45. பதினேழாம் போர்ச் சருக்கம்

கடவுள் வாழ்த்து

ஈர் ஒரு பிறப்பின் ஒரு சிறு குறளாய், யாவரும் தேவரும் வியப்ப,
கார் ஒரு வடிவு கொண்டெனச் சென்று, காவல் கூர் மாவலி அளித்த
நீர் ஒரு கரத்தில் வீழும்முன், தரங்க நீல் நிற மகர நீர் உடுத்த
பார் ஒரு கணத்தில் அளவிடும் கமல பாதனார் நாதனார், நமக்கே.

1
உரை
   


முன் நாள் தோற்ற மன்னரும் சேனைகளும் புடை சூழ,
கன்னன் துரியோதனனோடு களம் புகுதல்

அற்றை வெஞ் சமரில் அமர் முனைந்து ஆற்றாது அழிந்துபோம்
                                   அவனிபர் பலரும்,
மற்றை நாள், 'அகில புவனமும் இன்றே மடியும்' என்று,
                                   அனைவரும் மயங்க,
ஒற்றை வெண் சங்கும் பல் வகைப் பறையும் ஓத வான் கடல்
                                   என ஒலிப்ப,
கற்றை வெண் கவரி கால் பொர, தனிப் பொற் கவிகை நீழலில்
                                   களம் கலந்தார்.

2
உரை
   


எண்-இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு
                                   எழுந்தன என்னும்
வண்ணம், ஓர் அளவு இல் வாசியும், தேரும், மத சயிலமும்,
                                   பதாதிகளும்,
விண்ணும் மண்ணகமும் தெரிவுறா வழக்கின் வெங் களம்
                                   முழுவதும் கஞல,
அண்ணல் அம் தடக் கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை
                                   அரசுடன் அடைந்தான்.

3
உரை
   


சென்னியில் மகுட மணி வெயில் எறிப்ப, திருக் குழை மணி
                                   வெயில் எறிப்ப,
மன்னிய பொலம் பூண் மணி வெயில் எறிப்ப, வனை கழல் மணி
                                   வெயில் எறிப்ப,
தன்னை முன் பயந்தோன்தன்னினும் வடிவம் தயங்கு செஞ் சுடர்
                                   வெயில் எறிப்ப,
கன்னன் அன்று இருந்த அழகினை யாரே கண்டு கண்
                                   களிப்புறாது ஒழிந்தார்?

4
உரை
   


தம்பியர் முதலியோர் சூழத் தேரில் நின்ற தருமன், 'இன்று
கன்னன் இறப்பானோ?' என்று கண்ணனிடம் உசாவுதல்

ஒருங்கு அளப்பு அரிய பதாகினிக் குழாமும், உயிர்க்கு
                                   உயிரான தம்பியரும்,
அருங் களக்கனி கொள் வண்ணனும் தானும், அறன் அருள்
                                   அறனுடை அரசன்,
பெருங் களப் பரப்பின் அணி பெற அணிந்து, பேர் உலகு
                                   உய்யுமாறு இருண்ட
கருங் களத்தவனைக் காசினித் தேர்மேல் கண்டென, காணுமா நின்றான்.

5
உரை
   


நின்ற அக் குரிசில் அருச்சுனன் தேர்மேல் நின்றருள் நீல
                                   மேனியனை, மன்றல் அம் துளப மாலை
மாதவனை, வழிபடுமவர்க்கு வான் துணையை, தன் தடங் கண்ணோடு
                                   இதயம் முத்து அரும்ப, தாள்
இணை முடி உற வணங்கி,
'இன்றை வெஞ் சமரில் இரவிதன் சேய் வான் எய்துமோ? இயம்புதி!'
                                   என்றான்.

