பெரியஇருடியருடனே,சாக பல மூலம் - இலைகாய் கிழங்குகளைக் கொண்ட உணவை, நுகர்ந்தாம்-உண்டிட்டோம்;என்னே என்னே-இது என்ன தகாதசெயல்! கொன்னே முனியும் முனிக்கு-இயற்கையாகக்கோபிக்குந் தன்மையுள்ள துருவாசமுனிவனுக்கு, இனி - இப்போது, புரிவது - செய்யத்தக்கது,-என்கொல்ஓ-?'என - என்று எண்ணி, 'விளைவதுஎன்ஓ- இப்போது விளையப்போவதுஎதுவோ?'என - என்றுசொல்லி, நடுநடுங்கி- உடம்பு மிகவும்நடுக்க லெடுத்து, பயந்தாள் - அச்சங்கொண்டுநின்றாள்; (எ- று.) சூரியனைத்துதித்துஅவனருளால் தருமன்பெற்ற அட்சயபாண்டம் ஒருநாளுக்கு ஒருமுறை வேண்டும் உணவுகளையெல்லாம் அளிக்கவல்லதாதலாலும், அவ்வாறு ஒருமுறை அட்சயபாண்டத்தினுதவியால் அதிதியரோடு தாம் உண்டுவிட்டபடியாலும், இங்ஙனம் திரௌபதி கூறலானாளென்க. முனிவர்கள்வரக்கூடியமாத்தியான்னிக்காலம் கடந்தபின் நாம் உண்டிருந்தால் நாம் இப்படி இடர்ப்பட வேண்டா என்பாள் 'முனிவன்வருமுன்னே நுகர்ந்தாம்'என்றாள். நின்ற மின்னேரிடை - இல்பொருளுவமை. (622) 9.-தருமன் நினைக்கஸ்ரீகிருஷ்ணன் இருதயகமலத்தினின்று வெளிப்படல். தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன் எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே. |
(இ-ள்.) தப்புஓதாமல் - (எவர்மீதும்) ஒருபிழையையும் சொல்லி நோவாமல், தம்பியர்க்குஉம் தருமம் கொடிக்குஉம் - தம் தம்பிமார்க்கும் தருமத்தின் வடிவாகிக்கொடிபோல் மெல்லியவளான திரௌபதிக்கும், இதம் ஆக - நன்மையுண்டாம்படி, அறத்தின் மகன் - தருமபுத்திரன், அப்போது உணரும்படி - அந்தவேளையில்(அந்தஸ்ரீக்ருஷ்ணன்தம்மை) அறியும்படி, அசோதை மகனைஉணர்ந்தான் - யசோதை வளர்த்தமகனாகிய ஸ்ரீக்ருஷ்ணனைத்தியானித்தான்; எ போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார்என நின்ற ஒப்பு ஓதுஅரியான்-எந்தவேளையில்யாவர் எந்த இடத்தில் எம்மை நினைக்கப்போகிறார்களென்றுஅதனையே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒப்புப்பொருள் ஓதுதற்குச்சொல்லமுடியாதபடியுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணன், உதிட்டிரன்தன் - (தன்னைத்தியானித்த)தருமபுத்திரனுடைய, உளம் போதிடை - இதயகமலத்தினிடத்திலிருந்து, வந்து - வெளிப்பட்டு வந்து, உதித்தான் - தோன்றினான்;(எ - று.) "என்னடியார்க்கென்செய்வனென்றே யிருத்திநீ"என்றவாறு திருமால் தன்னடியார்க்குத் தான் ஏதாவது உதவுமாறு நேர்படுமா?என்று அதனையே எதிர்பார்த்திருப்பவ னாதலால்,அவனை'எப்போதியாவரெவ்விடத்தில் எம்மை நினைப்பாரெனநின்றஒப்போதரியான்' |