இந்த வாழ்வுடை- உனக்கு எதிரிற் காணப்படும் இவ்வுடலின் தோற்றத்தையுடைய என்றபடி. இது, தன்னைப்பிறன் போல் வைத்துக் கூறியது. அந்த-அசுரச்சுட்டு, பிரசித்தியைக் காட்டிற்று. அடிமை - அடியவனுக்குப் பண்பாகுபெயர். உந்தை - உன் தந்தை என்பதன் மரூஉ. (373) 37.-வீமன் அநுமானைவணங்குதல். என்றவாசகமிருசெவிக் கமுதெனக்கேட்டுத் துன்றுநெஞ்சினிலுவகையன் றுதித்தனன்றுள்ளி என்றும்யாமுயறவப்பய னிருந்தவாவென்னாச் சென்றிறைஞ்சினன்றிரைக்கடல் கடந்தசேவடிமேல். |
(இ - ள்.)என்ற வாசகம் - என்று (அனுமான்) சொன்ன வார்த்தை, இரு செவிக்கு அமுது என - (தனது) இரண்டு காதுகளுக்கும் அமிருதம்போலிருக்க, (வீமன்), கேட்டு-, நெஞ்சினில்துன்று உவகையன் - மனத்தில் மிக்குப்பொருந்தின மகிழ்ச்சியையுடையவனாய்,துதித்தனன் - (அவ்வனுமானைத்)தோத்திரஞ்செய்து, துள்ளி-ஆனந்தக் கூத்தாடி, 'என்றுஉம்யாம் முயல் தவம் பயன் இருந்த ஆ(று) என்னா-எப்பொழுதும் [பலகாலமாக]நாம் முயன்றுசெய்த நற்றவத்தின் பயன் இருந்தவிதம் (என்னே!)'என்று அதிசயித்துக்கூறி, சென்று - அருகிற்போய், திரை கடல் கடந்த சே அடிமேல் இறைஞ்சினன் - அலைகளையுடையகடலைத் தாண்டியிட்ட (அவ்வனுமானின்) சிவந்த திருவடிகளின்மேல் விழுந்து வணங்கினான்; (எ-று.) செவிக்கு அமுதுஎன - அமிருதம் நாவுக்கு இனிமை தருவது போல 'அவ்வனுமான்நானே'என்று சொன்னவார்த்தை காதுக்கு இனிமைசெய்ய. துள்ளுதல்-மகிழ்ச்சிபற்றிய மெய்ப்பாடு. பல பிறப்புக்களிற் பலகாலஞ்செய்த பெருந்தவமாகிய காரணம் இருந்தாலன்றி அனுமானுடைய தரிசனம் கிடைக்காதென்ற கருத்தால், வியந்தான். (374) 38.-'இங்குவந்தகாரணம் என்ன?'என்று வீமனை அநுமான் வினாவுதல். தம்பியைத்துணைத்தாழ்தடக்கைகளாலெடுத்து வம்புசேர்மணிமால்வரை மார்புறவணைத்துப் பம்புசெந்தழற்கானிடைப் பதமலர்சிவப்ப எம்பிநீதனிநடந்தவா றென்கொலென்றிசைத்தான். |
(இ - ள்.)தம்பியை - (அவ்வாறு வணங்கிய தன்) தம்பியாகிய வீமனை,(அனுமான்), தாழ் தட துணைகைகளால் எடுத்து-(முழங்காலளவும்) நீண்டு தொங்குகின்ற பெரிய (தனது) இரண்டு கைகளாலும் (அன்புடன்) எடுத்து, வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து- (வெற்றிப்பூமாலையணிந்திருந்தலால்) வாசனைபொருந்தின அழகிய பெரிய மலையோடொத்த(தனது) மார்பிலே |