6
உரை
   


'கன்னன் இன்றும், துரியோதனன் நாளையும், மடிய
அவனி நின்னதாம்' என்று கண்ணன் உரைத்தல்

'இத் தினம் இரவி சிறுவனும் விசயன் ஏவினால் இறந்திடும்; நாளைத்
தத்தின புரவித் தேர்ச் சுயோதனனும் சமீரணன் தனயனால் மடியும்;
அத்தினபுரியும் ஈர்-இரு கடல் சூழ் அவனியும் நின்ன
                                   ஆம்' என்றான்-
சித்தினது உருவாய் அகண்டமும் தான் ஆம் செய்ய கண் கருணை
                                   அம் திருமால்.

7
உரை
   


தருமன் கண்ணன் செய்த உதவியை நன்றியுடன்
பாராட்டி, பாதங்களில் வீழ்ந்து பணிதல்

செங் கண் மால் உரைத்த இன் சொல் ஆர் அமுதம் செவிப் பட,
                                   சிந்தனை தெளிவுற்று,
'எங்கள் மானமும்' தொல் ஆண்மையும் புகழும் நீ அலால், யார்
                                   நிலையிடுவார்?
வெங் கண் மாசுணத்தோன் வஞ்சனைக் கடலின் வீழ்ந்து
                                   அழுந்தாவகை எடுத்து, இன்று
அம் கண் மா நிலமும் தந்தனை!' எனப் பேர் அறத்தின் மா மகன்
                                   இவை உரைப்பான்:

8
உரை
   

'பொங்கு அழல் சிந்தைச் சுயோதனன் கங்கைப் புனல்
                               விளையாட்டிடைப் புதைத்த
வெங் கழு முனையில் விழாமல், ஓர் அளி ஆய், வீமனுக்கு
                               ஆர் உயிர் அளித்தாய்;
பைங் கழல் அரசர் அவையினில் யாமும் பார்த்திருந்து அலமர,
                               பயந்த நுங்கு அழல் அனையாள்
நாணமும் துகிலும் நோக்கினை-காக்கும் நாயகனே!
9
உரை
   

'கானக மருங்கில், மேவலன் பணியால், கடும் பசியுடன் வரும் கடவுள்
                                   மானவ முனிவன் தாபமும்
சாப வருத்தமும் உறாவகை ஒழித்தாய்;
யான் ஒரு பொருளாத் தூது சென்றருளி, எதிர் இலா விதுரன்
                                   வெஞ் சிலையும்,
பானுவின் மதலை கவசமும், அகற்றி, பரிந்து பல் வினைகளும்
                                   புரிந்தாய்;
10
உரை
   


'களப் பலி நாக கன்னிகை புதல்வன் கருதலான்தனக்கு நேர்ந்திடவும்,
கிளப்ப அருந் திதியை மயக்கி, வான் மதியம் கிளர் ஒளி
                                   அருக்கனைக் கேட்ப,
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி,
உளப் பொலிவுடனே விசயனுக்கு அருளால், உருளுடைக் கொடி
                                   கொள் தேர் ஊர்ந்தாய்;

11
உரை
   


'அஞ்சியோ, அன்றி அருள்கொலோ, அறியேன்; ஆகவத்து
                                   அடுதொழில் மறந்த
வெஞ் சிலை விசயற்கு உள்ளவாறு உணர்த்தி, மீளவும்
                                   பொரும்படி விதித்தாய்;
வஞ்சினம் மறந்து, நேமியும் தரித்து, வலம்புரி குறித்து, மூதாதை
துஞ்சிட அமரில் சிகண்டி செய் தவத்தின் தொடர் பயன்
                                   வழாவகை துரந்தாய்;

12
உரை
   


'ஒரு பகல் விசயன் மார்பம் ஊடுருவ ஒழுகு வெங்
                                   கடத்து ஒருத்தலின்மேல்
வரு பகதத்தன் எறிந்த வேல் உன்தன் வண் துழாய்
                                   மார்பகத்து ஏற்றாய்;
பொரு பகை அரசர் பலர் பட, அபிமன் பொன்றிய பொழுது,
                                   செந் தழலின்
நிருபனை முனியால் விழாவகை விலக்கி, நிசியில் வெங்
                                   கயிலையும் கண்டாய்;

