பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்63

                                      பைம்பொற்,
காலிணையிற்செருப்பணிந்துசெய்யதிருவடிவுமிகக் கரியனானான்.

     (இ-ள்.)(பரமசிவன்),நீலம் மணி திரு கண்டம்-நீலரத்தினம்
போலக்கறுத்த (தமது)கழுத்திலே, நிலவுஎழ - சந்திரகாந்தி போன்ற
ஒளியுண்டாம்படி, பலகறை பூண் - பலகறைகளாகிய ஆபரணத்தை, நிறைய-
நிரம்ப, கட்டி - தரித்து,-கோலம்மணி குழைகளின்உம்-அழகிய
இரத்தினங்களைப்பதித்துச்செய்தகுண்டலங்களைக்காட்டிலும், குழை ஆக
- சிறந்த குண்டலமாம்படி, பிணையல்மலர் - தொடுத்த சிலமலர்களை,
கொண்டு சாத்தி-எடுத்து (க்காதிலே)அணிந்து, சேலைஎன- ஆடையாக,
புலி அதள்உம்-புலித்தோலையும்,திரு மருங்கில்-அழகிய இடையிலே, உற
சேர்த்தி-நன்றாகஇறுகக்கட்டி,-செய்யபைம்பொன்-சிவந்த பசும்
பொன்னாபரணங்களையணிந்த, கால்இணையில்- இரண்டு திருவடிகளிலும்,
செருப்பு அணிந்து-செருப்பைத்தரித்து, செய்ய திரு வடிவு மிக கரியன்
ஆனான்-சிவந்த(தமது)அழகிய வடிவம் மிகவுங் கறுத்தவனானான்;
(எ-று.)

     பிணையல்-பின்னியமாலை: தொழிலாகுபெயர்.  "செம்பொன்
னெழுத்திட்டதேபோல்" என்பதிற்போல, 'செய்யபைம்பொன்' என்ற
இடத்தும் செம்மை பசுமை வருணத்தின் வேறுபாட்டைக் காட்டவில்லை.
பொன்-ஆபரணத்துக்கு ஆகுபெயர்.                            (83)

84.-கவிக்கூற்று: சிவபிரான்கொண்ட வேட்டுவவேடச்
சிறப்பு.

இடக்கைமலர்வரிசிலையும்வலக்கைமலர்ப்பாணமும்வெந்நிடை
                                       யேபாணம்,
அடக்கியவெங்கொடுவரித்தோ லாவநாழிகையுமிகவழகு கூரக்,
கடக்களிறன்றுரித்தபிரான் கண்டவர்கள் வெருவரமுன்
                                  கொண் டகோலந்,
தொடக்கியுரைசெயநினைக்கிலாயிரநாவுடையோற்குஞ்
                                   சொல்ல லாமோ.

     (இ-ள்.)கடம் களிறு அன்று உரித்த பிரான் - மதயானையை
முன்னொருகாலத்தில்தோலுரித்த சிவபிரான், இடம் கை மலர் -
தாமரைமலர் போலும் (தமது)இடக்கையில், வரி சிலைஉம்- கட்டமைந்த
வில்லும், வலம் கை மலர் - தாமரைமலர்போலும் (தமது)வலக் கையில்,
பாணம்உம்-அம்பும், வெந் இடையே - முதுகிலே, பாணம் அடக்கிய வெம்
கொடுவரி தோல் ஆவம் நாழிகைஉம் - பாணங்களை(த்தன்னுள்ளே)
யடக்கிவைத்துக் கொண்டுள்ள கொடியபுலியின் தோலாலாகிய
அம்பறாத்தூணியும,்மிக அழகு கூர - மிகவும் அழகைப் பொருந்தவும்,
கண்டவர்கள் வெருவர - பார்த்தவர்கள் அஞ்சும்படியாகவும், முன் -
விரைவாக, கொண்ட - எடுத்துக் கொண்ட, கோலம் - வேடவேஷத்தை,
தொடக்கி உரைசெய நினைக்கில்- ஆரம்பித்துச் சொல்ல நினைத்தால்,-
ஆஆயிரம் நாஉடையோற்குஉம் - ஆயிரம் நாவையுடைய
ஆதிசேஷனுக்கும், சொல்லல் ஆம் ஓ-சொல்லுதற்கு முடியுமோ?
[முடியாது];(எ-று.)