பக்கம் எண் :

374பாரதம்ஆரணிய பருவம்

மேல்உருத்திஏல் -அவன்மேற் கோபிப்பாயானால்[போர்செய்தால்
என்றபடி],உறு பயன்ஒன்றுஉம் இல்லை-அடையும்பயன்ஒன்றுமின்றாம்;
(எ- று.)

     தோல்விநேருமேயன்றி வெற்றிநேராதென்பதாம்.  இப்போது
செய்யத்தக்கது இன்னது என்று, இதனால்,உருத்திரசேனன் தெரிவிக்கின்றா
னென்க.  ஆல்-ஈற்றசை;தேற்றமுமாம்.                         (592)

91.-உருத்திரசேனன்இங்ஙன்சொல்லவும்
குபேரன் பொருவேனென்று செல்லுதல்.

என்றிவைதிருமக னியம்பியேத்தவும்
நின்றிலனெனதுயிர் நேயநண்பனைக்
கொன்றவன்றன்னுயிர் கொள்வன்யா னெனாச்
சென்றனன்புட்பகத் தேரின்மீதரோ.

     (இ - ள்.)திரு மகன் - செல்வப்பிள்ளையானஉருத்திரசேனன், என்று
- என்றுகூறி, இவை இயம்பி-(இன்னும்இப்படிப்பட்ட பல)
வார்த்தைகளையுஞ்சொல்லி,ஏத்தஉம் - துதிக்கவும்,-(குபேரன்),-நின்றிலன்-
(அது கேட்டுத் தடைப்பட்டு) நில்லாதவனாய்,எனது உயிர் நேயம்
நண்பனைகொன்றவன் தன்உயிர் கொள்வன யான்எனா-'என்னுடைய
உயிரோடொத்த அன்புள்ளசிநேகிதனானமணிமானைக்கொன்றவனது
உயிரை வாங்குவேன் நான்'என்றுகூறி, புட்பகம் தேரின்மீது சென்றனன்-
(தனது) புஷ்பக விமானத்திலேறி(ப்போருக்கு)ச்சென்றான்;(எ-று.)-அரோ -
ஈற்றசை.

     புட்பகம் -புஷ்பகம்;குபேரன்விமானம்:இது எத்தனைபெயர் ஒருங்குவந்து
இருப்பதானாலும்அவ்வளவுபேர்க்கும் தான் வளர்ந்து இடங்கொடுக்குந்
தன்மையது;பாற்கடல்கடைந்தகாலத்து அதனினின்று எழுந்தது;உடையவன்
நினைத்தவிடத்திற்குஆகாயமார்க்கத்திற் பறந்து செல்வது. 
நண்பனைக்கொன்றவன்தன் உயிர்கொள்வன்-
நண்பனைக்கொன்றவனைக்கொல்லாதுவிடே னென்றபடி.        (593)

92.-குபேரனோடுயட்சசேனைமண்விண்களிற்
பரவிச்செல்லுதல்.

மண்ணெலாமிரதமுங் களிறும்வாசியும்
விண்ணெலாம்விமானமும் விபுதரீட்டமும்
பண்ணெலாமுரல்வன பணையின்குப்பையும்
எண்ணலாமாவதோ வியக்கர்சேனையே.

     (இ-ள்.) மண்எலாம்-பூமிமுழுவதிலும், இரதம்உம்-தேர்களும்,
களிறுஉம்-யானைகளும், வாசிஉம்-குதிரைகளும், விண் எலாம்-
ஆகாயமுழுவதிலும், விமானம்உம்-விமானங்களும், விபுதர் ஈட்டம் உம்-
தேவர்களின்கூட்டமும், (பூமி ஆகாயம் இரண்டலும்), பண் எலாம் முரல்வன
பணையின் குப்பைஉம்-சுரங்களையெல்லாம் ஒலிப்பனவான வாத்தியங்களின்
தொகுதியும், (ஆக இவ்வாறு), இயக்கர்