13
உரை
   


'வருணன் மா மதலை வாசவன் மதலை மார்பினில் எறிந்த
                                   வெங் கதையைக்
கருணையால் மருமம் புதைய ஏற்று, அந்தக் காளை
                                   கையறும்படி கண்டாய்;
தருண வாள் நிருபர் மயங்கி வீழ்தர வெண்-சங்கமும் முழக்கி,
                                   நேமியினால்
அருணன் ஆதபத்தை மறைத்து, இரவு அழைத்து, ஆங்கு அபிமனுக்கு
                                   அரும் பழி கொண்டாய்;

14
உரை
   

'ஏ வருஞ் சாப பண்டிதன் புதல்வன் ஏவிய ஏவினால் யாங்கள்
வீ வரும் தன்மை அறிந்து, வாகனமும் விறல் படைகளும்
                                   ஒழித்திட்டாய்;
மூவரும் ஒருவர் ஆகி நின்றருளும் மூர்த்தியே! பார்த்திவர் பலரும்
தேவரும் உணரார், நின் செயல்!' என மால் சேவடிகளில்
                                   முடி சேர்த்தான்.
15
உரை
   


தருமனைக் கண்ணன் தழுவி, உபசாரம் சொல்லி,
திட்டத்துய்மனை அணிவகுக்கப் பணிக்க, அவனும்
அணிவகுத்தல்

கண்ணனும் கருணைக் கண்ணனை இறைஞ்சி, கைகளால் தழுவி,
                                 'ஐவிரும் நீர்
எண்ணஅரும் அமரில் இறக்கிலீர்; அஞ்சல்!' என்று உபசாரமும்
                                 இயம்பி,
பண் அமர் தடந் தேர்ச் சேனையின் பதியைப் பார்த்து, 'அணி
                                 வகுக்க!' எனப் பணித்தான்.
அண்ணல் அம் திட்டத்துய்மனும், தெவ்வர் அஞ்சிடும்படி,
                                 அணி வகுத்தான்.

16
உரை
   


ஐவரது அணி கண்டு, கன்னன் துரியோதனனை நோக்கி,
'சல்லியன் எனது தேரைச் செலுத்தின் இன்று
யாவரையும் வெல்வேன்!' எனல்

ஐவர் பதாகினி வெள்ளம் அணிந்தவா கண்டு, அடு விறல் கோல் நெடு
                                 விற் கை அங்கர் கோமான்,
பை வரு மாசுணக் கொடியோன்தன்னை நோக்கி, பரித் தடந் தேர் நரபாலர்
                                 பலரும் கேட்க,
'கை வரு பல் படைக்கும் ஒரு வீரர் ஒவ்வாக் கட்டாண்மை அரசே!
                                 இக் களத்தில், இன்றே,
கொய்வரு தார்ப் புயப் பகைவர் சிரங்கள் எல்லாம், குறை உடலம்
                                 கூத்தாட, கொய்வேன்!' என்றான்.

17
உரை
   


'கார்ப் பாகசாதனன்தன் மகனுக்கு, எல்லாக் கலகமும் செய்
                                  வஞ்சனையே கற்ற கள்வன்,
தேர்ப்பாகனாய் நின்றான்; அவனுக்கு ஒப்பார் தேவர் உலகினும்
                                  இல்லை; திசைகள் எல்லாம்
ஆர்ப்பாக மோதிவரும் கவன மா நெஞ்சு அறிவானும், போரில் விரகு
                                  அறிவிப்பானும்,
போர்ப் பாகு ஆய்த் தேர் கடவு செயல் வல்லானும், புனை தாமச்
                                  சல்லியனே, புவியில்' என்றான்.

