பக்கம் எண் :

புட்பயாத்திரைச்சருக்கம்269

கவரும்பொருட்டு,உடன் மண்டி - சேர நெருங்கி, பற்றினன் - (போரில்)
மூண்டான்;(எ - று.)-மற்று-வினைமாற்றுமாம்.                 (413)

77.குன்றொடுகுன்றமர்கூடுவதேபோல்
நின்றுநெடும்பொழு தாகமலைந்தும்
வன்றிறலுந்தம வாகுவின்வலியும்
ஒன்றுமிளைத்திலரொத்தவுரத்தார்.

     (இ - ள்.)குன்றொடுஒருமலையுடனே,குன்று - மற்றொருமலை,
அமர் கூடுவது ஏ போல்-போருக்குப் பொருந்துவது போல,-நின்று நெடும்
பொழுது ஆக மலைந்துஉம்- நிலையாகப்பொருந்தி நெடுநேரமாகப்
போர்செய்தும்,-ஒத்த உரத்தார்-சமமான வலிமையையுடையரான
அவ்விருவரும், வல் திறல்உம் - கொடியவலியும், தம வாகுவின் வலிஉம்-
தம்முடைய தோள் வலியும், ஒன்றுஉம் இளைத்திலர்-சிறிதும்
இளைத்தாரில்லை;(எ - று.)

     தம் -ஆறனுருபுஏற்ற பெயர்.                        (414)

78.-அப்போதுஅசரீரி சொல்லலுறல்.

எல்லையிலாவமரிங்கிவரிவ்வாறு
ஒல்லையின்மோதியுடன்றிடுபோழ்தில்
தொல்லையிலோர்முனிசொல்லியசாபம்
மல்லலரூபி வழங்கியதன்றே.

     (இ - ள்.)இங்கு - இவ்விடத்து, இவர் - வீமனும் புண்டரீகனென்ற
அரக்கனும், இவ்வாறு-இவ்வகையாக, எல்லைஇலா அமர்-முடிவில்லாத
போரை, ஒல்லையின்- விரைவாக, மோதி - தாக்கி, உடன்றிடு போழ்தில் -
பொருகின்ற சமயத்தில்,-தொல்லையில்- முற்காலத்தில், ஓர்முனி -
ஒருமுனிவன், சொல்லிய-, சாபம் - சாபத்தை, மல்லல் - வலிமைபொருந்திய,
அரூபி - அசரீரியானது, வழங்கியது - சொல்லிற்று;(எ - று.)-அன்றே-
ஈற்றசை.

    அசரீரிசொல்வது தவறாதாதலால் 'மல்லலரூபி'எனப்பட்டது.
அரூபி - ரூபமற்றது:அசரீரியென்றபடி.                        (415)

79.-அசரீரிசொல்லிய வார்த்தை.

ஒன்றினுமாவி யுனக்கிவனொல்கான்
துன்றிடுதோண்மிசை தோமரமேவிக்
கொன்றிடுவாயினி வாயுகுமாரா
என்றதுவானி னிடத்தசரீரி.

     (இ - ள்.)வானினிடத்து - ஆகாயத்தினிடத்தே, அசரீரி-அசரீரியானது,
'இவன்- இந்த அரக்கன், ஒன்றின்உம் - வேறு எந்த வகையினாலும்,
உனக்கு-உன்னால்,ஆவி ஒல்கான்-உயிரொழியான்:இனி-, துன்றிடு-
நெருங்கிய, தோள்மிசை  - தோள்மீது, தோமரம்-தோமரத்தை, ஏவி -
செலுத்தி, வாயுகுமாரா-! கொன்றிடுவாய் - கொல்வாய்,'என்றது-என்று
கூறிற்று;(எ - று.)