பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்423

     (இ - ள்.) தன் தன் - தன்னுடைய, இச்சையின் அன்றி -
இச்சையின்படியல்லாமல், ஏழ் கடல் உடை தராதலந்தனைஆளும் -
ஏழுகடலையும்ஆடையாகக்கொண்ட பூமியை அரசுபுரிகின்ற, மன் தன் -
துரியோதன வரசனுடைய, இச்சையின் - விருப்பின்படியே, புரியும் -
செய்கின்ற, அ வேள்வியின் - அவ்யாககுண்டத்தினின்று, உறு பெரும் பூதம்
- மிக்க பெருந்தோற்றமுடைய பூதமொன்று,-வந்து - தோன்றி, எயிறு-
கோரப்பற்களினின்று, சென்று - வெளிப்போய், இள நிலவு எழ - இளநிலா
வீசவும், துணைவிழி - இரண்டு கண்களினின்று, தீ எழ - நெருப்புப்பொறி
பறக்கவும், வெயில் வாய் கார் குன்று என - வெயில்பொருந்திய
கருநிறமலைபோல,பொலிந்து - விளங்கி, எழுந்தது - வெளிப்பட்டது:
முனிவன்உம் - (அபிசாரயாகஞ்செய்து பூதத்தையுண்டாக்கிய)
காளமாமுனியும், கூசி - அஞ்சி, மெய் குலைந்திட்டான்- உடல்
நடுங்கினான்;(எ - று.)

     வேள்வி -இங்கே குண்டத்துக்கு ஆகுபெயர்.  கருநிறமுடைய
பூதத்தினிடத்துத் தீப்புறப்படும் விழிக ளிருத்தலால், அதற்கு, 'வெயில்வாய்
கார்க்குன்று'என்று உவமைகூறினார். பூமியாகிய பெண்ணுக்குக் கடலை
ஆடையாகக் கூறுவர்.                                    (669)

வேறு.

16.-துரியோதனன்அபிசாரவேள்வி செய்விப்பதை
யறிந்து, யமராஜன்பாண்டவர்களைஆபத்தினின்று தப்பச்
செய்விப்பவனாதல்.

இப்பாலிவ்வா றோமஞ்செய்திவனிப் பூத மினிதெழுப்ப
அப்பாலிருந்த வனசரித ரைவர்க் கமைந்த வாறுரைப்பாம்
முப்பாலினுக்கு முதற்பாலாய் மும்மைப் புவனங்களுங்காக்கும்
தப்பாவாய்மை யறக்கடவு ளறிந்தா னெண்ணத்தப்புவிப்பான்.

     (இ-ள்.) இபால்-(துரியோதனனுள்ள)இவ்விடத்தில், இவன்-இக்
காளமாமுனிவன், இ ஆறு-இப்படி, ஓமம் செய்து-யாகத்தைச் செய்து, இ
பூதம்-இப்படிப்பட்ட பூதத்தை, இனிதுஎழுப்ப-இனிதாக
(யாககுண்டத்தினின்றும்) எழுமாறுசெய்ய,-அ பால்-அங்கு[வனத்தில்],இருந்த
- வசித்திருந்த, வனசரிதர் ஐவர்க்கு-காட்டில் திரிபவராகிய
பஞ்சபாண்டவர்க்கு, அமைந்த ஆறு - நேர்ந்தநிலைமையைப்பற்றி,
உரைப்பாம்-(இனிச்)சொல்லுவோம்:முபாலினுக்கு-(அறம்
பொருள் இன்பம் என்னும்) மூன்று பகுதிக்குள், முதல் பால் ஆய்-
முதற்பகுதியான தருமசொரூபியாய், மும்மை புவனங்கள்உம் காக்கும் -
(மேல் கீழ் நடு என்னும்) மூன்றிடங்களிலுமுள்ள உலகங்களையும்
பாதுகாக்கின்ற, தப்பா வாய்மை - தவறாதசத்தியத்தையுடைய,
அறக்கடவுள்-தருமராஜன் எனப்படுகிற யமன், அறிந்தான்-
(துரியோதனனுடைய சூழ்ச்சியை) அறிந்தவனாய்,எண்ணம் தப்புவிப்பான் -
(அந்தத்துரியோதனனுடைய) எண்ணத்தினின்றும் பாண்டவர்களைத்தப்பச்
செய்விப்பானானான்;(எ - று.)-பாண்டவர்