பக்கம் எண் :

320பாரதம்ஆரணிய பருவம்

வீழ்ந்து -விழுந்து,-செறிந்த பேர் உடல்உம் ஆவிஉம் சிந்த - (பலகாலமாய்
ஒன்றோடொன்று)கூடியிருந்த பெரிய (தனது) உடம்பும் உயிரும் (தனித்தனி)
சிதறுமாறு, இமைப்பினில் - மாத்திரைப்பொழுதினுள்ளே, தென் புலத்து -
தென்திசையிலுள்ள யமலோகத்துக்கு, சென்றான்- போனான்:அறம்   துறந்து
- தருமத்தைவிட்டு, என்றுஉம் - எப்பொழுதும், அடாதன செய்தால்-தகாத
காரியங்களைப்பண்ணினால்,படாதன படாதார் - அனுபவிக்கமுடியாத
தீங்குகளைஅடையாதவர், ஆர்கொல்ஓ - யாவரோ?

     அடாதுசெய்பவர்படாதுபடுவர் என்பது கருத்து.  இக்கவிவேற்றுப்
பொருள்வைப்பணி.  மறிந்த-மேல்கீழாகவீழ்ந்த என்றுமாம்.

வேறு.

21.-சடாசுரனிடத்தினின்று தப்பின திரௌபதியின்
வருணனை.

வாளரவமுண்டுமிழும் வாண்மதியும் வஞ்சக்
கோளுழுவைகொள்ளவிடர் கொண்டுகுலைகுலையா
நாள்வலியி னுய்ந்தமட நவ்வியுநி கர்த்தாள்
காளவிடமுண்டமுத டக்குமிரு கண்ணாள்.

     (இ - ள்.)(இங்ஙனம் சடாசுரனால்நேர்ந்த ஆபத்தினின்று தப்பின),
காள விடம் உண்டு அமுது அடக்கும் இரு கண்ணாள்-
கரியவிஷத்தையுட்கொண்டு அமிருதத்தையும் தன்னுளடக்கிய
இரண்டுகண்களையுடையதிரௌபதி,-வாள் அரவம் உண்டு உமிழும் வாள்
மதிஉம் - வாள்போலுங்கொடிய பாம்பினாலுட்கொண்டுஉமிழப்பட்ட
ஒளியையுடைய சந்திரமண்டலத்தையும், வஞ்சம்கோள் உழுவை கொள்ள -
வஞ்சனையோடுகொல்லுந் தன்மையுடைய புலி (தன்னைக்)
கவர்ந்துகொள்ளுதலால், இடர் கொண்டு குலைகுலையா-
துன்பத்தையடைந்து நடுநடுங்கி, நாள் வலியின் உய்ந்த மடம் நவ்விஉம் -
(முன்னையஊழ்வினையாலாகிய)ஆயுள் வலிமையினால்தப்பிப்பிழைத்த
இளமையான பெண்மானையும்,நிகர்த்தாள் - ஒத்தாள்;(எ - று.)

     அரவமும்உழுவையும் அரக்கனுக்கும்;மதியும் நவ்வியும்
திரௌபதிக்கும் உவமை.  காலவிசேஷங்களில் சூரியனைமறைக்கின்ற
சந்திரனது சாயையும், சந்திரனைமறைக்கின்றபூமியினது சாயையும் ஆகிய
சாயாகிருகங்களைஇராகுகேதுவென்னுங் கரும் பாம்புசெம்பாம்புகளாக
வருணித்தல் கவிமரபு.  கோள் - உயிர் கொள்ளுந்தன்மை;முதனிலைதிரிந்த
தொழிற்பெயர்.  விடமுண்டு அமுதடங்குங் கண் என்றது -
ககவிழியின்கருமையையும் சுற்றுப்புறத்தின் வெண்ணிறத்தையும் பற்றி;இனி,
கூடாதகாலத்துக் காமநோய் வருத்தத்தையும், கூடியகாலத்து மிக்க
மகிழ்வையுந் தருதல்பற்றி யாகவுமாம்;"மாண்பில்நஞ்சு மமிர்தமுமே
போல்குணந்த பொரு கயற்கண்,""அமிழ்தினின்விளர்த்துள் நஞ்சினிற்
கருகி"என்றார்சிந்தாமணியிலும், நைடதத்திலும்