பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்43

யாமல், அரிது - அருமையாக, பொருத பின் - போர்செய்தபின்பு, நிறம் ஒன்றும் -
ஒளிபொருந்திய, ஏழுபகழி - (தருமபுத்திரன்எய்த) எழம்புகள், நிருபன் தன்மார்பு -
துரியோதனனது மார்பில், குருதி பொழிய - இரத்தம் வழியும்படி, முழுகின-;
(எ -று.)-முழுகுதல் - நெடுந்தூரம் பாய்தல்.                         (76)

77.-துரியோதனனம்புகளினால் தருமன்மார்பிற்
குருதிசொரிதல்.

விரிகின்றநீலகிரியிலிளவெயில் விழுகின்றதாரையனையவழ
                                         கொடு,
சொரிகின்றசோரியுடையமகிபதி சுளிவின்றிமீளவொருகைந்
                                    நொடியினின்,
முரிகின்றநீடுபுருவநிகரென முனைகின்றசாபமுரியவிரைவொடு,
தெரிகின்றகோல்கண்முழுகியறனரு டிருமைந்தன்மார்புகுருதி
                                     பொழியவே.

இதுமுதல் மூன்றுகவிகள் - குளகம்

     (இ -ள்.) விரிகின்ற - பரந்த, நீலகிரியில் - நீலநிறமாகிய மலையில்,
இளவெயில்- இளஞ்சூரியகிரணம், விழுகின்ற-, தாரை- ஒழுங்கை, அனைய - ஒத்த,
அழகொடு- அழகுடனே, சொரிகின்ற சோரி உடைய- (மார்பில்) வழிகிற
இரத்தத்தையுடைய,மகிபதி- (துரியோதன) ராசன், சுளிவு இன்றி - வாட்டமில்லாமல்,
மீள - திரும்பவும்,ஒரு கை நொடியினில் - ஒருகைந் நொடிப்பொழுதிற்குள்ளே,
முரிகின்ற நீடு புருவம்நிகர் என - நெறிகின்ற நீண்ட புருவம் ஒப்பென்னும்படி,
முனைக்கின்ற சாபம் முரிய- பொருகின்ற வில் வளைவுற,(அதில்), விரைவொடு
தெரிகின்ற - வேகத்தொடுஆராய்ந்து விடுகிற, கோல்கள் - அம்புகள், முழுகி -
அழுந்துதலால், அறன் அருள்திரு மைந்தன் மார்பு - தருமராசன் பெற்ற சிறந்த
குமாரனாகிய யுதிட்டிரனதுமார்பிலே, குருதி பொழிய - இரத்தம் வழியாநிற்க;

     நீலகிரி - இந்திரநீலரத்தினமயமான மலை: இது - கருநிறமுடைய
துரியோதனனது வலிய பரந்த மார்புக்கும், அதில் விழுந்துவிளங்குகிற
இளவெயில் -மார்பிற் பெருகிவழிகிற செந்நீர்க்கும் உவமை. புருவங்கள்
கோபத்தால்நெறிப்படைதல் - அம்பையெய்யும்போது வில் அசைவுறுதற்கு
உவமை. முழுகி =முழுக.                                        (77)

78.- தருமன் துரியோதனனது தேர்முதலியவற்றை யழித்தல்.

மருமங்கள் சோரிவடியவிருவருமலைகின்றபோதின்மதுகை
                                    நிலையொடு,
தருமன்குமாரனகைகொடவனிபர் தலைவன்குமாரனுரக துவசமு,
மருமந்ததேரும்விசயவலவனு மடல்கொண்டுபாய்புரவியு மழிவுற,
வுருமஞ்சநாணியெறியுமொலியெழவொளிவிஞ்சுநாலுப
                                      கழியுதையவே.

     (இ-ள்.) மருமங்கள் - மார்புகள், சோரி வடிய - இரத்தம் வழியும்படி,
இருவரும் -, மலைகின்ற போதில்-,- தருமன் குமாரன் - தருமபுத்திரன், மதுகை
நிலையொடு - வலிமையான நிலையோடு (நின்று), நகை கொடு - (கோபத்தாற்)
சிரித்துக்கொண்டு,- அவனிபர் தலைவன் குமாரன் - அரசர்க்கு அரசனான
திருதராட்டிரனது புத