றேவி, அறத்தினதுருவாயகண்டமும்புரக்கு மரசனாங்கிருந்துழிவந்து, புறத்தொருநிருதன்புகுந்தவஞ்சனையும்புரிந்ததும்புகலலாமளவோ. | (இ-ள்.)அறத்தினது உரு ஆய் - தருமதேவதையினது சொரூபமாய், அகண்டம்உம் புரக்கும் - உலகமுழுவதையுங் காக்கவல்ல, அரசன் - யுதிட்டிரராசன், தொழுது-வணங்கி, மறத்துடன் முன் நின்ற வாயுவின் மதலையைநோக்கி - (தன்னைக்)கைகூப்பி நமஸ்கரித்துப் பராக்கிரமத்துடனே எதிரிலேநின்ற வாயுகுமாரனானவீமனைப்பார்த்து, ஐய நீ சென்று திறம்தகு முனிவர் இடுக்கண் தீர்த்திடுக என்றுஏவி -'ஐயனே! நீ போய்ப் பெருமை பொருந்தின முனிவர்களது துன்பத்தைத் தீர்த்திடுவாய்' என்று நியமித்து (அவனையனுப்பிவிட்டு), ஆங்கு இருந்த உழி - அவ்வனத்திலே வசித்திருந்த பொழுது,-புறத்துஒரு நிருதன் வந்து புகுந்த - வெளியிலிருந்து ஓரரக்கன் வந்து பிரவேசித்த, வஞ்சனையும்-,புரிந்ததுஉம் - (அவன்) செய்தசெயலும், புகலல்ஆம் அளவுஓ-(நம்மாற்) சொல்லுதற்குக்கூடின அளவையுடையதோ? [அன்றென்றபடி];- ஆயினுஞ்சிறிதுசொல்லுவே னெனக் கவி ஒருவாறு அவையடக்கங் கூறியவாறாம். (480) 5.-இரண்டுகவிகள்- சடாசுரன் வருணனை. தோளிரண்டினுநாடொறுமிரண்டந்தண் சுரும்பிணை விரும்பினன்சுமந்து, தாளிரண்டுடையதொருகருங்குன்றஞ் சரிப்பபோலகண்ட முஞ்சரிப்பான், கோளிரண்டஞ்சிப்பிறையிரண்டகல்வான் குகை யிடைப்புகுவதேபோல, வாளிரண்டன்னவெயிறிரண்டொளிகூர் வாணிலாவழங்கியவாயான். |
இதுமுதல் மூன்றுகவிகள்-குளகம். (இ-ள்.)நாள்தொறும்-தினந்தோறும், தோள் இரண்டின்உம் - (தனது) தோள்களிரண்டிலும், இணைஅம் தண் இரண்டு சுரும்பு-(ஒன்றோடொன்று) ஒத்த அழகிய குளிர்ந்த இரண்டு மலைகளை,விரும்பினன் சுமந்து - விருப்பத்தோடு எடுத்து, தாள் இரண்டு உடையது ஒரு கரு குன்றம் சரிப்பதுபோல்-இரண்டுகால்களையுடையஒரு கரிய [பெரிய]மலை சஞ்சரிப்பது போல, அகண்டம்உம் சரிப்பான்-உலகமுழுவதிலுஞ் சஞ்சரிக்குந் தன்மையுள்ளவனும், கோள் இரண்டு அஞ்சி-(ராகுகேதுக்களென்னும்) இரண்டு கிரகங்களுக்குப் பயந்து, பிறை இரண்டு-இரண்டு பிறைச்சந்திரர், அகல் வான் குகையிடை புகுவதுபோல-பரந்த ஆகாயத்திலளாவியதொரு மலைக்குகையினிடத்தேபிரவேசிப்பதுபோல, வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு - இரண்டு வாளாயுதத்தைப் போன்ற [கூர்மையையுடைய] கோரதந்தங்கள் இரண்டு, ஒளி கூர் வாள் நிலா வழங்கிய - பிரகாசம்மிக்க ஒள்ளிய சந்திரகாந்தி போன்ற வெண்ணிறக் காந்தியை வீசுதற்கிடமான, வாயான் - வாயையுடையவனும்,-(எ-று.)-சரிப்பான்,வாயான் என்பவை - |