பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்369

83.-தேவகணங்களுடன்குபேரன் போர்க்குஎழுதல்.

வென்றகோச்சித்தரும் விஞ்சைவேந்தரும்
நின்றகின்னரரும்வா ணிருதரும்புடை
துன்றுசாரணர்களுஞ் சூழ்மின்மொய்ம்பனை
என்றுகொண்டெழுந்தன னியக்கர்தம்பிரான்.

     (இ-ள்.)வென்ற-(இதுவரையிற் பலபோர்களிற் பகைவரை) வெற்றிகொண்ட,
கோ சித்தர்உம்-மேன்மையையுடைய சித்தசிரேஷ்டர்களும், விஞ்சை
வேந்தர்உம் - வித்தியாதரத்தலைவர்களும்,நின்ற கின்னரர்உம் -
மேம்பட்டுநின்ற கின்னரர்களும், வாள் நிருதர்உம்-(எப்பொழுதும்)
படைக்கலமேந்துந்தன்மையுள்ள அரக்கர்களும், புடை துன்று
சாரணர்கள்உம் - பக்கங்களிற்பொருந்தின சாரணர்களும்,(ஆகிய நீங்கள்
எல்லோரும்),மொய்ம்பனை-வலிமையையுடையஅம்மனிதனை,சூழ்மின்-
வளைந்துகொள்ளுங்கள், என்றுகொண்டு - என்று சொல்லிக்கொண்டே,
இயக்கர் தம் பிரான்-யக்ஷர்களது அரசனானகுபேரன், எழுந்தனன்-
(போருக்குப்) புறப்பட்டான்;(எ - று.)

     இக்கவியில்சித்தர்முதல் இயக்கரீறாகச்சொல்லப்பட்ட அறுவகையோரும்,
பதினெண்தேவகணத்துட்பட்டவ ரென்க.  வென்ற கோச்சித்தரும்........சூழ்மின்
- முன்னிலைப்படர்க்கை: இடவழுவமைதி.

84.-உருத்திரசேனனென்ற குபேரகுமாரன்
குபேரனைநோக்கிக் கூறத்தொடங்குதல்.

உருத்திரசேனனப் பொழுதுணர்ந்துதன்
கருத்தொடுதாதைபொற் கழல்வணங்கியே
மருத்தருள்பவன்வர லாறுமற்றவன்
திருத்தகுதுணைவர்தஞ்செயலுங்கூறுவான்.

     (இ - ள்.)அப்பொழுது-, உருத்திரசேனன் - உருத்திரசேனனென்னுங்
குபேரகுமாரன், உணர்ந்து - (தன்தாதையின்கருத்தை) அறிந்து, தன்
கருத்தொடு-தனதுவிருப்பத்துடனே, தாதை பொன்கழல் வணங்கி - (தன்)
தந்தையானகுபேரனது அழகியபாதங்களைநமஸ்கரித்து, மருத்து
அருள்பவன் வரலாறுஉம் - வாயுபெற்றமகனானவீமனது செய்திகளையும்,
அவன்திரு தகு துணைவர்தம்செயல் உம் - அவ்வீமனது
மேன்மைபொருந்தின உடன்பிறந்தவர்களது செய்கைகளையும்,கூறுவான் -
சொல்பவனானான்; (எ - று.) - அவை மேல் ஆறுகவிகளிற் கூறப்படும்.
மற்று - அசை.                                           (586)

85.-ஆறுகவிகள்-உருத்திரசேனன் கூறிய பாண்டவர்
வரலாறு முதலியன.

எந்தைகேளிவனைமானுடனென்றெண்ணலை
முந்தைமுப்புரம்பொடி படுத்தமூர்த்திதன்
சிந்தையாலைவரிந்திரரைச்சென்மென
வந்தனர்நிலமகள் வருத்தமாற்றுவான்.