யும் (வேறோராயுதத்தாற்) கொல்வாயாக,' என-என்று சொல்லி, மனம் கொதித்து கன்றலும்-மனம் மிக வெதும்பியவளவில்,- தென்றல்உம் நிலவுஉம் நிகர் என தன்னை சேர்ந்தவர் இளைப்புஎலாம் தீர்ப்பான்-தென்றற்காற்றும் நிலாவும் ஒப்பாம்படிதன்னை யடுத்தவர்களுடைய இளைப்பு முழுவதையுங் களைபவனான கர்ணன், அகணத்து - அந்தக்ஷணத்திலே, அ வேல்-அந்தவேலாயுதத்தை, அவன்மேல் -அந்தக்கடோற்கசன்மேல், காலன் வெம் சூலம் ஒத்து எறிந்தான் - யமனதுகொடியசூலாயுதத்தை (யெறிந்தாற்) போல எறிந்தான்; (எ - று.) 'இப்பொழுது இவ்வேலினால் இவ்வரக்கனைக் கொன்று எம்மையும் எமது சேனையையும் பிழைப்பித்தாற் பின்பு அருச்சுனனை வேறுவகையாற் கொல்லலாம்' என்று கூறித் துரியோதனன் நிர்ப்பந்திக்க, கர்ணன் அங்ஙனே செய்தானென்க. தென்றலும் நிலவும் நிகரெனத்தன்னைச்சேர்ந்தவரிளைப்பெலாந் தீர்ப்பான் - கருத்துடையடைகொளியணி. (607) 211.-கடோற்கசன் இறத்தல். எறிந்தவேல்பகைவன்மார்பகந்துளைத்திட்டிந்திரனிடத்து மீண்டெய்த மறிந்தமால்வரைபோலரக்கனுமுகம்பார்மருங்குறவிழுந்துயிர் மடிந்தான் செறிந்தருகணைந்தசேனையும்பயந்தோர்சிந்தையுஞ் செயலறக்கலங்க வறிந்தவர்க்கன்றியறியொணாவையனவர்துயரகற்று மாறுரைப்பான். |
(இ-ள்.) எறிந்த வேல் - (கர்ணன்) வீசிய வேற்படை, பகைவன் மார்பகம் துளைத்திட்டு - பகைவனான கடோற்கசனது மார்பினிடத்தை நன்றாகத்துளைத்து, இந்திரனிடத்து மீண்டு எய்த - (தனக்கு உரியவனான)இந்திரனிடத்திலே மீண்டுசென்று சேர,-அரக்கன்உம்-கடோற்கசனும், மறிந்த மால் வரை போல் - கவிழ்ந்துவிட்ட பெரிய மலைபோல, பார் மருங்கு முகம் உற விழுந்து-தரையிலே முகம்படும்படி கவிழ்ந்துவிழுந்து, உயிர்மடிந்தான் - இறந்தான்; (அப்பொழுது), செறிந்து அருகு அணைந்த சேனைஉம் - அடர்ந்து அருகிலெடுத்துள்ள பாண்டவர்சேனையும், பயந்தோர் சிந்தைஉம் - (அவனது) தந்தையரான பாண்டவரது மனமும், செயல் அற கலங்க - செய்தொழிலொன்று மில்லாதபடி கலக்கமடைய,-அறிந்தவர்க்கு அன்றி அறிய ஒணா ஐயன் - தந்துவஞானமுடையோர்க்கேயன்றி (மற்றையோர்க்கு)-அறிய முடியாத கடவுளான கண்ணன், அவர் துயர் அகற்றும் ஆறு உரைப்பான் - அவர்களுடைய துன்பத்தைப்போக்கும் பொருட்டுச் சொல்வான்; (எ - று.) -அதனை அடுத்த இரண்டுகவிகளிற் காண்க. பெரியதாதையையும் சிறியதாதையரையுஞ் சேர்த்து 'பயந்தோர்' என்றது, உபசாரவழக்கின்பாற்படும். (608) 212.-இதுவும், அடுத்தகவியும்-ஒருதொடர்: கிருஷ்ணன் பாண்டவர்க்குச் சமாதானங்கூறலைத் தெரிவிக்கும். இந்தவேல்கவசகுண்டலங்கவர்நாளிரவிமைந்தனுக்குத் தந்தவேலிதனையாவர்மேல்விடினுந்தரிப்பறத்தெறுமவன்வரத்தால் |
|