(இ-ள்.)இடிம்பனைஅடும் திறலில் மிக்கான்-இடிம்பாசுரனைக் கொன்ற வலிமையிலே மிகுந்தவனானவீமன்,-என்றுஇனையவாசகம் உரைத்து-என்று இப்படிப்பட்ட வார்த்தைகளைக்கூறி, இகலின் என்றுஉம் வென்றி தரு தண்டு சிலைகொன்டு-போரிலே எப்பொழுதுஞ் சயத்தையே கொடுக்கின்ற (தனது) கதாயுதத்தையும் வில்லையும்ஏந்திக்கொண்டு, தன் துணைவர்ஒன்றுஉம் உணராதபடி - தனது உடன்பிறந்தவர்கள் சிறிதும் அறியாதபடி, விறலோடுஉம் - பராக்கிரமத்துடனே, தான்ஏ சென்றனன் - தான் மாத்திரமே புறப்பட்டுப்போனான்;(எ-று.) இகலின்,இன்-ஏழனுருபு. தானே, ஏ-பிரிநிலை. அடும் என்னும் எதிர்காலப்பெயரெச்சம், இங்குக் காலங்குறியாமல் தன்மை குறித்து நின்றது. (508) 7.-இதுமுதல்ஆறுகவிகள் - ஒருதொடர்: சென்ற வீமன் இரத்தினகிரியடைந்துஅதன்புதுமைகளைக்கண்டு களித்தமை கூறுதல். குன்றமொரிரண்டவை யெனக்குலவுதோளான் மன்றன்மலர்கொண்டுவரு மாநதியின்வழியே சென்றுபலயோசனைகடிங்களொடுநாளும் என்றும்வலம்வந்தரு ளிரத்நகிரியெய்தி. |
(இ-ள்.)குன்றம் ஒர் இரண்டு அவை என குலவு தோளான்-ஒப்பற்ற இரண்டுமலைகளென்னும்படி விளங்குகின்ற தோள்களையுடையனான வீமன்-,மன்றல் மலர் கொண்டு வரும் மா நதியின் வழியே - பரிமளத்தையுடைய அப்பூவை அடித்துக்கொண்டுவந்த பெரிய ஆறு வருகிற வழியாகவே, பல யோசனைகள்சென்று - அநேக யோசனை தூரங்கள்போய்,-திங்களொடுநாள்உம் என்றுஉம் வலம் வந்தருள் இரத்நகிரி எய்தி - சந்திரனும் நக்ஷத்திரங்களுஞ் சூரியனும் எப்பொழுதும்] பிரதக்ஷிணமாகச் சுற்றிவரப்பெற்ற (சிறப்பையுடைய) ரத்நகிரியென்னும் மலையைஅடைந்து,-(எ-று.)-இச்செய்யுளில்எய்தி யென்னும் வினையெச்சம்,மேல் பன்னிரண்டாங் கவியில் 'கண்டு'என்னும் வினையெச்சத்தைக்கொண்டுமுடியும். இரண்டவை,அவை-முதல்வேற்றுமைச்சொல்லுருபு. என்று- ஒளியையுடைய தெனச் சூரியனுக்குக் காரணப்பெயர்;எல் - பகுதி, இடைச்சொல்: ஒளியென்றுபொருள்;று - பெயர்விகுதி. இரத்நகிரி - சந்தவின்பத்தின்பொருட்டு வடசொல் சிறிதுதிரியாது நின்றது. (509) 8. | மரகதமணிப்பணிசெய் மாளிகைகளொருசார் அரிமணியழுத்தியன வாலயமதொருசார் எரிமணியழுத்தியன வில்லின்விதமொருசார் தருணமணிமுத்தினிய லுஞ்சதனமொருசார். | |