18
உரை
   

'அவன் இன்று என் மணி நெடுந் தேர் கடவுமாகில், அருச்சுனனுக்கு
                         அடல் ஆழியவனே அன்றிச்
சிவன் வந்து தேர் விடினும், கொல்வேன், அந்தத் தேர் நின்றார்
                         இருவரையும்; செங்கோல் வேந்தே!
பவனன் சேய் முதலான துணைவர் ஓர் ஓர் பகழி முனைதனக்கு
                         ஆற்றார்; பரவை ஆடைப்
புவனங்கள் அனைத்தையும் நின் குடைக்கீழ் ஆக்கி, புரி திறல்
                         வாகையும் நினக்கே புனைவிப்பேனே.
19
உரை
   


'நஞ்(சு) சோற்றம் பெற நுகர்வுற்று இருண்ட கண்டர் நல் தொண்டர்
               வடிவம் என, நண்ணும் வெண்ணீற்று
அம் சோற்று மடல் கைதை கமழும் கானல் அகல் குருநாட்டு
              அரி ஏறே! ஆனின் தீம் பால்
வெஞ் சோற்றோடு இனிது அருந்தி, அமுது அருந்தும்
              விண்ணவர்போல், இந் நெடு நாள் விழைந்து வாழ்ந்தேன்;
செஞ்சோற்றுக் கடன் இன்றே கழியேனாகில், திண் தோள்கள்
              வளர்த்ததனால், செயல் வேறு உண்டோ?

20
உரை
   


'ஓர் ஊரும் ஒரு குலமும் இல்லா என்னை உங்கள் குலத்து
                                   உள்ளோரில் ஒருவன் ஆக்கி,
தேர் ஊருமவர் மனைக்கே வளர்ந்த என்னைச் செம் பொன் மணி
                                   முடி சூட்டி, அம்பு ராசி
நீர் ஊரும் புவிபாலர் பலரும் போற்ற, நின்னினும் சீர் பெற
                                   வைத்தாய்; நினக்கே அன்றி,
ஏர் ஊரும் கதிர் முடியாய்! உற்ற போரில், யார்க்கு இனி என் உயிர்
                                   அளிப்பது? இயம்புவாயே!'

21
உரை
   


துரியோதனன் சல்லியனை அடுத்து, 'ஒரு வரம் வேண்டும்'
என்று முதலிற் கூறி பின் கன்னனுக்குத்
தேர் ஊர்தல் குறித்து உரைத்தல்

கன்னன் இவை எடுத்து உரைப்ப, மகிழ்ந்து கேட்டு, காந்தாரன்
                              திருக்குலத்துக் கன்னி ஈன்ற
மன்னர் பிரான், இமைப் பொழுதில் பழுது இலாத மத்திர ராசனை
                              எய்தி, 'மதுப சாலம்
தென்ன தென என முரலும் செவ்வி மாலைத் திருத் தோளாய்! யான்
                              ஒன்று செப்பினால், அவ்
இன் உரை கேட்டு, ஒரு வரம் நீ நல்கல் வேண்டும்; என் ஆணை!'
                              எனக் கரம் கொண்டு இறைஞ்சினானே.

22
உரை
   


'செறுத்தவர்தம் பெரு வாழ்வும் உயிரும் மாற்றி, சேர்ந்தவர்கள்
                              புரிந்த பெருந் தீமை எல்லாம்
பொறுத்து, உலகம் முழுது ஆளும் திகிரியோய்! யான் பொருளாக
                              ஒரு வரம் நீ புகலுவாயேல்,
மறுத்து உரையேன்; உரைத்தருள்!' என்று உரைத்தான், அந்த மத்திர
                              பூபனும்; இவனும், 'மருவலாரைக்
கறுத்த மழை முகில் வெளுக்கக் கருகு மேனிக் கண்ணனைப்போல்
                              எங்களை நீ காததி!' என்றான்.

23
உரை
   

'வாவும் மா மணி நெடுந் தேர் அரசர்க்கு எல்லாம் வாய்ப்பான நீ
                              எனையும் புரப்பது அன்றி,
ஏவுமா தொழில் புரிந்து உன் குடைக்கீழ் வைகும் என் போல்வார்
                              உனைப் புரத்தல் இசைவது ஒன்றோ?
தேவுமாய், மானுடமாய், மற்றும் முற்றும் செப்புகின்ற பல கோடி
                              சராசரங்கள்
யாவுமாய், விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ?
                              எதிர் இலாதாய்!
24
உரை
   

