முதற்பதின்மூன்றுகவிகள்-முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த கழிநெடிலடிநான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (632) 2.-இந்தக்கனியைஎனக்குத் தரவேண்டுமென்று திரௌபதிஅருச்சுனனிடங் கூறுதல். இக்கனியெனக்குநீநல் கென்றுவில்லெடுத்துக்கொண்ட மைக்கனிக்களவுமானும் வடிவுடைவிசனோடும் மெய்க்கனிவுடைமைதோன்ற விளம்பினாள்வீசுதென்றன் முக்கனிகமழுஞ்சோலைமுகிறவழ்நாடன்பாவை. |
(இ - ள்.)வீசு தென்றல்-வீசுகின்ற தென்றற்காற்றானது,மு கனி கமழும்-(வாழை மா பலாஎன்ற) மும்மரங்களின்பழங்களுடைய நறுமணங்கமழ்வதற்குக்காரணமான, சோலை-சோலைகளிலே,முகில் தவழ்- மேகங்கள்படிந்துசெல்லப்பெற்ற, நாடன்-பாஞ்சாலநாட்டிற்கு உரியதுருபதமகாராசனுக்கு, பாவை-பெண்ணானதிரௌபதி,-வில் எடுத்துக்கொண்ட - வில்லைத்தாங்கிக்கொண்டுள்ள,மை - மேகத்தையும், களவுக்கனி - களாப்பழத்தையும், மானும்-ஒத்த, வடிவு உடை - கறுத்த வடிவத்தையுடைய, விசயனோடுஉம்-அருச்சுனனுடனே,மெய்-(தன்) மனத்திலே, கனிவுஉடைமை-விருப்பமுடைமை, தோன்ற-விளங்குமாறு, 'நீ-, இ கனி எனக்கு நல்க-இந்தநெல்லிக் கனியை எனக்குத் தருக,'என்று-, விளம்பினாள்- சொன்னாள்; மெய்க்கனிவு-உண்மையான விருப்பமுமாம். முக்கனி-தொகைக்குறிப்பு. வில்லிறுத்துக்கொண்ட என்று பிரதிபேதம். (633) 3.-அருச்சுனன்அந்தக்கனியைவிற்கணையால்எய்து வீழ்த்தித்திரௌபதிக்குத் தருதலும், கண்டவர் 'இறுத் தோனுக்கு என்னஆபத்துநேருமோ?'எனல். சோமகர்க்கரசன்பாவை சொல்லுமுன்வில்லுவாங்கி மாமுனிக்குணவாய்நின்ற மதுரவாமலகந்தன்னை ஏமுறைதொடுத்துவீழ்த்தி யீதலுமாங்கட்கண்டோர் ஏமுறக்காணிலிப்போ தென்படுமிறுத்தோனென்றார். |
(இ-ள்)சோமகர்க்கு அரசன்பாவை - சோமகரென்பார்க்கு அரசனான துருபதனடைய மகளானதிரௌபதி, சொல்லும்முன்-('இதனைஎனக்குத்தருக' என்று)சொல்லுவதற்குமுன்னே[சொன்னவுடனேஎன்றபடி],- (அருச்சுனன்),- மா முனிக்கு - சிறந்த அமித்திரனென்னும் முனிவனுக்கு, உணவு ஆய்நின்ற- உணவாகவிருந்த, மதுரம் ஆமலகந்தன்னை-இன்சுவையுள்ள நெல்லிக்கனியை, வில்லு வாங்கி-வில்லைவளைத்து,ஏ முறை தொடுத்து- அம்பைத்தொடுக்க வேண்டிய முறையிலே எய்து, வீழ்த்தி - (அந்தமதுரநெல்லிக்கனியை மரத்தினின்று) வீழச்செய்து, ஈதுலும் - (திரௌபதிக்குக்) கொடுத்தவுடனே,-ஆங்கண் - அவ்விடத்து, கண்டோர் - (அச் |