தத்தஞ்செய்தநீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாய்ஆகாயத்தை அளாவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்ஓரடியால் விண்ணையும் அளந்து மற்றோரடியால்அவனையும்பாதாளத்தில் அழுத்தி அடக்கினா ரென்பது கதை. சிறை-காவலிடம்:பாதாளத்தில் பலி சக்கரவர்த்தி உள்ள இடத்துக்கு விஷ்ணு காவலாக வாயிலி லிருக்கிறாரென்றுஉணர்க. பூவிரிந்தது எனவும் பாடம். (137) 138.-இதுவும் மேலைக்கவியும்-ஒருதொடர்: அருச்சுனனும்இந்திரனும் அமராவதியிற் சேர்ந்து சுதர்மையில்ஓராசனத்து அமர்தலைக்கூறும். பொலிவுறுமந்நகர்புகுந்துதாதையும் சிலைகணைபெறுதிறற்றெய்வமைந்தனும் மெலிவுறுமின்னிடைநுடங்கமீனினும் பலரரமாதரார்பரிவுகூரவே. |
(இ - ள்.)தாதைஉம் - தந்தையாகிய இந்திரனும், சிலைகணைபெறு - (சிவபிரானிடத்து) வில்லையும்அம்பையும் பெற்ற, திறல் - பராக்கிரமத்தையுடைய, தெய்வம் - தெய்வத்தன்மையையுடைய, மைந்தன்உம் - புத்திரனானஅருச்சுனனும், பொலிவு உறும் அ நகர் புகுந்து - அழகு மிகுந்த அவ்வமராவதிபுரியை அடைந்து,-மீனின்உம் பலர் - ஆகாயத்தில் விளங்குகின்ற நக்ஷத்திரங்களைக்காட்டிலும் அநேகராகிய, அர மாதரார்-தெய்வப் பெண்கள், மெலிவு உறு மின் இடை நுடங்க - இளைத்தல்மிகுந்த மின்னல் போன்ற (தமது) இடை அசையவும், பரிவு கூர - (தம்மைக்கண்டு) அன்பு மிகவும்,-(எ-று.)-"சிலம்பொலிகூரும் மண்டபத், தொரு மணியாசனத் தோங்கிவைகினார்"என்று அடுத்த கவியில் முடியும். மைந்தனுக்குத்தெய்வத்தன்மை - இந்திரனது புத்திரனும் சிவனது பக்தனுமாதல்:மின்னுவது மீன் என நட்சத்திரத்திற்குக் காரணக்குறி. (138) 139. | பருமணிவெயிலெழப் பணிலமாநிரை தருமணிநிலவெழத்தமனியப்பெருங் குருமணிச்சிலம்பொலிகூருமண்டபத்து ஒருமணியாசனத்தோங்கிவைகினார். |
(இ - ள்.) பருமணி வெயில் எழ - (தாம் தாம் அணிந்துள்ள ஆபரணங்களிற் பதித்த) பருத்த சிவந்த இரத்தினங்களினின்று சூரியனொளிபோன்றஒளி வீசவும், மா பணிலம் நிரை தரு மணி நிலவு எழ - பெரிய (சிறந்த) சங்குகளின் கூட்டம் பெற்ற முத்துக்களினின்று சந்திரனொளிபோன்றஒளி வீசவும்,-தமனியம் பெரு குருமணி சிலம்பு ஒலி கூரும் - பொன்னாற்செய்துபெரிய நிறமுள்ள இரத்தினங்களைப்பதித்த சிலம்பென்னும் காலணி ஓசைமிகும்படி (தேவமாதர்) நடிக்கப்பெற்ற, மண்டபத்து - மண்டபத்திலே, ஒரு மணி ஆசனத்து - இரத்தினங்களிழைத்ததொரு சிங்காசனத்தில், ஓங்கி வைகினார்- (யாவரினும்) சிறந்து வீற்றிருந்தார்;(எ - று.) |