யழித்துஅரசுரிமை முழுவதும் பெறுதல் எளிதென்பதுபட இரண்டாமடியிற் கூறியது. உன் உடன்பிறந்தார் நால்வருள் அருச்சுனனிடத்து மதிக்கப்படுகிற சிறிது பலபராக்கிரமமும் அவனுக்கு இயல்பாய் அமைந்ததன்று; கண்ணன் தேர் செலுத்துதலாலாகிய செயற்கை யாற்றலேயாம். அந்தக்கண்ணன்தானும் நேர்படநின்று வெற்றிகாட்டுந் திறமுடையானல்லன்; மாயையை மேற்கொண்டேதொழில்செய்யுந் தரமுடையா னென்று பழிப்பான், 'மாயோனடத்து தேருடையநுசன்' என்றான். உலகுஒருகுடைமாநீழல் வைத்தல் - பூமிமுழுவதையுந் தனியே அரசாளுதல். வாளாண்மை - ஆயுதங்களாற் செய்யுந் திறமை; வாள் - இங்கே, ஆயுதப்பொது. மூவர் - தொகைக்குறிப்பு. இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் கருவிளச்சீர்களும், இரண்டாஞ்சீரும் ஆறாஞ்சீரும் தேமாச்சீர்களும், மூன்றாஞ்சீரும், ஏழாஞ்சீரும் புளிமாச்சீர்களும், நான்காஞ்சீரும், எட்டாஞ்சீரும்கூவிளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியசந்தவிருத்தங்கள். தனதனதானா தனத்த தானன தனதன தானா தனத்த தானன என்பது,இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். (166) 167.-இருவரும் போர்தொடங்கல். நடையொழியாதோன்விறற்குமாரனு நயனமிலாதோன்முதற் குமாரனும், அடலொடுகார்வானிடிக்குமாறென வதிர்வுறவேயோடிமத்த வாரணம், விடையரிமாவேறெனப்ரதாபமும் விசயமும்மேன்மேன் மிகுத்துமேலிடு, கடையுகநாள்வாயுவொத்துநீடியகதைகெழுபோராதரித்துமூளவே. |
(இ -ள்.) நடை ஒழியாதோன் - (எப்பொழுதும்) சஞ்சரித்தல் இடையறாதவனான வாயுதேவனது, விறல் குமாரனும் - வெற்றியையுடைய மகனான வீமசேனனும், நயனம் இலாதோன் - கண்களில்லாதவனான திருதராட்டிரனது, முதல் குமாரனும் - முதல்மகனான துரியோதனனும்,- அடலொடு கார் வான் இடிக்கும் ஆறு என - வலிமையோடு கார்காலத்துமேகம் இடியிடிக்கும் விதம்போல, அதிர்வு உற - அதிர்ச்சியுண்டாக, ஓடி - விரைந்து வந்து நெருங்கி,-மத்தம் வாரணம் (என) -மதயானைகள்போலவும், விடை (என) - விருஷபங்கள் போலவும், அரி மாஏறு என - ஆண்சிங்கங்கள் போலவும், ப்ரதாபமும் விசயமும் மேல் மேல்மிகுத்து - பராக்கிரமமும் வெற்றியும் மேன்மேல் அதிகமாகப்பெற்று,-யுகம்கடை நாள் மேல் இடுவாயு ஒத்து - கற்பாந்தகாலத்தில் மிகுதியாக வீசுகிறஊழிப்பெருங்காற்றைப் போன்று [மிக உக்கிரமாய்], நீடிய கதை கெழு போர்ஆதரித்து மூள - நீண்ட கதாயுதங்களைக்கொண்டு செய்யும் போரைவிரும்பிமுயல; (எ - று.) மத்தவாரணம், ப்ரதாபம் - வடசொற்கள். (167) |