பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்173

     இதுமுதல் இருபத்திரண்டு கவிகள் -பதினோராம்போர்ச்சருக்கத்து முதற்கவி
போன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.               (284)

147.- ஸ்ரீக்ருஷ்ணன் அபிமன்யுமரணத்தை நினைந்து
இந்திரனை நினைத்தல்.

போனதுவருவதெல்லாம்புரையறவுணருகிற்கு
மானதிர்கனகத்திண்அடர்வலவனாமதுரைமன்னன்
றேனதிர்கடுக்கைமாலையிடுசெயத்திரதன்றன்னா
லானதுங்குறித்துவானோரரசையுங்குறிக்கலுற்றான்

     (இ-ள்.) போனது வருவது எல்லாம் - நடந்ததும் நடப்பதுமாகிய
செய்கைகளெல்லாவற்றையும், புரை அற-குற்றமில்லாமல், உணருகிற்கும்-அறியவல்ல,
மான் அதிர் கனகம் திண் தேர் வலவன் ஆம்- குதிரைகள் பூட்டிய ஆராவாரிக்கிற
பொன்மயமான வலிய (அருச்சுனனது) தேரைச் செலுத்துகிற பாகனாகிய,
மதுரைமன்னன் வடமதுரைநகரத்து அரசானா கண்ணபிரான், (அப்போது), தேன்
அதிர் கடுக்கை மாலை இடு செயத்திரதன் தன்னால் ஆனதும்உம்  குறித்து -
வண்டுகள் ஆரவாரிக்கிற கொன்றைப்பூமாலையைப் போகட்ட சயத்திரதனா லாகிய
செய்கையையும் [அபிமந்யு மரணத்தையும்] திருவுள்ளத்தில் அறிந்து, வானோர்
அரசைஉம் குறிக்கல் உற்றான் - தேவாரசனான இந்திரனையும் நினைத்தான்;

     இந்திரனை நினைத்தது, இவன்மகனானா அருச்சுனனுக்குப்புத்திர சோகத்தால்
பிராணபாயமுண்டாகாதபடிதடுக்க உபாயஞ்செய்தற்கு என்பது, மேல்விளங்கும்.
போனது வருவது எல்லாம் - ஒருமைப்பபன்மைமயக்கம்: முக்காலத்துவரலாற்றுள்,
முன்பு நடந்தவற்றையும் இனி நடப்பவற்றையும் அறிதலாகிய அருமையான
தன்மையைக் கூறவே, அப்பொழுது நடக்கின்றவற்றை அறிதலாகிய எளியதன்மை
தானே பெறப்படும். உணர்ச்சிக்குக் குறைவு- சந்தேகவிபரீதங்கள். மது என்னும்
அரசனால் சீர்திருத்தி ஆளப்பட்டதனாலும், கண்ணுக்கு இனியதாயிருத்தலாலும்,
மதுரா என்று பெயர்; அது ஈறுதிரிந்தது. இது,  முத்திதரும் நகரம் ஏழனுள் ஒன்று;
மற்றவை-அயோத்தி, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன.      (285)

148.-நான்குகவிகள்-மனத்துவந்தஇந்திரனை 'உன்மைந்தனைக் காவாய்'
என்ன, அவன் முனிவனாகி ஊழாலிறந்தமைந்தனோடுஇறப்பேனென்று
நடிக்க, ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனைக்கொண்டு தடுத்தலைக் கூறும்

மதித்தலுமனத்திற்றோன்றும்வலாரியைக்குறிப்பினாலுன்
கதித்தடந்திண்டேர்மைந்தனுயிரைநீகாத்தியென்னத்
துதித்தவன்றொழுதுமாயச்சூழ்ச்சியான்முனியுமாகி
விதித்தலைப்பட்டகாதற்சுதனுடன்விழுவனென்றான்.

     (இ-ள்.) மதித்தலும்-(கண்ணபிரான்)கருதியவளவிலே,  மனத்தில் தோன்றும்-
அவன்மனத்தில்வந்து காணப்பட்ட வலாரியை- இந்திரனை(ப்பார்த்து), (கண்ணன்),
குறிப்பினால் - இங்கிதத்தால்,