97. | தண்டினாலவர்கள்விட்டபடையெலாந்தகர்த்துமீள மண்டினானுழுவைகண்டவாளுகிர்மடங்கலொப்பான் மிண்டினாருடலம்யாவுமெய்தலைதம்மினொன்றக் கிண்டினான்மூளைச்சேற்றிற்கிடத்தினான்படுத்துமன்னோ. |
(இ-ள்.)உழுவைகண்ட-புலிகளை(த்தன்னைச்சூழ்ந்துநெருங்கிப் போர்செய்ய)ப் பார்த்த, வாள் உகிர் மடங்கல்-வாளாயுதம் போலக் கூர்மையான நகங்களையுடையசிங்கத்தை, ஒப்பான் - போல்பவனாகிய வீமன்,-தண்டினால்-(தனது)கதாயுதத்தாலே,அவர்கள் விட்ட படைஎலாம் தகர்த்து - அவ்வரக்கர்கள் வீசின ஆயுதங்களையெல்லாம்உடைத்திட்டு, மீள மண்டினான்-மறுபடிமிகநெருங்கினவனாய்,மிண்டினார்உடலம் யாஉம் - (தன்னை)நெருங்கிச் சூழ்ந்த அரக்கர்களின் உடம்புகளையெல்லாம்,மெய் தலைதம்மின்ஒன்ற-உடம்பும் தலையும்(கீழே விழுந்து) தமக்குட்சேரும்படி, கிண்டினான்கீண்டெருத்து, மூளை சேற்றில் படுத்து கிடத்தினான் - (அவர்களின்) மூளைகளாகிறசேற்றிலே தள்ளி விழுந்து கிடக்கச் செய்தான்; தண்டு -தண்டம்;வடசொல் விகாரம். பலத்திற்குறைந்த அரக்கர்க்குப் புலிகளும், ஆற்றலில் மிக்க வீமனுக்குச் சிங்கமும் உவமையாம். மூளையென்றது, தலையினின்றுவழிந்த ஒருவகை நிணத்தை. மன், ஓ - ஈற்றசைகள். (434) 98. | தாக்கினான்சிலரைத்தண்டாற்றடக்கையாற்சிலரைவானில் தூக்கினான்கறங்கினின்றுசுழற்றினான்சிலரையெற்றி நூக்கினான்சிலரைத்தாளானொறுக்கினான்சிலரைவாளால் வீக்கினான்சிலரையாவிவேறிட்டான்சிலரைவீமன். |
(இ-ள்.)வீமன்-,சிலரை - சில அரக்கர்களை,தண்டால் - (தனது) கதையினால்,தாக்கினான்- மோதியடித்தான்;சிலரை-,தட கையால் - பெரிய (தனது) கைகளால், வானில் தூக்கினான்- ஆகாயத்தையணுகத் தூக்கிப்பிடித்தான்; சிலரை-,நின்று - (தான்) நிலைநின்று,கறங்கின் சுழற்றினான்- காற்றாடிபோலச்சுழலச்செய்தான்;சிலரை-,எற்றி நூக்கினான்- (கையால்) அடித்துத் தள்ளினான்;சிலரை-,தாளால் நொறுக்கினான்- காலால் மிதித்துத் துவைத்தான்;சிலரை-,வாளால் வீக்கினான் - வாளாயுதத்தினால்வெட்டினான்;சிலரை-,ஆவி வேறு இட்டான் - (உடம்பினின்றும்) உயிர் வேறாம்படிசெய்தான்;(எ-று.) (435) 99. | பிடித்தனன்சிலரையள்ளிப் பிசைந்தனன்சிலரைமண்ணில் அடித்தனன்சிலரையங்க மகைத்தனன்சிலரையெண்ணம் முடித்தனன்சிலரைப்போக முகிழ்த்தனன்சிலரைக்கண்டம் ஒடித்தனன்சிலரையஞ்ச வுறுக்கினன்சிலரைமன்னோ. |
(இ-ள்.)(வீமன்), சிலரை-,பிடித்தனன் - (தன்கையால் ஒரு பிடியாகப்) பிடித்தான்;சிலரை-,அள்ளி பிசைந்தனன் - ஒருங்கு எடுத்துப் பிசைந்தான், சிலரை-, மண்ணில் அடித்தனன்-நிலத்தில் மோதினான்;சிலரை - அங்கம் அகைத்தனன்-அவயவங்களைஒடித் |