யாகவும்,அஃது இரட்டி கொண்டது ஓரடியாகவும் நின்ற கழிநெடிலடி நான்குகொண்ட சந்தக்கட்டளைக்கலிப்பாக்கள். கீழ்வந்த 166 - ஆம் கவி முதலியன, இங்ஙனமே நிரையசை முதலதாய் அரையடிக்கு ஒற்றொழித்து எழுத்துப்பன்னிரண்டு பெற்று வந்தனவாயினும் முதலில் மாச்சீர்பெற்றுவாராமையால்கட்டளைக் கலிப்பாவாகக் கொள்ளப்படாமல் எண்சீராசிரிய விருத்தமாகக்கொள்ளப்பட்டன வென்க. தானதந்தன தானன தானன தான தந்தன தானன தானன-என்பது, அவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். (178) 179.-அந்தஉக்கிரயுத்தத்தால் உலகத்திலுண்டான குழப்பம். மேவுசிங்கவியாளவிலோதனர்வீசுகின்றகதாரவமேலிட வாவுவெம்பரியாதவனுந்தடுமாறிநின்றனன்வானவர்தானவர் நாவடங்கினர்மாமுனிவோரொடுநாகரஞ்சினர்நான்முகனாதிய மூவருஞ்செயலேதெனநாடினர்மோழைகொண்டது மூடியகோளமே. |
(இ -ள்.) மேவு - பொருந்திய, சிங்க வியாள விலோதனர் - சிங்கத்தின்வடிவத்தையும் பாம்பின்வடிவத்தையும் முறையே எழுதிய கொடியையுடையவீமனும் துரியோதனனும், வீசுகின்ற - வீசித்தாக்குகிற, கதா-கதாயுதங்களின்,ரவம் - ஓசை, மேல்இட - அதிகப்படுதலால்,-வாவு வெம்பரி ஆதவனும் -தாவிச்செல்கிற வெவ்விய தேர்க்குதிரைகள் பூண்ட சூரியனும், தடுமாறிநின்றனன் - தடுமாற்றமடைந்து நின்றான்; வானவர் தானவர் - தேவர்களும்அசுரர்களும், நா அடங்கினர் - பேச்சு ஒடுங்கினார்கள்; மா முனிவோரொடு -சிறந்த முனிவர்களும், நாகர் - பாதாளலோகத்தவரும், அஞ்சினர் -பயப்பட்டார்கள்; நான்முகன் ஆகிய மூவரும் - பிரமன் முதலியதிரிமூர்த்திகளும், செயல் ஏது என நாடினர் - செய்தற்குரியது யாதென்றுஆலோசித்தார்கள்; மூடிய கோளம் - (உலகத்தைக்) கவிந்துமூடியுள்ளஅண்டகோளம், மோழை கொண்டது - (ஒருபுறத்தில்) வெடிப்பையடைந்தது; (எ - று.) தாநவர் - தநுவின்மக்கள். நான்முகன் - நான்குதிசையையும் நோக்கியநான்குமுகமுடையவன். மூவர் - பிரமவிஷ்ணுருத்திரர், செயல் இதற்குப்பரிகாரமாகச் செய்யுந்தொழில். இனி, செயல் ஏது என நாடினர் - இங்ஙனம்குழப்பமுண்டாதற்குக் காரணமானசெய்கை யாதென்று நோக்குவாராயினர்எனினுமாம். மோழைகொண்டது - உடைந்தது என்றபடி. முனிவர் -முனிவோர் என, ஈற்றயல் அகரம் ஓகாரமாயிற்று. இது, உயர்வுநவிற்சியணி. (179) 180.-துரியோதனனைக்கொல்லும் வகை யாதென்று அருச்சுனன் கண்ணனை வினாவல். தார்வலம்புரியானொடுபோரழிதாழ்வுகண்டனன்வீமனை வாசிகொள் தேர்விடுந்திருமாலடிநீண்முடிசேரநின்றுரையாடினன்மாருதி நேர்தளர்ந்தனன்யாதுகொலோசெயனீமொழிந்தருள் வாயெனவானவர் ஊர்புரந்தவனோதமுராரியுமோதினன்பரிவோடவனோடிவை. |
|