பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்375

சேனை-யக்ஷசேனை,எண்ணல் ஆம் ஆவதுஓ - அளவிடக்கூடியதாவதோ?
[அன்றென்றபடி];(எ - று.)

     குபேரன்புட்பகவிமானத்தின்மேலேறி வீமனுடன் போர்செய்யப்
புறப்படுகையில் அளவிறந்த இயக்கர்சேனை,தேர் யானைகுதிரை
விமானங்களோடும் பலவகைவாத்தியகோஷத்தோடும் பூமியிலும் ஆகாயத்திலும்
பரவி உடன்சென்றன வென்பதாம். எண்ணலாமானதோ என்றும் பாடம். 
                                                          (594)

93.-மண்விண்களில்வரும் யட்சசேனையை
யுதிரட்டிரன்காணுதல்.

விண்டலமுறவரு சேனைவேலையும்
மண்டலமுறவெழு மகரவாரிபோல்
எண்டிசையுறப்பரந் தெழுந்தசேனையும்
கண்டனன்கண்ணுறக் கருணைக்கண்ணனே.

     (இ - ள்.)விண் தலம் உற-ஆகாயத்தினிடத்திற்பொருந்த,வரு-வருகிற,
சேனைவேலைஉம்-யக்ஷசேனாசமுத்திரத்தையும்,மண்தலம் உறஎழும்-
பூலோகத்தினிடம் முழுவதிலும் பொருந்தும்படி மேலெழுகிற, மகரம் வாரி
போல்-சுறாமீன்களையுடையபிரளயக்கடல்போல, எண் திசை உற-
எட்டுத்திக்குகளிலும் பொருந்த, பரந்து-பூமியிற்), பரவி, எழுந்த -
(போருக்கு) எழுந்த, சேனைஉம்-யக்ஷசேனையையும்,கருணைகண்ணன் -
அருளொழுகுங்கண்களையுடையயுதிட்டிரன், கண் உற கண்டனன்-(தன்)
கண்ணெதிரிலே பொருந்தப்பார்த்தான்;

     வாரி-நீர்;இது-வடசொல்:இங்கே, கடலுக்கு இலக்கணை. பிற உயிர்மேற்
கண்பார்வைசென்றவிடத்து அதன்வழியாக அருள்நிகழ்வதாதலால்,
கருணைக்கண்ணனென்றார்; இதனை 'கண்ணோட்டம்' என்பதனாலும்அறிக. (595)

94.-தருமன்தம்பியைச்சினந்து குபேரனைவணங்குதல்.

உணங்கினானுடலமுமுணர்வுமாவியும்
பிணங்கினானிளைஞனைப்பேதைபங்கனோடு
இணங்கினான்புகழெலாமேத்திநெஞ்சுற
வணங்கினான்மணிமுடிமன்னர்மன்னனே.

     (இ - ள்.) மணி முடி மன்னர் மன்னன் - இரத்தினங்கள்பதித்த
கிரீடத்தையுடைய அரசர்களுக்கரசனானதருமபுத்திரன்,-(அச்சேனைகளைக்
கண்டமாத்திரத்தில்), உடலம்உம் உணர்வும் ஆவிஉம் உணங்கினான்-
உடம்பும் அறிவும்உயிரும் ஒடுங்கி, இளைஞனைபிணங்கினான்-(தன்)
தம்பியான வீமனைக்கோபித்து, பேதை பங்கனோடுஇணங்கினான்புகழ்
எலாம் ஏத்தி-(எப்பொழுதும்) இளமைப்பருவத்தையுடைய
உமாதேவியைவாமபாகத்திற்கொண்ட சிவபிரானோடுகூடிய நண்பனான
குபேரனது கீர்த்தியையெல்லாந் துதித்து, நெஞ்சு உற வணங்கினான்-
மனம்பொருந்த(அவனை)நமஸ்கரித்தான்;(எ-று.) - பேதை -
பேதைமையுடையவளுக்கு ஆகுபெயர்.                            (596)