'நேர் செலுத்தும் தனிச் செங்கோல் உடையாய்! யாது நினைவு உனக்கு?'
                        என்று அவன் வினவ, நிருபன்தானும்
தார் செலுத்தும் பெருஞ் சேனை சூழ நின்ற சல்லியனை முகம் நோக்கி,                         'தனஞ்சயற்குத்
தேர் செலுத்தும் முகுந்தனைப்போல், நீயும், இன்று, தேர் இரவி
                        மகன் திண் தேர் செலுத்தின் அல்லால்,
போர் செலுத்தி ஐவரையும் வென்று, வாகை புனைதல் நமக்கு அரிது'
                        என்று போற்றினானே.
25
உரை
   


சல்லியன் சினந்து, துரியோதனன் வேண்டுகோளை மறுத்தல்

'புல்லிய சொல் மதியாமல் என்னை நோக்கிப் புகன்றனையால்; புல்
                          மேயும் புல்வாய்க்கு என்றும்
வல்லிய மாப் பணித்த தொழில் புரியின் அன்றோ, மத்திரத்தான்
                          கன்னனுக்கு வலவன் ஆவான்?
சொல்லிய நா என்படும், மற்று ஒருவன் சொன்னால்? சுயோதனன்
                          ஆதலின், பொறுத்தேன், சொன்னது' என்று
சல்லியன் மா மனம் கொதித்து, புருவம் கோட்டி, தடங் கண்ணும்
                          மிகக் சிவந்தான் தறுகணானே.

26
உரை
   

'சதுர் விதத் தேர் வீரருக்கும் தடந் தேர் ஊரும் சாரதிதன்
                          தனயனுக்குத் தடந் தேர் ஊர்தல்,
மது மலர்த் தார் வலம்புரியாய்! இழிவு அன்றோ? நீ மதித்த விறல்
                          கன்னனுக்கும் எனக்கும் இப்போது
எதிர் மலைக்கும் சேனைதன்னை இரு கூறு ஆக்கி, இகல் புரிந்தால்,
                          என் கூற்றை இரிய வென்று, அக்
கதிர் அளித்தோன் கூற்றினையும் அழித்திலேனேல், கடவுவன் தேர்
                          அவற்கு' என்று கனன்று சொன்னான்.
27
உரை
   


துரியோதனன் சமாதானம் கூற, சல்லியன் ஒருப்படுதல்

'செங் கோல மலரில் இருந்து அனைத்தும் ஈன்ற திசைமுகன்தான் அறம்
                           வளர்க்கும் தெய்வப் பாவை
பங்கோனுக்கு ஆதி மறைப் புரவி பூண்ட படிக் கொடித் தேர் கடவு
                           தனிப் பாகன் ஆனான்;
'பொங்கு ஓதப் பாற்கடலான் இவன்!' என்று யாரும் புகல்கின்ற
                           வசுதேவன் புதல்வன் வந்து
வெங் கோப விசயனுக்குச் சூதன் ஆனான்; விசயனும், அன்று,
                           உத்தரன் தேர் விசையின் ஊர்ந்தான்.

28
உரை
   


'பூந் தராதலம் முழுதும் மதித்த ஆண்மைப் போர் வேந்தே! உனைப்
                              போலப் புகழே பூண்டு,
வேந்தராய் அமர்க்களத்தில் அதிசயித்த வீரரானவர்க்கு இதுதான்
                              மேம்பாடு அன்றோ?
மாந்தராய் எக் கலையும் வல்லார்க்கு அன்றி, வாசி நெடுந் தேர் ஊர
                              வருமோ?' என்று என்று,
ஏந்து அரா எழுதிய பொற் கொடியோன் சொல்லி இறைஞ்சுதலும்,
                              உடன்பட்டான்; என்செய்வானே!

29
உரை
   


'மகபதிதன் மகனுக்கு வசுதேவன்தன் மகன் பாகன் ஆனதுபோல்,
                            வயங்கு சோதிப்
பகலவன்தன் மகனுக்கு நிகர் இல் ஆண்மைப் பல் விதப் போர்ச்
                            சல்லியன் தேர்ப் பாகன் ஆனான்;
புகல் அரிய தும்பையுடன் வெற்றி வாகை புனைந்திடும், இக்
                            கணத்தில், வலம்புரித் தார் வேந்தன்;
அகல் உததி உடை ஆடை அவனி முற்றும் அவனது, இனி'
                            என ஆர்த்தது, அரசன் சேனை.

