பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 73

தறியைமோதி முறிக்கின்ற மதயானையையொத்த, அன்ன சமீரணன் மகளை-
அந்தவாயுவின்புத்திரனான வீமசேனனை, எய்தி-அடைந்து,-செறிவொடு-
மனநெருக்கத்தோடு, அ காளையோடு செப்பிய - இளவெருதுபோன்ற அந்தக்
கீசகனோடு சொல்லிய, யாஉம் - எல்லாவற்றையும், செப்பி-சொல்லி, பிறிது ஒரு
கருத்துஉம் இன்றி - (கீசகன் இறப்பதை எப்போது காணப்போகிறோம் என்ற
எண்ணத்தைத் தவிர்த்து) வேறோரெண்ணமுமில்லாமல், பெரும் பகல் -
நெடிதாகத்தோன்றும் அந்தப்பகற்காலத்தை, போக்கினாள் - அரிதிற்கழித்தாள்;
(எ - று.)-தாம் ஒருகாரியத்தைமுடிவுபெறக்காணும் அவாவுள்ளவர்க்கு அச்
செயல்  நிகழ்வதற்கு முற்பட்டகாலம் நெடிதாகத்தோன்றல் இயற்கை.   (113)

62.-சூரியன் அத்தமித்துஎங்கும் இருள்சூழ, கீசகன்
குறியெல்லையை நோக்கிச்செல்லுதல்.

எல்லையெண்டிசையும்போனவிருளெலாமீண்டுதுன்ற
எல்லையின்றலைவனானவிரவியுங்குடவெற்பெய்த
எல்லையில்காதலோனுமிடையிருளிடையேயந்த
எல்லையைநோக்கிச்சென்றான்யமன்றிசையென்னமன்னோ.

      (இ -ள்.) எண் திசை எல்லைஉம் போன - எட்டுத்திக்கினெல்லை
வரையிலும் ஒதுங்கிச்சென்ற, இருள் எலாம் - இருட்டுமுழுவதும், மீண்டுதுன்ற
- மீண்டு வந்துநெருங்கவும், எல்லையின் தலைவன் ஆன இரவி-
பகற்போதுக்குத் தலைவனான சூரியன், குட வெற்பு எய்தஉம்-
மேற்குமலையாகிய அத்தமனபருவதத்திலே போய்ச்சேரவும். எல்லைஇல்
காதலோன்உம்-(இவ்வளவு என்று) அளவிடமுடியாத காதலையுடையவனான
அந்தக்கீசகனும், இடை யிருளிடைஏ - அந்தநள்ளிரவிலே, யமன் திசை என்ன
- யமனிருக்குமிடம் (நாடிச்செல்வது) போல, அந்த எல்லையை நோக்கி -
(வண்ணமகள் கூறிய) அந்த இடத்தை நோக்கி, சென்றான்-; (எ - று.)-மன் ஓ-
ஈற்றசை.

     கீசகன் இப்போது செல்லும் பயணம் அவன்மரணத்துக்கே ஏதுவாதலால்,
'எல்லையைநோக்கிச் சென்றான் யமன்திசையென்ன' என்று தம் குறிப்பைத்
தெரிவிக்கிறார்.  இரண்டாமடியில், எல்லை என்பதில், ஐ-சாரியை,
திரிபுஎன்னுஞ்சொல்லணிஇதிற் காண்க.  இருள்-இரவுக்கு இலக்கணை.
இடையிருள் - இருளிடை யென்பது முன்பின்னாகமாறிவந்தது:
இலக்கணப்போலி.                                            (114)

63.-வீமன் பெண்கோலங்கொள்ளுதல்.

வடுவறத்தெவ்வர்போருமன்னவனுணவுங்கையால்
அடுதொழிற்குரியசெம்பொன்வரையிரண்டனையதோளான்
உடுமுகத்தின்மைவானமொளியறவிருண்டகங்குல்
நடுவுறப்பொழுதிற்செவ்விநவ்வியர்கோலங்கொண்டான்.

      (இ -ள்.) வடு அற-குற்றம் நீங்க, தெவ்வர் போர்உம் - பகைவர்
போரையும், மன்னவன் உணவுஉம் - அரசனுணவையும், கையால் -