செயும்-ஏவற்பன்மை. அனுசரும் அவுணரும் சிலைகுனியும்- முன்னிலையிற்படர்க்கைவந்தஇடவழுவமைதி. குனி - முதனிலைத் தொழிற்பெயர். தம்பியரென்று பொருளுள்ள அநுசரென்பது, இங்கு இளையோரைக்காட்டிற்று. (225) 50.-தமதுசெல்வநாடுகளைப்பகை கவரக்கொடுத்த வில்வீரனாஎம்மை எதிர்க்க வருபவ னென்று அவுணர் ஏளனமாக் கூறுதல். செங்கணாகக்கொடியவன்செல்வமும் தங்கணாடுங்கவரத்தரிப்பறப் பொங்குகானிற் புகுஞ்சிலைவீரனோ எங்களோடு மெதிர்க்கவந்தெய்தினான். |
இரண்டு கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) செம்கண் நாகம் கொடியவன் - (கோபத்தாற்) சிவந்த கண்களையுடையபாம்பின்வடிவத்தை யெழுதிய துவசத்தையுடைய துரியோதனன், தங்கள் நாடுஉம் செல்வம்உம் கவர - தங்களது தேசத்தையும் மற்றைச் செல்வங்களையும்பறித்துக்கொள்ள, தரிப்பு அற - நிற்பதற்கும் இடமில்லாமல், பொங்கு கானில் புகும்-(வெப்பம்) மிகுந்த காட்டிற் சென்ற, சிலைவீரன் ஓ - வில்வீரன்தானோ,எங்களோடுஉம் எதிர்க்க வந்து எய்தினான் - எங்களுடன் எதிர்த்துப் போர்செய்தற்கு வந்து சேர்ந்தான்? செங்கண்என்பதை-நாகத்துக்காயினும், கொடியவனுக்காயினும் இயைக்க. "நாகக்கொடியவன்" என்றது-அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும், நன்றியறிவின்மையையும், நா இரண்டுடைமையையும், வக்கிரகதியிற் செல்லுதலையும்குறிப்பிக்கு மென்றற்குப் போலும். நாகக்கொடியவன் - நாகம்போலக் கொடுந்தன்மையை யுடையவ னென்றுமாம். 'தங்கள்'என்றது, தருமன் முதலியோரையும் உளப்படுத்தி. தரிப்பு - தரிக்குமிடம்; தொழிலாகுபெயர்: தரித்தல் - தங்குதல். இங்கே 'வீரன்'என்றது, இகழ்ச்சி. (226) 51.-சேனைசூழப்பேராரவாரஞ்செய்துகொண்டு அவுணர் திரளுதல். என்றுகூறியிகலசுராதிபர் துன்றுசேனைக்குழாம்புடைசூழ்வரச் சென்றுகாந்தத்திரைக்கடலார்ப்பபோல் ஒன்றயாருமொருங்குசென்றுற்றனர். |
(இ-ள்.) என்றுகூறி-,இகல் அசுர அதிபர் - வலிமையையுடைய அசுரத் தலைவர்கள்,யார்உம் - எல்லோரும், துன்று சேனைகுழாம் புடை சூழ்வர - நெருங்கிய சேனைகளின்கூட்டம் பக்கங்களிற் சூழ்ந்து வரும்படி, உக அந்தம் திரை கடல் சென்று |