பக்கம் எண் :

சடாசுரன்வதைச்சருக்கம்315

பொருளில் வருதலை"சிகைகடந்தவூடலில்"என்று பரிபாடலிலுங்
காணலாம்.  ஒருபொருளைஒருத்தன் விலைக்குக்கொடுக்கும் போது
அவர்கொள்ளும் அளவு பண்டம் கொடுத்தபின் மற்றும் சிறிது கொடுப்பது
உண்டு.  அது பிசிர் என்று வழங்கப்படும்.  சிகை என்பது இங்கு
அப்பொருளில் வந்ததென்னலாம்.  இனி, ஒருசாரார் கொழுந்து என்று
பொருள் கூறுவர்:அன்றி, அனற்கொழுந்து [அக்கினிச்சுவாலை]:இங்கே,
நுனி யெனினுமாம்.  இனி, சிகை உனது-சடைமுடியையுடைய உன்னுடைய
என்றுமாம்.                                            (488)

13.-எட்டுக்கவிகள்- இருவர்க்கும் போர்நிகழ, வீமன்
சடாசுரனையழித்தமை கூறும்.

நெடும்பணைப்பொருவின்மராமரமொன்று
                     நெறியிடைநேர்ந்ததங் கதனைப்,
பிடுங்கினன்விசும்பிலெறிந்தவன்றன்னைப்பிளந்தனன்பிளந்
                                  தவப்பொழுதில்,
அடும்படைத்தடக்கையரக்கனுந்திருகி யணங்கை
                             விட்டக்கணத்தழன்று,
படும்பணைக்குன்றமொன்றுவேரோடும்பறித்த
                          வன்மேற்படவெறிந்தான்.

     (இ-ள்.) நெடுபணைபொருவு இல் மராமரம் ஒன்று-நீண்ட
கிளைகளையுடையஒப்பில்லாத ஒரு ஆச்சாமரம், நெறியிடை நேர்ந்தது-
வழியிலே யெதிர்ப்பட்டதாக, அங்கு அதனைபிடுங்கினன்-
அவ்விடத்திலுள்ள அம்மரத்தை (வீமன் வேரோடு) பறித்தெடுத்து, விசும்பில்
எறிந்து - ஆகாயத்தில் வீசி, அவன்தன்னைபிளந்தனன் - அச்சடாசுரனை
(உடம்புபிளக்க) அடித்தான்:பிளந்த அ பொழுதில்-அங்ஙனம் அடித்த
அந்தப்பொழுதிலே, அடும் படை தட கை அரக்கன்உம் - கொல்லுந்
தன்மையுள்ள ஆயுதத்தையேந்தவல்ல பெரிய கைகளையுடைய
அவ்விராக்கதனும், திருகி-மனம் மாறுபட்டு, அணங்கை விட்டு -
திரௌபதியைக்கீழேவிட்டு, அ கணத்து - அந்த க்ஷணத்திலே, அழன்று -
கோபங்கொண்டு, படும் பணைகுன்றம் ஒன்று வேரோடுஉம் பறித்து-
(எதிரில்) நேர்ந்த பெரிய மலையொன்றைஅடியோடு பிடுங்கியெடுத்து,
அவன் மேல் பட எறிந்தான்-அவ்வீமன்மேற் படும்படி
அதனைவீசினான்;(எ-று.)

     அணங்கு -பெண்களிற் சிறந்தவள், நேர்ந்தது-முற்றெச்சம்.   (489)

14.விட்டகுன்றினைத்தன்மேற்படாவண்ணம்விசும்பிடைப்
                          பொடிபடக்கதையால்,
தொட்டனன்பின்னும் விசும்பினின்றவன்றன்
                   றோளிணையொசிதரத்தாவிக்,
கட்டினன்குறங்கைக்குறங்கினால்வீசிக்
                    கம்பமுற்றகிலமுங்கலங்கக்,
கிட்டினன்றலத்தின் மிசையடலரக்கன்
                   கீழ்ப்படமேற்படவிழுந்தான்.

     (இ-ள்.)விட்ட குன்றினை-(சடாசுரன்)வீசியெறிந்த அந்தமலையை,
தன்மேல் படா வண்ணம் - தன்மேலே படாதபடி, விசும்பிடை பொடி பட-
ஆகாயமார்க்கத்திலே பொடியாய் விடுமாறு, (வீமசேனன்), கதையால்
தொட்டனன் - கதாயுதத்தால் தாக்கி, பின்உம்-அதன்பின்பு,
விசும்பில்நின்றவன் தன்தோள் இணைஒசி தர தாவி - ஆகாயத்தில்நின்ற
அவ்வரக்கனது இரண்டு தோள்களும்