பக்கம் எண் :

350பாரதம்ஆரணிய பருவம்

வேறு.

49.-புறங்கொடுத்துவந்த சேனாபதிகளைமணிமான்
இழித்துக் கூறல்.

வானி லவுணரை மோதி முனைதொறும்வாகை புனைமணிமானுமச்
சேனைமுதல்வரை வேக முறநனி சீறி யுரைபல கூறினான்
ஆனி லனதுடல்வீழ வமரிடை யாவி கவர்தர வஞ்சிநம்
தானையரியெதி ரேகு கரியின மாகி வெருவொடு சாய்வதே.

இரண்டு கவிகள் -ஒருதொடர்.

     (இ-ள்.)வானில்-ஆகாயத்திலே, முனைதொறுஉம்-ஒவ்வொரு
யுத்தத்திலும், அவுணரை மோதி-அசுரர்களைதாக்கி,வாகை புனை-
வெற்றியைக் கொண்ட, மணிமானும்-, அ சேனைமுதல்வரை-
(முதுகுகாட்டியோடிவந்த) அந்தச்சேனாபதிகளை(ப் பார்த்து), வேகம் உற
நனி சீறி-கடுமையாக மிகவுங்கோபித்து, உரை பல கூறினான்-
பலவார்த்தைகளைச்சொல்லினான்:(அவை யாவையெனில், 'அமரிடை-
போரிலே, ஆனிலனது உடல் வீழ-வாயுகுமாரனானவீமனது உடம்பு
கீழ்விழும்படி, ஆவி கவர்தர-(அவனது) உயிரை (உடம்பினின்று)
அழித்தற்கு, அஞ்சி-பயந்து, நம் தானை-நமதுசேனை,அரி எதிர் ஏகு கரி
இனம் ஆகி - சிங்கத்தினெதிரிலே பயந்தோடுகிற யானைக்கூட்டத்தை
யொத்து, வெருவொடு - அச்சத்துடனே, சாய்வதுஏ-(இங்ஙனம்)
புறங்கொடுத்து அழிவதா!!' (எ - று.)

     ஈற்றேகாரம் -வினாவகையால்,அது சிறிதுந் தகுதியன்று என்ற இழி
தகைமையை யுணர்த்தும்.  ஆநிலன் - அநிலனது மகன்;அநிலன் - வாயு.
ஆனிலியின்என்று பிரதிபேதம்.

     இதுமுதல்ஆறுகவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்தாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கரு விளச்சீர்களும்,
ஏழாவது கூவிளச்சீருமாகிய கழிநெடிலடிநான்கு கொண்ட எழுசீராசிரிய
விருத்தங்கள்.                                             (551)

50.-மணிமான் சேனையோடுவீமனைநெருங்கதல்.

என்றுதனதெதிர்நின்றவரையிகழ் வுற்றுமொழிபலசொற்றுமற்
குன்றமெனவமர்வென்றிதருவதொர் கும்பமதகரிமேல்கொளா
ஒன்றுபடவுலகின்றுபொடிபட வுந்துகரிரதமுந்தெனச்
சென்றுபுடைவருகின்றபடையொடு தெண்டதரனெதிர்மண்டினான்.

     (இ - ள்.)என்று-, (மணிமான்), தனது எதிர் நின்றவரை இகழ்வுற்று -
தனக்குஎதிரில்நின்ற சேனாதிபதிகளைமிகஇகழ்ந்து, மொழி பல சொற்று-
பலசொற்களைக்கூறி, மல் குன்றம் என - வலிமையையுடைய
மலைபோலவுள்ள,அமர் வென்றி தருவது ஒர் கும்பம் மதம் கரி
மேல்கொளா-போரில் வெற்றியைத் தருவதாகிய மஸ்தகங்களையும்
மதத்தையுமுடைய ஒருபெரிய யானையின்மேல்ஏறிக் கொண்டு, 'உலகு
ஒன்றுபட இன்று பொடி பட - உலகங்களெல்