பலர்-மீண்டும்மிகப்பலர், பிறங்கலைநிகர்க்கும் கன்னம்மதம் மா- மலைகளையொத்தகன்னத்தினின்று ஒழுகும் மதஜலத்தையுடைய யானைகளும்,இரதம் - தேர்களும், கற்கி - குதிரைகளும், இகல் காலாள் - வலிமையாகப் போர்செய்யுங் காலாட்களும், (என்னுஞ் சதுரங்க சேனையுடனே),மன்னு திறல் மானுட மடங்கலைவளைத்தார்-பொருந்தின வலிமையையுடைய அந்த மனிதச் சிரேஷ்டனானவீமனைச் சூழ்ந்துகொண்டார்கள்;(எ - று.) பிறங்குதல் -(உயர்ச்சியால் நெடுந்தூரத்திலும்)விளங்குவது:மலைக்குப் பெயர்:இதில், அல்-கருத்தாப்பொருள் விகுதி. பிறங்கு அலைநிகர்க்கும் எனப் பிரித்தெடுத்து - விளங்குகின்ற கடலின் அலைநீரையொக்கின்ற என உரைத்து, மதத்துக்கு அடைமொழியாக்கினு மமையும். மதமா- மதத்தையுடைய விலங்கு;எனவே, யானையாயிற்று. யானைக்குமலையை உவமைகூறியதனால்,யானையின்மதநீருக்கு மலையின்அருவிநீரை உவமையாகக் கொள்க. இரதம் - ரதம்:கற்கி - கல்கி:வடசொற்கள். சிங்கம், புலி, யானை,காளைஎன்னுஞ் சொற்கள் மனிதனுக்கு வரும்பொழுது சிறப்புப்பொருளையுணர்த்துமாதலின்,'மானுடமடங்கல்' என்றது. இனி, மானுடமடங்கல் - நரசிங்கமூர்த்திபோன்றவனுமாம்; பிறப்பால் மனிதனும் பராக்கிரமத்தாற் சிங்கமும் ஆகுபவ னென்றுமாம்.(542) 41.-ஐந்துகவிகள்-விஞ்சையர் பொருதுதோற்றமைகூறும். வளைத்துவயவெம்படைகள்வீசிமறிகடல்போல் உளைத்தொருவர்போலெவருமுருமெனவுருத்துப் புளைத்தரதமாபுரவிபோதகமிசைப்போய் விளைத்தனர்பெருஞ்சமரம்விஞ்சையர்களெல்லாம். |
(இ - ள்.)விஞ்சையர்கள் எல்லாம் - வித்தியாதரர்களெல்லோரும்,- புளைத்தரதம்-(இடையிலே) துவாரத்தையுடைய தேர்களும், மா புரவி-பெரிய குதிரைகளும், போதகம்-யானைக்குட்டிகளும்என்னும் இவற்றின், மிசை போய்-மேலேறிச் சென்று, மறி கடல் போல்-(அலைகள்)மடங்குந் தன்மையுள்ள கடல்போல, வளைத்து-(வீமனைச்)சூழ்ந்து நின்று, உளைத்து - மனங்கலங்கி, உரும் என உருத்து-இடி போல(ப் பயங்கரமாக) க்கோபித்து, வயம் வெம் படைகள் வீசி - வலிமையையுடைய கொடிய ஆயதங்களை (அவன்மேலே) எறிந்து, ஒருவர்போல் எவர்உம் - ஒருத்தரைப் போலவே எல்லோரும், பெருசமரம் விளைத்தனர்- (அவனுடன்) பெரிய போரைச் செய்தார்கள்; 'உருமெனவுரைத்து' என்றபாடத்துக்கு - இடிமுழக்கம்போல வீரவாதங்களைஆரவாரத்தோடுசொல்லி யென்க. புளைத்த- புளையென்னும்பெயரி னடியாப்பிறந்த பெயரெச்சம்:புளை-புழைஎன்பதன் போலி. போதகம்-இருபத்தைந்து பிராயமுள்ள யானைக்கன்று. 42. | தேரணியும்வெம்பொறி யெனச்செறிபுகர்க்கைக் காரணியும்வாயுநிகர் கற்கியணியும்போர்ப் |
|