பக்கம் எண் :

40பாரதம்துரோண பருவம்

செருவிலரியேறனையான்றிட்டத்துய்மனும்வெகுண்டு
பொருசிலைவெங்கணைபொழிந்தான்போர்வேந்தர்பலர்மடிந்தார்

     (இ-ள்.) இருவர் பெரு சேனைஉம் - (இந்த) இருதிறத்தாரது பெரிய
சேனைகளும், எதிர் எதிர் உற்று - ஒன்றற்கொன்று எதிராகப் பொருந்தி, ஆயுதம்
ஏந்தி - ஆயுதங்களை யெடுத்துக்கொண்டு, ஒருவர் ஒருவரை வேறற்கு ஒண்ணாத
அமர் - ஒருதிறத்தார் மற்றொருதிறத்தாரைச் சயித்தற்கு முடியாத போரை, உடற்ற,
-உக்கிரமாகச்செய்ய, (அப்பொழுது), செருவில் அரி ஏறு அனையான் - போரில்
ஆண்சிங்கத்தை யொத்தவனான, திட்டத்துய்மனும்-, வெகுண்டு - கோபித்து,
பொருசிலை - போருக்குரிய வில்லினின்று, வெம் கணை - கொடிய அம்புகளை,
பொழிந்தான் - சொரிந்தான்; (அதனால்), போர் வேந்தர் பலர் மடிந்தார் -
போர்செய்கிற பகையரசர் அநேகர் இறந்தார்கள்; (எ-று.) - பி-ம்
ஆயுதமெடுத்தங்கு.                                           (56)

12.- திருஷ்டத்யும்நனாலழிந்த சேனை துரோணனை யடைதல்.

துன்முகனைப்புறங்கண்டுதுன்மருடன்முனைசாய்த்து
கன்முகமாங்காந்தாரர்கலிங்கர்கவுசலர்நிடதர்
புன்முகராயிளைத்தோடப்பொருதழித்தான்பொருதழிந்த
மன்முகவெம்பெருஞ்சேனைமறையவன்பாலடைந்தனவே.

     (இ -ள்.) (திட்டத்துய்மன்), - துன்முகனை - துர்முகனென்னும் அரசனை,
புறம்கண்டு - முதுகுகொடுக்கச்செய்தும்,- துன்மருடன் - துர்மர்ஷணனென்பவனது,
முனை - போரை, சாய்த்து - ஒழித்தும்,- கல் முகம் ஆம் - கல்லின்தன்மையுடைய,
காந்தாரர் - காந்தாரதேசத்துவீரரும், கலிங்கர் - கலிங்கதேசத்துவீரரும், கவுசலர் -
கோசலதேசத்துவீரரும், நிடதர் - நிஷததேசத்துவீரரும், புல் முகர் ஆய் - வாடிய
முகமுடைவர்களாய், இளைத்து ஓட - மெலிந்து தோற்று ஓடும்படியும், பொருது -
போர்செய்து, அழித்தான் - சிதைத்தான்: பொருது அழிந்த -(அங்ஙனம்)
போர்செய்து சிதைந்த, மன் முகம் வெம் பெரு சேனை -மிகுதியைத்
தன்னிடத்திலுடைய கொடிய பெரிய சேனைகள், மறையவன்பால்அடைந்தன -
துரோணாசாரியனிடம் சேர்ந்தன; (எ-று.)

     துர்முகன் என்பதற்கு - கொடிய முகமுடையவனென்றும், துர்மர்ஷணன்
என்பதற்கு - (பகைவராற்) பொறுக்கவொண்ணாதவனென்றும் பொருள்.
இவ்விருவரும் துரியோதனன் தம்பியர். துன்மருடன் - மகாரதவீரரில் ஒருவன். கீழ்
அணிவகுப்புச்சருக்கத்தில் இவனை மகாரதனாகவும், மற்றைத் துரியோதனன்
தம்பிமார்களை அர்த்தரதராகவும் பிரித்து வகுத்துக் கூறியுள்ளமை காண்க. கல் -
வலிமைக்கு உவமை. கல்முகமாங் காந்தாரர் - கல் நெஞ்சரான காந்தாரருமாம்;
என்றது, அந்நாட்டரசனான சகுனி கொடுமனத்தவ னாதலால். 'கோஸலம் என்ற
வடசொல்- க உஸல எனப் பிரிக்கப்பட்டு, படைத்தற்கடவுளான பிரமனும் உல்லாஸப்
படத்தக்க தென்னும் பொருளைத் தரும். இப்பெயரால் அந்நாட்டின் சிறப்பு
விளங்கும். நிடதம் - நிஷதம் என்னும் வடசொல்லின் திரிபு; இதற்கு - (பலருந்)
தங்குமிட மென்று வடநூலார்