பக்கம் எண் :

276பாரதம்ஆரணிய பருவம்

மிகுந்தஆயிரம்மந்திரங்களையுடையவரும்,-(எ-று.)-மன்,ஓ - ஈற்றசை.

     இங்கே ஆயிரம்என்றது - மிகப் பலவென்னும் பொருளையுணர்த்தும்.
பூழை-புழையென்பதன் நீட்டல்.  வென்றி உரங்கள் ஆயிரத்தர் -
வெற்றியைத்தரும் பலவகை வலிமைகளையுடையார் எனவுமாம்.  ஊழி-
யுகம் கற்பம் முதலிய காலத்தின் பேரெல்லையைக்குறிக்கும்.        (425)

89.-அப்போதுஅக்காவலாளர் மானுடநாற்றத்தை
யறிந்துதிரளுதல்.

வைத்தாரைவாளம்வில்வேன் மழுவெழுதிகிரிசூலங்
கைத்தாரைபடக்கொண்டென்றுங் கண்ணிமையாதுகாப்போர்
மைத்தாரைமாரியெப்பார் மானுடநாற்றங்கேட்டு
மொய்த்தாரக்கடவுள்வாச மொய்ம்மலர்ச்சோலையெல்லாம்.

     (இ-ள்.)வை-கூர்மையாகிய, தாரை-நுனியையுடைய, வாளம்-
வாளாயுதத்தையும், வில் - வில்லையும்,வேல் - வேலையும்,மழு-
மழுவையும், எழு வளை தடியையும், திகிரி-சக்கரத்தையும், சூலம்-
சூலத்தையும், கை-(தமது) கைகளிலே, தாரை பட - ஒழுங்கு பொருந்த,
கொண்டு-ஏந்திக்கொண்டு, என்றுஉம்-எப்பொழுதும், கண் இமையாது
காப்போர் - விழித்தகண் மூடாமற் காவல் செய்பவர்களும், தாரை மை மாரி
ஒப்பார் - நீர்ப்பெருக்கை யுடைய கரியமேகத்தை (நிறத்தில்) ஒப்பவர்களும்
(ஆகிய அரக்கர்கள்), மானுடன் நாற்றம் கேட்டு-மனிதனது கந்தத்தையறிந்து,
அ கடவுள் வாசம் மொய் மலர் சோலைஎல்லாம் - தெய்வத்தன்மையுள்ள
பரிமளமுடைய அடர்ந்த பூக்களையுடையஅந்தச்சோலையினிடம்
முழுவதிலும், மொய்த்தார்-சூழ்ந்து நெருங்கினார்கள்;    (எ-று.)

     மனிதகந்தத்தை மோந்து உணருந்தன்மையர் அரக்கரென்க.  நாற்றங்
கேட்டு என மூக்கின் வினையைச்செவியின் வினையாகக்கூறியது, ஓர்
மரபுவழுவமைதி;புலன்மாறிவந்த வழக்கு எனப்படும்: "நாற்றங்கேட்டலுந்
தின்ன நயப்பது"என்றார்கம்பரும்.  கடவுள் வாசம் - மற்றை
மலர்களெல்லாவற்றினுஞ் சிறந்திருக்கும் பரிமளம்.  கடவுட்சோலையென்றும்
இயைக்கலாம்.  மழு - பரசு என்னும் படை.                     (426)

90.-பொழிற்காவலாளர்வீமனைக்காணுதல்.

மண்டியெங்கெங்குமேன்மேன் மறிகடன்முகக்குநீலக்
கொண்டலிற்குமுறியார்த்துக் குறுகியகொடியநீசர்
சண்டவேகத்தினெய்துஞ் சதாகதிதனயன்றன்னைக்
கண்டனர்சூலபாச காலனைக்கண்டதன்னார்.

     (இ-ள்.) எங்குஎங்குஉம்-(அச்சோலையின்)எல்லாவிடங்களிலும்,
மண்டி - நெருங்கி, மேல் மேல்-வரவர, மறி கடல் முகக்கும்