பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்161

போகட்டன; எழு கவந்தம்-எழுந்த உடற்குறைகள், பல பவுரிகள் இட்டன-
அநேகவகைப் பௌரியென்னுங் கூத்தை யாடின; எதிர் அழி படை-எதிரிலே
அழிந்தசேனைகள், இரு புறங்கள் இட்டன -இரண்டுபக்கங்களிலும் விழுந்தன;
ஒழுகு செம்புனல் குருதியின் வரும் நதி -வழிகிற செந்நீராகிய
இரத்தவெள்ளத்தாலுண்டானஆறுகள், உததிஉம் சிவப்பு உறும் வகை-(தான்
சென்று சேருஞ்) கடலும் செந்நிறம்மிகும்படி, பெருகலின்-பெருகுதலால், முகிலின்
வெம் குரல் கச தர துரகம்-மேகம்போலப் பயங்கரமான முழக்கத்தையுடைய
யானைதேர்குதிரைகள், முழுகி-(அவ்விரத்தப்பெருக்கில்) அமிழ்ந்து, சுழி இடை
இடை- (அதிலுள்ள)சுழிகளினிடந்தோறும், எஞ்சி யிட்டன - மறைந்து அழிந்தன;

     கரணம் - கூத்தின் ஓர்விகற்பம்; அதனை இடுதல் - ஆடுதல், மிகப்பலர்
இறக்கையில் கவந்தம் எழுந்தாடுதல், முற்கூறப்பட்டது. பவுரி - தானே சுழன்று
ஆடுங்கூத்து.                                               (265)

128. - அபிமன் கதாயுதப்போரி லிளைத்தல்.

முறைமையின்றி யெத்தரணிபர்களுமெதிர் முடுகவந்துமுற்
                              றெறுதலினவரவர்,
பொறையழிந்துகெட்டனைவரும்வெருவொடுபுறமிடும்படிக்
                           கொருதனிபொருதபி,
னிறைவலம்புரித்தொடைகமழ்புயகிரிநிருபதுங்கன்மைத்
                           துனனுளம்வெருவர,
வறைபெருங்கதைப்படைகொடுவலியுறவமர்புரிந்திளைத்
                             தனனடலபிமனே.

     (இ - ள்.) எ தரணிபர்கள்உம்- எல்லா வரசர்களும், முறைமை இன்றி -
(ஒருவர்பின் ஒருவர் என்ற) முறைமை யில்லாமல், முடுக-வேகமாக, எதிர் வந்து-
(தன்னொருத்தனை) எதிர்த்து வந்து, முன் தெறுதலின்- முன்னே போர்செய்தலால்,-
அடல் அபிமன்-வலிமையையுடைய அபிமந்யு,-அவர் அவர் - வந்த வந்த
அவ்வீரர்கள், பொறை அழிந்து- (துன்பத்தைப்) பொறுக்குந் தன்மை யொழிந்து,
கெட்டு-தோற்று, அனைவர்உம்-எல்லோரும். வெருவொடு-அச்சத்தோடு, புறம்
இடும்படிக்கு-முதுகுகொடுக்கும்படி, ஒரு தனி - தன்னந் தனியாய், பொருத பின் -
போர்செய்த பின்பு,-நிறை-நிறைந்த. வலம்புரி தொடை - நஞ்சாவட்டைப்பூமாலை,
கமழ்- வாசனைவீசுகிற புயம்கிரி-மலைகள்போலுந் தோள்களையுடைய, நிருப
துங்கன்-அரசரிற் சிறந்த துரியோதனனுக்கு, மைந்துனன்-உடன்பிறந்தவள்
கணவனானசயத்திரதன், உளம் வெருவர-மனம் அஞ்சும்படி, அறை பெரு கதை
படை கொடு-தாக்குகிற பெரிய கதாயுதத்தால், வலி உற-பலமாக, அமர் புரிந்து-
(அவனுடன்)போர்செய்து, இளைத்தனன்-சோர்ந்தான்:

     ஏற்கனவே தன்னந்தனியனாய் அபிமன் பலருடன் பொருது
இளைத்துள்ளானென்பதை, முன்னிரண்டடிகள் காட்டவந்தன, தெறுதல்-
வருத்துதலென்பாருமுளர். அழிந்துகெட்டு-ஒருபொருட்பன்மொழியுமாம், அறை-
சிறப்பித்துச்சொல்லப்படுகிற என்றுமாம்.                             (266)