பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்377

     (இ - ள்.) என- என்று, இவை-இவ்வார்த்தைகளை,பகர்ந்து-சொல்லி,
இவன் -யுதிட்டிரன், இசைய-பொருத்தமாக, ஏத்தலும் - துதித்த
மாத்திரத்தில், தனதன்உம் - குபேரனும், முனிவொடு - (வீமனிடத்துள்ள)
கோபத்தோடு, வயிரம்உம்-வீராவேசமும், முரண்உம் - பகைமையும், மாறி -
நீங்கி,-மனன் உற மகிழ்ந்து - மனம் மகிழ்ச்சிபெற்று, எதிர்கொண்டு -
எதிரிற்சென்று உபசரித்து, தருமனை-யுதிரட்டிரனை,மார்பு உற - (தன்)
மார்பிலே அழுந்தும்படி, தழீஇக் கொண்டான் - அணைத்துக்கொண்டான்;
(எ - று.)- அரோ-ஈற்றசை.                                (599)

98.-தருமபுத்திரனைநோக்கிச்
சினந்தணிந்தேனென்றுகுபேரன் கூறுதல்.

நிலத்தியறண்ணளி நிருபநீமதி
குலத்தியலுடன்வரு குமரனாதலாற்
சலத்தியறருமுரண் டணிந்தென்யானெனப்
புலத்தியன்மகன்மகன் புகன்றுபோற்றினான்.

     (இ-ள்.) 'நிலத்து- பூலோகத்துயிர்க ளெல்லாவற்றினிடத்திலும், இயல்-
பொருந்தின, தண் அளி - குளிர்ந்தகருணையையுடைய,நிருப - அரசனே!
நீ-, மதி குலத்து இயலுடன் வரு குமரன் - நீ சந்திர குலத்திலே
(அதற்கேற்ற) நற்குணத்தோடுபிறந்த குமாரன்:ஆதலால்-, சலத்து இயல்
தரும் முரண் தணிந்தென் யான்-(உன் தம்பிபக்கல்) கோபத்தாற் பொருந்தின
பகைமையை யொழிந்தேன் நான்',என - என்று, புலத்தியன் மகன் மகன்-
புலஸ்தியரது குமாரரான விச்சிரவசினது புத்திரனானகுபேரன், புகன்று -
சொல்லி, போற்றினான்- (தருமபுத்திரனைப்)புகழ்ந்தான்;(எ - று.)

     சந்திரனைக்கண்டமாத்திரத்தில் உஷ்ணந்தணிதல்போலச்
சந்திரகுலத்திற்பிறந்தவனானஉனது சாந்தகுணத்தைக் கண்டமாத்திரத்தில்
எனது கோபதாபந் தணிந்துவிட்ட தென்பான், 'நீமதி
குலத்தியலுடன்வருகுமரனாதலால்சலத்தியல்தருமுரண் தணிந்தென் யான்'
என்றான்.                                              (600)

99.-உரிமைபாராட்டிக்குபேரன் தம்பிமாருடன்
தருமனைத்தன் நகருக்கு அழைத்துப்போதல்.

என்னகர்நின்னக ரென்றுவேறிலை
நின்னகரிதுமுத னீங்கள்வாழ்வுறும்
தொன்னகரெனதெனத் துணைவர்தம்மொடு
மன்னனைத்தன்னகர்கொண்டுமன்னினான்.

     (இ-ள்.)'என்நகர் நின் நகர் என்று வேறு இலை-எனதுநகரம்வேறு
நினதுநகரம்வேறு என்பதுஇல்லை;இது நின் நகர்-இவ்வளகாபுரி
உன்னுடைய நகரமாம்;
முதல் நீங்கள்வாழ்வு உறும் தொல் நகர்-
முன்னாளில்நீங்கள் வசித்துவந்த பழமையான அஸ்தினாபுரி,எனது-
என்னுடையதாம்',என-என்றுசொல்லி, (குபேரன்), துணைவர்தம்