பக்கம் எண் :

388பாரதம்ஆரணிய பருவம்

     (இ - ள்.)'அரு- செய்தற்குஅரிய, மா தவம் - சிறந்த தவத்தின்,
பேறு-பயன், எமக்கு-, ஆனது-வாய்த்தது:அம்மா - ஆச்சரியம்!'என்ன-
என்று, செம்மாந்து,-துருவாசமுனிவர் தம்மிடத்து வந்ததுகுறித்துப்)
பெருமிதங்கொண்டு,-மா குரு மரபோர் ஐவர் உம்-சிறந்த
குருவமிசத்தவரைவரும்,-தம் குஞ்சி தலைமேல்- தம்முடைய
மயிர்முடியையுடைய சிரசின்மேல், அடி - (துருவாசமுனிவருடைய)
திருப்பாதங்களை,வைத்து-, 'எம்பெருமான்-எமதுபெருமானே! இங்கே
எழுந்தருள பெற்றேம்-(நீர்) இங்கே யெழுந்தருளும் பாக்கியத்தை
யடைந்தோம்,'என்ன-என்று, பெரிது உவந்து-மிகவும் மகிழ்ந்து சொல்லி,
அங்கு - அப்போது, அரு மா முனியை-(கிடைப்பதற்கு) அரிய சிறந்த
அம்முனிவரை, பூசித்தார்-:அவன்உம் - அந்த முனிவனும், ஆசி -
வாழ்த்தை, புகன்றான்- (பாண்டவர்க்குக்) கூறினான்;(எ-று.)

    செம்மாத்தல்-அந்தப்பெரியோர் எழுந்தருளப் பெறும் பாக்கியத்தைக்
கருதியதனாலாகியது. குஞ்சித் தலைமேல்அடிவைத்து-தமது சிரசின்மேல்
முனிவருடைய பாதங்களையிருக்குமாறுவைத்து என்க:அடிமேல் குஞ்சித்
தலைவைத்துஎனினுமாம்.  பேறு-பெறப்படுவது:செயப்படுபொருள்விகுதி
புணர்ந்துகெட்டு முதனீண்ட பெயர்:பயன் என்பது பொருள்.      (616)

3.-யுதிட்டிரன்உபசரிக்க, துருவாசன்
'சூரியனுச்சிக்குவந்துவிட்டதனால்யாம் உண்ணுங்காலம்
இது'எனல்.

இட்டதவிசின்மிசையிருத்தி யெரிகான்வந்தவிளைப்பாற்றிக்
தொட்டகழற்காலுதிட்டிரன்கை தொழுதுதுதிப்பத்துருவாசன்
வட்டமணித்தேரவனுச்ச வானத்தடைந்தான்யாமருந்தப்
பட்டவுணவிங்கமுதுசெயப் பருவமிதுவென்றுரைசெய்தான்.

     (இ-ள்.)இட்ட-போகடப்பட்டிருந்த, தவிசின் மிசை-ஆசனத்தின்
மேலே, இருத்தி-உட்காரவைத்து, எரி கான்-எரியுந்தன்மையுள்ள காட்டிலே,
வந்த-வந்ததனாலான,இளைப்பு-சிரமத்தை,ஆற்றி-தணியச் செய்து,-கழல்
தொட்ட கால் உதிட்டிரன் - வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய
தருமபுத்திரன்,-கைதொழுது-கைகூப்பி,துதிப்ப -தோத்திரஞ் செய்யா
நிற்கையில்,-துருவாசன்- அந்தத் துருவாசமுனிவன்,-வட்டம் மணி
தேரவன்-வட்டவடிவமாக இருப்பவனும் அழகியதேரின்மீதுவருபவனுமாகிய
சூரியன், வானத்து உச்சம் அடைந்தான்-வானத்திலேஉச்சியையடைந்திட்டான்: 
யாம்-, இங்கு-இவ்விடத்திலே, அருந்தப்பட்ட-உண்பதற்கு ஏற்ற, உணவு-
உண்டியை, அமுதுசெய-உண்ண(த்தக்க,) ஆரணியபருவம் - காலம், இது-
இதுவாகும்', என்று-,உரைசெய்தான்-;(எ-று.)

    மூங்கில்போன்ற சிலசெடிகள் ஒன்றோடொன்றுஇழைவதால் எரியும்
இயல்பினது காட்டினிடம் என்க.  அமுதுசெய என்பதன்பின் பெயரெச்சம்
வருவிக்க, அமுதுசெய்தல்-உண்ணல்.