பக்கம் எண் :

156பாரதம்ஆரணிய பருவம்

41.-விண்ணிற்செல்லுந்தேரைப் பூமியில் மாதலி
செலுத்த, அருச்சுனன்நாணோசையெழுப்புதல்.

விண்ணின்மீது விரைவுறுந்தேரினை
மண்ணின்மீது நடத்தினன்மாதலி
அண்ணலுந்த னருஞ்சிலைநாணியின்
துண்ணெனோதைதொடரத்துரத்தினான்.

     (இ-ள்.)மாதலி - அந்த இந்திரன்சாரதி, விண்ணின்மீது விரைவு உறும்
தேரினை-ஆகாயத்திலேவேகமாகச் செல்லுதலைப்பொருந்திய இரதத்தை,
மண்ணின்மீது-பூமியின்மேலே, நடத்தினன்-(மந்தகதியாகச்) செலுத்தினான்:
அண்ணல்உம்- பெருந்தன்மையுடைய அருச்சுனனும்,-தன்அரு சிலை-
(பெறுதற்கு) அரிய தனதுவில்லினது, நாணியின்-நாணினது, துண்ணென்
ஓதை-(கேட்போர்க்கு) அச்சத்தை விளைக்கின்றஓசை, தொடர -
(சித்திரசேனனைத்தொடர்ந்து) செல்லும்படி, துரத்தினான்-(அவ்வோசையை)
விரைவிற் செலுத்தினான்;(எ-று.)

     வில்நாணியைக்கைவிரலால் தெறித்துப் பகைஞர் செவியிற்படும்படி
பேரோசையைவிளைத்தானென்பதாம்.  தொடரத் துரத்தினான்என்றதனால்
பின்னே புறப்பட்ட ஓசை முந்திச்சென்றமை பெறப்படும்: ஆனதுபற்றியே,
43-ஆங் கவியில் தூதர்க்குமுன் நாணோசைசெவிப்புகுந்தமை
கூறப்படுகின்றது.  விண்ணின்மீது, மீது - ஏழனுருபு.  அண்ணல் -
ஆண்பாற்சிறப்புப்பெயர். துண்ணெனல் - அச்சக்குறிப்பு.  துரத்து - துர
என்பதன் பிறவினை: து - பிறவினைவிகுதி.                   (217)

42.-தேரொலியோடுநாணொலிசேர்ந்துதிசையெங்கும்
பேரொலியாதல்.

தேரினார்ப்பொலியுஞ்சிறுநாணெனும்
காரினார்ப்பொலியுங்கலந்தெங்கணும்
பாருமேற்றிசை யும்பகிரண்டமும்
சேருநாற்றிசை யுஞ்செவிடாக்கவே.

             இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.)தேரின் - (அருச்சுனன் ஏறிவந்த) இரதத்தினது, ஆர்ப்பு
ஒலிஉம்-ஆரவாரமாகிய ஓசையும், சிறு நாண் எனும் காரின்-(அவன் கை
வில்லினது) சிறிய நாணியென்கிற மேகத்தினது, ஆர்ப்பு ஒலிஉம்-
(இடிபோன்ற) ஆரவாரமாகிய ஓசையும், பார்உம் - பூமியிலும், மேல்
திசைஉம்-ஆகாயத்திலும், சேரும் நால் திசைஉம்-பொருந்திய நான்கு
திக்குக்களிலும், பகிர் அண்டம்உம் - (ஆக இவ்வண்டத்தில்மாத்திரமே
யன்றி) வெளியண்டங்களிலும், எங்கண்உம்-எவ்விடத்தும், கலந்து -
சென்றுசேர்ந்து, செவிடு ஆக்க-(அங்கங்கேயுள்ள எல்லாப் பிராணிகளையும்
அதிர்ச்சி மிகுதி