பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்347

 பேரணிகலன்றனி பிறங்குமணிமார்பன்
தாரணியெனத்தனது தண்டுகொடுடைத்தான்.

     (இ-ள்.)போர் பேர் அணிகலன் - யுத்தத்தையே பெரிய
ஆபரணமாகவுடையவனும், தனி பிறங்கும் மணி மார்பன் - ஒப்பில்லாமல்
விளங்குகிற அழகிய மார்பை யுடையவனுமாகிய வீமன்,-தேர் அணிஉம் -
(தன்னைவளைந்துபொருத)தேர்ச்சேனையையும்,வெம்பொறி என செறி
புகர் கை கார் அணிஉம் - வெவ்விய அனற்பொறிகள்போல் (ச்
செந்நிறமாய்) நெருங்கிய புள்ளிகளையுடையதுதிக்கையையுடைய
மேகம்போன்ற யானைகளின்சேனையையும்,வாயு நிகர் கற்கி அணிஉம்-
காற்றையொத்த (அதிவேகத்தையுடைய) குதிரைகளின் சேனையையும்,தனது
தண்டுகொடு - தன்னுடைய கதாயுதத்தால், தார் அணி என -
பூமாலையினொழுங்கைக்கெடுத்தல்போல, உடைத்தான் - (எளிதில்
நிலைகுலையுமாறு)அழித்தான்;(எ - று.)

     "போரின்றிவாடும் பொருநர்சீர்","விழுப்புண்படாதநாளெல்லாம்
வழுக்கினுள், வைக்குந் தனனாளையெடுத்து"என்றபடிபோரில்லையாயின்
பொலிவுகெடுதலும் சிறந்த போர் நேர்பட்டால் பொலிவுமிகுதலும்
சுத்தவீராக்கு இயல்பு ஆதலால், 'போர்ப்பேரணிகலன்'என்றது.
'புகர்க்கைக்கார்'எனவே, யானையாயிற்று. முகத்திற் செம்புள்ளிகளிருத்தல்,
யானைக்குஉத்தமவிலக்கணம்.  அணிமார்பு என்றும் பிரிக்கலாம்.
தாரணிஎன - சூரியபுத்திரனானயமன்போல உரைக்கலாம்.  [தரணி-
சூரியன்.]                                             (544)

43.நெரிந்தனரதந்துனையுநேமியுடன்வேழம்
சரிந்தனநெடுங்குட ரரிந்துதலைதாள்போய்
முரிந்தனபெரும்புரவி வெள்ளமுனைதோறும்
விரிந்தனருரங்கடவுள் விஞ்சையர்கண்மன்னோ.

     (இ-ள்.)(அப்போரில்), முனைதோறுஉம் -
போர்க்களத்தினிடங்களிலெல்லாம், ரதம் - தேர்கள், துனையும்நேமியுடன்-
விரைந்து செல்வனவான சக்கரங்களுடனே, நெரிந்தன-சிதைபட்டன;
வேழம்-யானைகள்,நெடு குடர் அரிந்து - நீண்டகுடல்கள் அறுபட்டு,
சரிந்தன - கீழேவிழுந்தன;பெரு புரவி வெள்ளம்-பெரிய குதிரைகளின்
கூட்டம், தலைதாள் போய்-தலைகளுங்கால்களுந் துணிபட்டு, முரிந்தன -
அழிந்தன;கடவுள் விஞ்சையர்கள் - தெய்வத்தன்மையையுடைய
வித்தியாதரர்கள், உரம் விரிந்தனர் - மார்புவிரிந்தார்கள்:(எ - று.)-மன்,
ஓ-ஈற்றசை.                                             (545)

44.மீளியொருதண்டுகொடு விண்டெதிர்வெகுண்டோர்
மூளைநிணம்வாயுகமுருக்குதலுமொய்ம்பின்
தாளுடையமருத்தெதிர் சரிக்கும்வகையெய்தும்
பூளைவனமொத்தனர்பொரும்பொருநரெல்லாம்.

     (இ - ள்.)மீளி-வலிமையிற்சிறந்த வீமன், ஒரு தண்டுகொடு-(தனது) ஒப்பற்றதொரு கதாயுதத்தால், விண்டு -பகைத்து, எதிர் வெகுண்டோர் மூளைநிணம் வாய் உக - எதிர்த்துநின்று கோபங்