பக்கம் எண் :

146பாரதம்ஆரணிய பருவம்

செல்ல - காவலையுடையமதிலினிடையேயுள்ள கோபுரத்துவாரத்திற்
சென்றுசேர,-அங்குஅவன் தன்னைகண்ட-அவ்விடத்திலே அவனைப்
பார்த்த, அணி கழல் அமரர் எல்லாம் - (காலில்)தரித்த வீரக்கழலையுடைய
தேவர்களெல்லோரும், மங்குல் வாகனன் என்று எண்ணி-(அவனை)
மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனென்றே நினைத்து,கதுமென வந்து
தொக்கார் - விரைவிலே (அருகில்) வந்து கூடினார்கள்;(எ-று.)

     வடிவொப்பமையினாலும்,மாதலி தேரூர அவ்விந்திரன் தேர் மீது
செல்லுதலாலும் தேவர்கள் மங்குல்வாகனனென்று கருதினர்: இது,
மயக்கவணி. கங்கையம்பழனம், அம்-நீர்;இனி, கங்கை பாயப்பெற்ற
அழகிய கழனி யென்றுமாம்.  மங்கையர்-இளம்பருவமுடைய மகளிர்:
மங்கைப் பருவத்துக்கு வயதெல்லை,பன்னிரண்டு முதற் பதின்மூன்றளவும்.
வாய் - அதிலிருந்து வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்:மை - பகுதிப்
பொளுணர்த்தும் விகுதி.  முறுவல் - சிரிப்பு: தன்னைப்பிறர் இகழ்ந்தமை
காரணமாக உண்டாயிற்று. மணிக் குறுமுறுவல் செய்து - முத்துப்போலப்
புன்சிரிப்புச்செய்து என்றுமாம்;சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி
சிறிது வெளித் தோன்றுவதால்.  குருநாட்டின் எல்லை,கங்காநதி
வரையிலும்போலும்.  கடி - பலபொருளுணர்த்தும் உரிச்சொல்.  இல்வாய்
என்பது வாயில் என மாறியது: இலக்கணப் போலி.  இங்கே,
நகரத்துவாயில்.  அணி கழல் - அழகுசெய்யுங்கழலெனவுமாம். கழல் -
வீரர்காலணி: இந்திரனுக்கு மேகம் வாகனமென்பது, கவிமரபு.  கதுமென -
விரைவுக்குறிப்பு.                                          (200)

25.-தேவர்கள்வினாவ,அருச்சுனன் போர்க்கோலங்
கொண்டகாரணத்தை மாதலி கூறுதல்.

கார்க்கோலமேனியானைக்கண்டபினையநீங்கிப்
போர்க்கோல மிவனுக்கெவ்வா றிசைந்ததுபுகறியென்று
தேர்க்கோலஞ் செய்வான்றன்னைச்செப்பினரவனும்போற்றி
வார்க்கோலபுரத்துவைகு மவுணரைவதைத்தற்கென்றான்.

     (இ-ள்.)(அங்ஙனம்வந்து தொக்க தேவர்கள்),-கார்கோலம்
மேனியானை- காளமேகம்போன்ற அழகிய திருமேனிநிறத்தையுடைய
அருச்சுனனை,கண்ட பின் - (அருகிற்) பார்த்தபின்பு, ஐயம் நீங்கி -
(இந்திரனோஎன்று கீழ் நிகழ்ந்த) சந்தேகம் ஒழிந்து, 'இவனுக்கு-
இவ்வருச்சுனனுக்கு, போர் கோலம் - யுத்தத்திற்கு உரிய அலங்காரம், எ
ஆறு இசைந்தது-யாது காரணமாகப் பொருந்திற்று? புகறி - சொல்வாய்',
என்று-,தேர் கோலம் செய்வான்தன்னை- தேருக்கு உரிய
அலங்காரத்தைச் செய்பவனாகியமாதலியைநோக்கி, செப்பினர் -
வினாவினார்கள்;அவன்உம் - அந்த மாதலியும், போற்றி - (அருச்சுனனது
சிறப்பை யெடுத்துப்) புகழ்ந்து, வார் கோலம் புரத்து வைகும் அவுணரை
வதைத்தற்கு என்றான்-நீரிடையேயுள்ளஅழகிய தோயமாபுரத்தில்
வாழ்கின்ற