தன்னுடையபெரிய கையினால், கொன்றான் - கொன்றிட்டான்; (ஆதலால்), வேறு ஒருவர் நின்னுடன் போர் மலைவரோ - (இவனை யொழிய) வேறொருவர் உன்னுடன் (இப்பொழுது) போர்செய்தற்கு உரியரோ? [அல்லரென்றபடி]; விளம்புவதோ - இதைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? (எ - று.) ஆல் - அசை. முதலடியிற் கூறியது, துரியோதனன் வீமனுக்கு நஞ்சூட்டியதும், அவனைக் கயிறுகளாற் கட்டிக்கங்கையிலெறிந்ததும், கழுவேற்றத் தொடங்கியதும் முதலியவற்றையென்க. 'எண்ணில் எண்ணொணாது' என்பதற்கு - கணக்கினால் அளவிட முடியாதென்றும், மனத்தில் நினைத்தற்குங்கூடாதபடி மிகக் கொடியதென்றும் பொருள் கொள்ளலாம். ஒணாது -ஒன்றாது என்பதன் மரூஉ. புகுதும் என்ற பெயரெச்சத்தில், து-சாரியை.உரையா - உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம். (142) 143. | வில்லாலும்வாளாலும்வேலாலும்பரிநெடுந்தேர்வேழத்தாலும், தொல்லாண்மைதவறாமற்செருமலைந்தோர்சான்றாகச்சூழ்ந்து நிற்பப், புல்லாரைப்புறங்காணும்போர்வேலோயிருவருநீர்பொருது நும்மில், வல்லார்கள்வென்றிபுனைந்தவனிதலம்பெறுமிதுவேவழக்கு மென்றான். |
(இ -ள்.) புல்லாரை - பகைவர்களை, புறம் காணும் - வென்று முதுகுகாணவல்ல, போர்வேலோய் - போர்த்தொழிற்குரிய வேல் வல்லமையுடையவனே! வில்லாலும்-வில்லைக்கொண்டும், வாளாலும் - வாளைக்கொண்டும், வேலாலும் - வேலைக்கொண்டும், பரி நெடு தேர் வேழத்தாலும் -குதிரையும் பெரியதேரும் யானையும் என்னும் இவற்றைக்கொண்டும், தொல்ஆண்மை தவறாமல் - தொன்று தொட்டுவருகிற (தமது) பராக்கிரமந் தவறாமல்,செரு மலைந்தோர் - போர்செய்த வீரர்கள், சான்று ஆக-சாட்சியாக, சூழ்ந்துநிற்ப-சுற்றி நிற்க, நீர் இருவரும் - நீங்கள் இரண்டுபேரும், பொருது -போர்செய்து, நும்மில் வல்லார்கள் வென்றிபுனைந்து - உங்களுள் வல்லவர்கள்வெற்றியை யடைந்து, அவனிதலம் பெறும் - பூமியைப் பெற்றுக்கொள்ளுதலாகிய, இதுவே - இச்செயலே, வழக்கும் - நீதியுமாம், என்றான் -என்று (கண்ணன்) கூறினான்; (எ - று.) இன்னார் வெல்பவரென்பது துணியலாகாதென்னுங் கருத்துப்பட 'வல்லார்கள் வென்றிபுனைந்து' எனப் பன்மையாக் கூறினான். முதலடி - அறுவகைத் தானையையுங் கூறியது, 'நீர் இருவரும்' என்றது, முன்னிலைப்படர்க்கை வழுவமைதி; 'நீரிருவிரும்' என்பது வழாநிலையாம். துரியோதனனுக்குப் போரில் உற்சாகத்தை மூட்டும் பொருட்டு 'புல்லாரைப் புறங்காணும் போர்வேலோய்' என்றும், 'இருவருநீர் பொருது நும்மில்வல்லார்கள் வென்றிபுனைந்து அவனிதலம் பெறுமிது' என்றுங் கூறியருளினான்; 'பொருது வென்றிபுனைந்து அவனிதலம் பெறு மிதுவே வழக்கும்' - இது வரையில் நீ வல்லடி வழக்காய் அரசுமுழுவதுங் கைப்பற்றி யாண்டு வந்தது அநீதி என்றபடி. (143) |