பக்கம் எண் :

268பாரதம்ஆரணிய பருவம்

     (இ - ள்.)'இமையோர்உம்-இமையாக்கண்ணராகியதேவரும், தானவர்
தாம்உம் - அசுரர்களும், யான் உறை கானகம் என்று - நான் வசிக்கின்ற
காடு என்ற காரணத்தினால்,இதற்குஇடை - இந்தக் காட்டினிடத்தில், சாரார்
- சேரமாட்டார்கள்:(அப்படியிருக்க), மானுடன் நீ-மனிதனாகியநீ, இவண் -
இந்தக் காட்டினிடத்தே, வந்தது-,-சுவைஆம்-உருசிபொருந்திய, ஊன்-
மாமிசத்தை, இடஓ - (எனக்குக்) கொடுப்பதற்குத்தானோ?:இஃது -
இந்தக்காரணத்தை, உரைத்திடுக - சொல்வாயாக,'என்றான்-
என்றுகூறினான்;(எ - று)-உரைத்திடுகென்றான்-தொகுத்தல்.        (411)

75.-உன்னுயிரையுண்ணவே வந்தேனென்று வீமன்
மாறு கூறுதல்.

வென்றியரக்கன் விளம்புதல்கேளாக்
குன்றனதோள்கள் குலுங்கநகைத்தாங்கு
உன்றனதாவியு முண்டிடவந்தேன்
என்றனன்முன்ன மிடிம்பனைவென்றோன்.

     (இ-ள்.)வென்றி அரக்கன்-வெற்றிபொருந்திய ராட்சதனாகிய
புண்டரீகன், விளம்புதல் - கூறியதை, கேளா - கேட்டு,-குன்று அன
தோள்கள் குலுங்க நகைத்து - மலையையொத்ததோள்கள் அசையும்படி
சிரித்து,-ஆங்கு - அப்போது, 'உன்தனது ஆவி உம் உண்டிடவந்தேன் -
உன்னுடைய உயிரையும் உண்ணும் பொருட்டு வந்துள்ளேன்,'என்றனன் -
என்று கூறினான்:(யாவனென்னில்),-முன்னம் இடிம்பனைவென்றோன்-
முன்பு இடிம்பாசுரனைவென்று ஒழித்தவனாகியவீமசேனன்;(எ - று.)

     ஆவியும் என்பது- எச்சவும்மை:உன்வலியையொழிப்பதன்றி
ஆவியையும் உண்ண என்க:இனி, எச்சப்பொருளோடு உயர்வு
சிறப்புப்பொருளது என்றுகொண்டு, முன்னம் இடிம்பனாவியையுண்டதன்றி
உன்னாவியையும்என்று பொருள்காணினுமாம்.                 (412)

76.-இரண்டுகவிகள்-வீமன் புண்டரீகன் என்ற இருவரும்
பொருதமை கூறும்.

மற்றதுகூற மறத்தொடரக்கன்
உற்றெதிரோடி யுறுக்கியபோதக்
கொற்றவனுங்கதை கொண்டுடன்மண்டிப்
பற்றினன்வந்தவ னாவிபறிப்பான்.

     (இ - ள்.) அதுகூற - அவ்வார்த்தையை (வீமசேனன்) சொல்ல,-மற்று
- பின்பு, அரக்கன் - புண்டரீகனென்ற ராட்சதன், மறத்தொடு -
வலிமையோடு, உற்று - பொருந்தி, எதிர் ஓடி - (வீமனுக்கு) எதிரே போய்,-
உறுக்கிய போது-கோபித்த சமயத்தில்,- அ கொற்றவன்உம் -
வெற்றிபொருந்திய அந்த வீமனும்,-கதை கொண்டு - கதாயுதத்தைக் (கையிற்)
கொண்டு, வந்தவன் ஆவி பறிப்பான் - எதிர்வந்தவனான
புண்டரீகனென்பானுடைய உயிரைக்