பக்கம் எண் :

62பாரதம்சல்லிய பருவம்

                    யொருதனிநிழற்றக்கரைகாணாத,
உவரிநிகற்பெருஞ்சேனை வெள்ளஞ்சூழவுயிரனைய
                       துணைவருடன்மாமன்சூழத்,
தவர்முதலாம்படைகளொடுதன்னைவென்றுதரணிகொளவரு
                      நிருபன்றன்னைச்சார்ந்தான்.

     (இ -ள்.) அவர் அளவோ - அவ்வெழுநூறுபேர் மாத்திரமோ, அரவு
உயர்த்த அரசன்தானும் - பாம்புக்கொடியை உயரநாட்டிய துரியோதனராசனும்,
ஆகுலத்தோடு - வருத்தத்துடனே, அருசமரில்-அரிய போரில், அரி ஏறு
என்ன -   ஆண்சிங்கம்போல, கவரிபுடை பணி மாற-சாமரங்கள் பக்கங்களில்
வீசவும், ஒருதனி தவளம் கொற்றம் கவிகைநிழற்ற - ஒப்பற்ற ஒற்றை
வெண்கொற்றக்குடை நிழலைச்செய்யவும், கரை காணாத உவரி நிகர் பெரு
சேனை வெள்ளம் சூழ-கரைகாணவொண்ணாத கடல்போன்ற பெரிய
சேனைத்தொகுதி சூழ்ந்துவரவும், உயிர் அனைய துணைவருடன் மாமன்சூழ -
தனது உயிர்போன்ற தம்பிமார்களுடன் மாமனான சகுனியும் சுற்றிலும் வரவும்,
தவர் முதல் ஆம் படைகளொடு - வில்முதலிய ஆயுதங்களுடனே,
தன்னைவென்று தரணி கொள வரும் நிருபன்தன்னை சார்ந்தான் - தன்னைச்
சயித்துப் பூமியைப்பெற்றுக் கொள்ளுதற்கு வருகிற தருமராசனை
நெருங்கினான், (எ - று.)

     அரவுபாம்பின்வடிவ மெழுதிய கொடிக்கு, இருமடியாகுபெயர், கவிகை-
கவிந்துள்ளது.  அரியேறென்னச் சார்ந்தானென இயையும், வெள்ளம்-
ஒருபெருந்தொகை, தவர்-வில்.                           (75)

76.- வீமன் முதலியோர்பகைவர்களை யெதிர்த்தல்.

வீமன்முதற் றம்பியரும்பொருவிலாத வெஞ்சேனைத்தலைவரும்
                                  போர்வென்றிகூருஞ்,
சோமகருமுதலாயதறுகண்வீரர்தும்பிகளையரியினங்
                                     கடுரக்குமாபோல்,
தாமமணித்தடஞ்சிகரத்தோளுமார்புஞ்சரமுழுகத்தனுவணக்கிச்
                                       சாய்ந்தசோரி,
பூமுழுதும் பரந்துவரப்பொருதவீரம்புலவோர்க்கு மதிசயித்துப்
                                         புகலலாமோ.

     (இ -ள்.) வீமன் முதல்-வீமசேனன் முதலான, தம்பியரும்-(தரும
புத்திரனது) தம்பிமார் நால்வரும், பொருவு இலாத - ஒப்பிலாத, வெம்
சேனைதலைவரும் - கொடிய சேனைத்தலைவர்களான திட்டத்துய்மன்
முதலியோரும்,போர் வென்றி கூரும் - போரில் வெற்றி மிகுகிற, சோமகரும்-
சோமககுலத்துவீரர்களும், முதல் ஆய - முதலான, தறுகண் வீரர் -
அஞ்சாமையையுடைய வீரர்கள், தும்பிகளை அரி இனங்கள் துரக்கும் ஆ
போல் - யானைகளைச்சிங்கக்கூட்டங்கள் ஓடச்செல்லும்விதம்போல,
(பகைவரையெதிர்த்து),- தாமம்-(போர்) மாலையை யணிந்த, மணி-அழகிய,
தட - பெரிய, சிகரம்-மலைச்சிகரம் போன்ற, தோளும் - அவர்கள்
தோள்களிலும், மார்பும் - மார்பிலும், சரம் முழுக-அம்புகள் தைத்து
அழுந்தும்படி, தனு வணக்கி-வில்லை வளைத்து, சாய்ந்த சோரி பூ முழுதும்
பரந்துவர - (அவர்களுடம்பு) சொரிந்தஇரத்தம்பூமிமுழுவதிலும்பரவிவரும்படி,
பொருத - போர் செய்த, வீரம் - வீரத்தன்மை, புலவோர்க்கும் அதிசயித்து
புகலல் ஆமோ-விசேஷஞானமுடைய தேவர்களும் கொண்டாடிச் சொல்லக்
கூடியதோ? [அன்று என்றபடி]: (எ - று.)