ஆர்ப்ப போல -யுகமுடிவு காலத்தில் அலைகளையுடையகடல்கள் பொங்கி வெளியெழுந்து ஆரவாரிப்பனபோல (ஆரவாரித்து), ஒன்ற - நெருங்க, ஒருங்கு - ஓரிடத்தில், சென்று உற்றனர்-வந்து கூடினார்கள்; (எ-று.) உகாந்தம்='யுகாந்தம்':என்றது, பிரளயத்தை. ஒன்ற-ஒருசேர என்றபடி, ஆர்ப்ப-பலவின்பால் வினையாலணையும்பெயர்;ஆர்ப்பது என்னுந் தொழிற்பெயரின் விகாரமாகவுமாம். (227) 52.-அசுரர்போருக்குப் புறப்படுதல். ஆனைதேர்பரியாளெனுநால்வகைத் தானையோடுமெழுந்தனர்தானவர் வானுமண்ணுந் திசையுமற்றெண்பெறும் ஏனைலோகமுமெங்குநடுங்கவே. |
(இ-ள்.)வான்உம் - தேவலோகமும், மண்உம் - பூலோகமும், திசைஉம் - திக்குக்களும், மற்று எண் பெறும் ஏனைலோகம்உம்-இன்னும் (இவற்றுடன் வைத்து) எண்ணப்பெறுகின்ற மற்றையுலகமாகிய பாதாளமும், எங்குஉம் - எல்லாவிடமும், நடுங்க-(அதிர்ச்சியால்) நடுக்க மடையும்படி, ஆனை-கஜம்,தேர்-ரதம், பரி-துரகம், ஆள்-பதாதி, எனும்-என்கின்ற, நால் வகை தானையோடுஉம்-சதுரங்கசைனியத்துடனே, தானவர்-அசுரர்கள், எழுந்தனர்-(போருக்குப்) புறப்பட்டார்கள்;(எ-று.) ஆனை-யானையென்பதன் மரூஉ;மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக் கூறினார்;கம்பரும் "கசரததுரகமாக்கடல்கொள் காவலன்" என இவ்வாறு கூறியிருத்தல் காண்க: இது, தமிழர்வழக்கு;வடநூலார், 'ரதகசதுரகபதாதி'என முறைப்படுத்திக் கூறுவர். (228) 53.-அப்போதுபலவகை வாச்சியங்க ளொலித்தல். சங்கும்பேரியுந் தாரையுஞ்சின்னமும் துங்கமாமுழ வுந்துடியீட்டமும் அங்கண்மாமுர சும்முகவந்தத்தில் பொங்கும்வேலையொலியிற்புலம்பவே. |
இதுமுதல் மூன்றுகவிகள் - குளகம். (இ-ள்)சங்குஉம் - சங்கங்களும், பேரிஉம் - பேரிகைகளும், தாரைஉம் சின்னம்உம் - தாரை திருச்சின்னம் என்னும் ஊதுகருவிகளும், துங்கம் மா முழவுஉம் - உயர்ந்த பெரிய மிருதங்கங்களும், துடி ஈட்டம்உம் - உடுக்கை முதலிய பறைகளின் கூட்டமும், அம் கண் மா முரசுஉம் - அழகிய அடிக்குமிடத்தையுடைய பெரிய முரசங்களும், (ஆகப் பலவகை வாத்தியங்கள்), உகம் அந்தத்தில் பொங்கும் வேலைஒலியின் - யுகமுடிவு காலத்திற் கிளர்ந்தெழு |