பக்கம் எண் :

76பாரதம்விராட பருவம்

     பெண்ணுருஎன்றதனால் - இயற்கையிற் பெண்ணல்ல:
பெண்ணுருக்கொண்ட ஆடவனான வீமன் எனக் காட்டியவாறு.
அனுவாதத்தால் வீமசேனன் பெண்ணுருக்கொண்டிருந்தமையைத் தெரிவித்தார்.

     இதுமுதல் இருபத்தொருகவிகள் - மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாகிவந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள். (118)

67.-ஆதரத்தாற் சிலகூறிக்
கீசகன் பெண்ணுருவின்தாளிற்பணிந்து வேண்டுதல்.

என்பெருந்தவப்பயனென்றறிந்திலேன்
மின்புரைமருங்குலாய்வேட்கைவிஞ்சலால்
புன்பிழைசெய்தனன்பொறுத்திநீயென
அன்புடன்சிலம்பணியடியில்வீழ்ந்துமேல்.

நான்கு கவிகள் - ஒருதொடர்.

      (இ -ள்.) 'மின் புரை மருங்குலாய்-மின்னலையொத்த இடையை
யுடையவளே! என் பெருந் தவம் பயன் என்று - என்னுடைய (முற்பிறவியிற்
செய்த) பெருத்த நல்வினைப்பயனாகத் தோன்றியுள்ளாய் நீ என்பதை,
அறிந்திலேன்-(முன்னர்) அறியாதவனாய்விட்டேன்: (அதனால்), வேட்கை
விஞ்சலால்-காதல் விஞ்சியதனால், புல் பிழை செய்தனன் - (உன்திறத்திற்)
சிறிய பிழையைச் செய்திட்டேன்: நீ பொறுத்தி-(யான் உன்திறத்துச் செய்த)
சிறுபிழையைப் பொறுப்பாயாக,' என-என்று, அன்புடன்-காதலோடு, சிலம்பு
அணி அடியில் - நூபுரமணிந்த பாதத்தில், வீழ்ந்து - விழுந்து பணிந்து, மேல்
- பிறகு,-(எ - று.)-"எனா மொழிபல கூறினான்" என்று எழுபதாங்கவியில்
தொடர்ந்து முடியும்.  கீசகன்செய்த பிழையை 21 - முதல் 29-வரையிலுள்ள
செய்யுள்களிற் காண்க.                                      (119)

68.-மூன்றுகவிகள் -ஒருதொடர்: பின்னும் காதல்விஞ்சக்
கீசகன் பலமொழி கூறினமைதெரிவிக்கும். 

பைங்குலைக்குரும்பையைப்பழித்தகொங்கையாய்
மங்குலைப்புழுகளைவைத்தகூந்தலாய்
கங்குலிற்கால்வழிகாட்டவந்ததின்று
இங்குலப்புறுமென தாவியீயவோ.

      (இ -ள்.) பைங் குலை குரும்பையை பழித்த கொங்கையாய் -
பசுமையாய்க் குலைகுலையாகவுள்ள குரும்பையை ('இவை எமக்கு ஒப்பாகா'
என்று) ஏளனஞ்செய்த கொங்கையையுடையாய்! மங்குலை புழுகு அளை
வைத்த கூந்தலாய் - இரவைக் கஸ்தூரிப்புழுகெண்ணெய்கொண்டு
தடவிவைத்தாற்போன்றுள்ள கூந்தலையுடையவளே! கங்குலில் -
இந்தநள்ளிரவில், கால்வழி காட்ட - பாதமே (நடந்துசெல்லும்) வழியைக்
காட்டாநிற்க, இன்று இங்கு வந்தது -