது)தாழ்ந்து தொங்குங் கைகளால்,-தன்திரு தேரின்மேல்
- தனது அழகிய தேரில், ஏற்றி-(எடுத்து)ஏறவிட்டுக்கொண்டு,-ஒன்றிய
உவகையோடு - பொருந்திய மகிழ்ச்சியுடனே,- தன் பெரு தெய்வம் வானம்
- தனது சிறந்த தெய்வத்தன்மையுள்ள சுவர்க்கத்துக்கு, -சென்றனன் -
போனான்;(எ-று)

         தாழ்ந்த கைகள் -முழங்காலளவும் நீண்டு தொங்குங் கைகள்:
ஆஜாநுபாகு: இது, உத்தமபுருஷ லக்ஷணம்.  சுவர்க்கத்துக்குத்
தெய்வத்தன்மை - புண்ணிய மிகுதியாலடைய வேண்டியதாதலும்,
இன்பத்தையே நுகருமிடமாதலும் முதலியன.  வான் - இடவாகுபெயர்: 
அம்- சாரியை.                                        (133)

134.-தேரின்மீதுஇந்திர அருச்சுனர் விளங்கியதன்
வருணனை.

ஒருபெருமாதலி யூருந்தேரின்மேல்
இருமரகதகிரி யிருந்தவென்னவே
மருவருகற்பக மாலைமௌலியும்
விரிபுகழ்மைந்தனும் விளங்கினாரரோ.