| தப்புரத்தர் சதமகன்றன்னைவென்று இப்புரத்தை யிவர்கவர்ந்தாரெனா. |
இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம். (இ-ள்.)செப்பு-(யாவராலுஞ் சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற, உரத்தினின்-வலிமையையுடைய, செம் சடை வானவன்-சிவந்த சடையையுடைய சிவபெருமான், மு புரத்தை-திரிபுரத்தை, முனிந்த அ நாளின்உம் - கோபித்து எரித்த அக்காலத்திலும், தப்பு-(தாம் எரியாமல்) தப்பிப் பிழைக்கும்படியான, உரத்தர் - வலிமையுடையவர்களாகிய, இவர்- இவ்வசுரர்கள், சதமகன் தன்னைவென்று-இந்திரனைச்சயித்து, இ புரத்தை- இந்தத் தோயமாபுரத்தை, கவர்ந்தார்-(அவனுடைய ஆளுகையினின்றும்) அபகரித்துத் தமதாக்கிக் கொண்டார்கள், எனா-என்று(அருச்சுனனுக்குச்) சொல்லி,-(எ-று.)-இக்கவியில்'எனா'என்பதும், மேற்கவியில் 'போக்கி' என்பதும், அதன் மேற்கவியிலுள்ள 'நடத்தினன்'என்னும் வினைமுற்றைக் கொண்டு முடியும். ஸ தமகன்-நூறு(அசுவமேத) யாகங்களைச்செய்து இந்திர பதவி பெறுதலால் வந்த பெயர்;சதம்-நூறு, மகம்-யாகம். (215) 40.-அருச்சுனனோடுபொரவருமாறு மாதலி அவ்வசுரரிடத்துச்சித்திரசேனனைத்தூதனுப்புதல். தீதிலாத்திறற் சித்திரசேனனைக் கோதிலாத குனிசிலைவீரற்கு மோதுபோர்தர மொய்ம்புடைவஞ்சர்பால் தூதுபோகெனப் போக்கித்தொலைவிலான். |
(இ-ள்.) தொலைவுஇலான் - (போருக்குத் தேர்செலுத்துவதாகிய தன்தொழிலிற் சிறிதுங்) குறைவுபடுதலில்லாத மாதலி,-தீது இலா திறல் சித்திரசேனனை- குற்றமில்லாத வலிமையையுடைய சித்திரசேனனென்னுங் கந்தருவனைநோக்கி,'கோதுஇலாத-குற்றமில்லாத, குனி சிலை- வளைந்த காண்டீவவில்லையுடையவீரற்கு-வீரனாகியஅருச்சுனனுக்கு, மோது போர் தர - தாக்கிச்செய்கின்ற யுத்தத்தைக் கொடுக்கும்படி, [அருச்சுனனுடனே எதிர்த்துவந்து போர்செய்தற்கு],மொய்ம்பு உடை வஞ்சர் பால் - வலிமையையுடைய வஞ்சகராகிய அசுரரிடத்து, தூது போகு-தூது செல்வாயாக,'என - என்றுசொல்லி, போக்கி - (அவனைமுன்னே) அனுப்பிவிட்டு,-(எ-று.) இனி,மொய்ம்பு உடை வஞ்சர் -(பகைவரது) வலிமையை உடைக்கின்ற [அழிக்கின்ற]மாயையையுடையவர் எனவுமாம்: பால்- ஏழனுருபு. சித்திரசேனனென்னுஞ் சொல்லுக்கு - பலவகைச் சேனையுடையவனென்று பொருளாம். இவன், விசுவாவசு என்னுங் கந்தருவனது குமாரன்: சங்கீத பரதங்களில் வல்லவன்: அருச்சுனனுக்குஇசைநாடகங்களைக்கற்பித்துக் கொடுத்தவன். (216) |