4.-முனிவனைநீராடிவருக என்று அனுப்பிவிட்டு, 'இவனைஉண்பிக்க யாது செய்வது?'என்று யுதிட்டிரன்ஆலோசித்தல். மூத்தோன்குளித்துவருகவென முனிவருடனம்முனிதடத்துப், போய்த்தோய்வதற்காங்கெழுந்தருளப் புரசைக்களிற்று முரசுயர்த் தோன், வாய்த் தோன் வரவுக்கென்புரிவோ மதிப்பீரெனத்தன்றம் பியர்க்கும், வேய்த்தோள்வேள்விமடந்தைக்கு முரைத்தாங்கவரை வினவினனால். |
(இ-ள்.)மூத்தோன்-பாண்டவர்களுட்பெரியோனானதருமபுத்திரன், 'குளித்துவருக- நீராடிவருவீராக,'என - என்றுகூறவே,-ஆங்கு- அப்போது, அ முனி - அந்தத் துருவாசமுனிவன், முனிவருடன்- (தம்முடன்வந்த) இருடியரோடும், தடத்து போய் - நீர்நிலையிருக்குமிடஞ் சென்று, தோய்வதற்கு-நீராடுவதற்காக, எழுந்தருள-சென்றிருக்க,- புரசைகளிறு -புரசையையுடைய மதயானைச்சேனையையுடையனாகி,முரசு உயர்த்தோன் - முரசவாத்தியத்தை(க் கொடியில்) உயரவெழுதியவனான யுதிட்டிரன்,-'வாய்த்தோன்- தவவாய்ப்பையுடையவனானதுருவாச முனிவனுடைய, வரவுக்கு-(உண்ணுமாறு) வரப்போவதற்கு, என் புரிவோம் - (யாம்) என்னசெய்வோம்? மதிப்பீர் - ஆலோசிப்பீராக,'என - என்று, தன் தம்பியர்க்குஉம்-தனது தம்பிமாரானவீமன் முதலியோரிடத்தும், வேய் தோள் வேள்வி மடந்தைக்குஉம்-மூங்கில்போன்ற தோள்களையுடையவளாய் வேள்வித்தீயினின்று தோன்றியவளான திரௌபதியினிடத்தும், உரைத்து- சொல்லி, ஆங்கு-அங்கே, அவரை-,வினவினன்-உபாயங்கூறுமாறு கேட்டான்;(எ-று.) உணவுக்காலம்என்று துருவாசமுனிவன் கூறியவுடனே, நீராடி வருக என்று தந்திரமாக அனுப்பிவிட்டு, யுதிட்டிரன் 'நீராடிவந்தால் இம்முனிவர்க்கு எவ்வாறு உணவுஇடுவது?'என்று சிந்தை கொண்டவனாய், இம்முனிவனுக்கு உணவுஇட என்னஉபாயஞ்செய்யலாமென்று ஆலோசித்துக்கூறுமாறு தன் தம்பிமார் முதலியோரை வினாவினனென்க. ஆல்-அசை. புரசை - யானைக்கழுத்திடுகயிறு.மதியீரென்றும் பாடம். (618) 5.-வீமன்தன்கருத்தைக் கூறுதல். மேவாருரைக்கவிவன்வந்த தல்லாற்பிறிதுவேறில்லை ஆவாவிதற்கின்றென்செய்வே மாமாறாகநாமெழுந்து கோவானவனும்பலபடையுங்குன்றச்சென்றுபொருதிமைப்பில் சாவாநிற்பதுறுதியினி யென்றான்வன்றாட்சமீரணியே. |
(இ-ள்.)(அதுகேட்டதும்),-வன்தாள் சமீரணி - கொடிய முயற்சியையுடைய வாயுகுமாரனானவீமசேனன்,-'மேவார்-(தமது)பகைவர், உரைக்க - சொல்ல, (அச்சொல்லைக்கேட்டுக்கொண்டு), இவன்வந்தது அல்லால்-இம்முனிவன் வந்தானேயல்லாமல், (இவன் வருவதற்கு), வேறு பிறிது-வேறாகமற்றொருகாரணம்,இல்லை;ஆஆ- |