கொண்டுஇருபக்கத்திலும்நின்று திருப்பாற்கடலைக்கடைந்தருளின ரென்க. இவ்வரக்கர் அங்கு அசுரர்க்கு உதவியாய்க் கடைந்தன ரென்ப. பின் இரண்டடியால், இக்காவலாளரின் நீண்டஆயுளுடைமையும், மிக்க வலியுடைமையும் உணர்த்தப்பட்டன. நீர்-நீர் வடிவமான[திரவரூபமான] பால். (423) 87. | மறத்தொடுவஞ்சமான நண்பெனவளர்த்துநாளும் அறத்தொடுபகைக்குநெஞ்சர் பிலத்தினுமகன்றவாயர் புறத்தினின்முகத்தர்மார்பிற் புழைமுழைமூக்கரின்ன திறத்தினர்குஞ்சிச்செந்தீச் சிரத்தினர்வரத்தின்மிக்கோர். |
(இ-ள்.)மறத்தொடு - பாவத்துடனே, வஞ்சம்-வஞ்சனையையும், மானம் - அகங்காரத்தையும், நண்பு என - (தமக்குச்) சினேகமாக, வளர்த்து - விருத்திசெய்து, நாள்உம்-தினந்தோறும், அறத்தொடு பகைக்கும்- தருமத்துடனே மாறுகொள்கின்ற, நெஞ்சர்-மனத்தையுடையவர்களும், பிலத்தின்உம் அகன்ற வாயர் - பெருங்குகையைக்காட்டிலும் விசாலமான வாயையுடையவர்களும், புறத்தினில் முகத்தர்-முதுகிலே முகத்தையுடையவர்களும், மார்பில் புழை முழை மூக்கர் - மார்பிலே பெருந்துளையையுடையமலைக்குகைபோன்ற மூக்கையுடையவர்களும், இன்ன திறத்தினர் - இவை போன்ற பலவகை விகாரங்களை யுடையவர்களும், குஞ்சி செம் தீ சிரத்தினர்-தலைமயிர்முடியாகியசிவந்த நெருப்பைத் தலையிலுடையவர்களும்,வரத்தின் மிக்கோர்-சிறந்தவரங்களால் மிகுந்தவர்களும்; மறத்தொடுவஞ்சம் மானம் நண்பென வளர்த்து என்பதற்கு- அதருமத்தைத் தமக்குப் பெருமையாகவும் வஞ்சனையைத்தமக்குச் சினேகமாகவும் வளர்த்து என முறைநிரனிறைப்பொருள்கோளாக்கியு முரைக்கலாம். ஆன நண்பு என எடுத்து - தக்கதுணையெனினுமாம். பிலம் - பாதாளவழியுமாம். மார்பில் மூக்கர் என்க. குஞ்சி-ஆண்மயிர். (424) 88. | கரங்களாயிரத்தர்நண்ணுங் கால்களாயிரத்தர்குஞ்சிச் சிரங்களாயிரத்தர்பூழைச் செவிகளாயிரத்தர்வென்றி உரங்களாயிரத்தரூழி தவமுயன்றுரிமைபெற்ற வரங்களாயிரத்தர்மிக்க மறைகளாயிரத்தர்மன்னோ. |
(இ-ள்.)கரங்கள் ஆயிரத்தர் - ஆயிரங்கைகளையுடையவரும், நண்ணும் கால்கள் ஆயிரத்தர்-பொருந்தின ஆயிரங்கால்களையுடையவரும், குஞ்சி சிரங்கள் ஆயிரத்தர் - மயிர்முடியையுடைய ஆயிரந்தலைகளையுடையவரும், பூழை செவிகள் ஆயிரத்தர்- பெருந்துளையையுடையஆயிரங்காதுகளையுடையவரும், வென்றி உரங்கள் ஆயிரத்தர் - சயத்தைவிளக்குகின்ற ஆயிரம்மார்புகளையுடையவரும், ஊழி தவம் முயன்று-நெடுங்காலந் தவத்தை முனைந்துசெய்து,உரிமை பெற்ற- (தமக்கு) உரியவனாக அடைந்த, வரங்கள் ஆயிரத்தர்-ஆயிரம்வரங்களை யுடையவரும், மிக்க மறைகள் ஆயிரத்தர் - பயன் |