30
உரை
   


சல்லியன் கன்னனுக்குப் பாகனாய் வந்து அமர,
கன்னன் உவந்து சேனைகளை அணிவகுத்தல்

பெற்று இழந்த கவசமும் குண்டலமும் மீளப் பெற்றனன்போல்,
                            அடல் அருக்கன் பெற்ற பிள்ளை,
மற்றை அணி விரல் முடக்க இணை இலாத மத்திர பூபனைத் தழுவி,
                            மணித் தேர் ஏற்ற,
பற்றலர் நெஞ்சு அலமருமாறு அவனும் பாகர் படிவம் கொண்டு,
                            அமர்க்கு அமைந்த பரிகள் பூட்டி,
உற்ற வடிக்கயிறுடனே உளவு கோல் கொண்டு, ஊர்ந்தனனால்,
                            அருணனுக்கே உவமை சால்வான்.

31
உரை
   


பணி நிறுத்தி எழுதுறு பொற் பதாகையானைப் படாது ஒழி தம்பியரோடும்
                              பார்க்கவன் போல்
அணி நிறுத்தி, கிருப கிருதரையும் பல் போர் அரசரையும் இரு மருங்கும்
                              அணிகள் ஆக்கி,
நுணி நிறுத்திச் சகுனி முதலானோர் தம்மை, நுவல் அரு நாள் உடுக்
                              கோளின் நடுவண் வான
மணி நிறுத்தி வைத்தது என, பவள மேரு வரை நின்றது என,
                              நின்றான்,-வண்மை வல்லான்.

32
உரை
   


கன்னன் தானம் செய்தபின், தன்னைப் பலபடப்
புகழ்ந்து சல்லியனிடம் பேசுதல்

கோவல் சூழ் பெண்ணை நாடன், கொங்கர் கோன், பாகை வேந்தன்,
பாவலர் மானம் காத்தான், பங்கயச் செங் கை என்ன,
மேவலர் எமர் என்னாமல், வெங் களம்தன்னில் நின்ற
காவலன் கன்னன் கையும் பொழிந்தது, கனக மாரி.

33
உரை
   


அந்தணர், பரிசின்மாக்கள், அவனிபர் முதலோர் யார்க்கும்
சிந்தைகள் களிக்கத் தான தியாகமும் சிறப்பும் நல்கி,
கந்தன் ஓர் வதனம் ஆகி அவதரித்தன்ன கன்னன்,
சந்து அணி குவவுத் தோளான் சல்லியன்தனக்குச் சொல்வான்:

34
உரை
   


மேகவாகனன்பால் பெற்ற வெயிலவன் இயமதங்கி
ஆகிய முனிவற்கு ஈந்த அரும் பெருஞ் சாபம் பெற்றேன்;
நாக வெம் பகழி பெற்றேன்; நாரணற்கு ஒத்த உன்னைப்
பாகனும் ஆகப் பெற்றேன்; பாக்கியம் பலித்தவாறே!

35
உரை
   


'எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை; அவ் விசயன் என்பான்-
தனக்கு எதிர் என்னை அன்றித் தரணிபர் யாரும் இல்லை;
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த,
கனக் குரல் களிற்றோய்! இன்று காண்டி, என் ஆண்மை!' என்றான்.

36
உரை
   

சல்லியன் இளநகை செய்து, கன்னனது தருக்கு அடங்கப் பேசுதல்

என்றலும் மத்திரேசன் இள நகை செய்து, 'நீ நின்
வென்றியும், வலியும், கற்ற வின்மையும், விளம்ப வேண்டா;
ஒன்றொடு ஒன்று இரண்டு தேரும் உருளுடன் உருள்கள் ஒத்து,
சென்று எதிர் முனைந்தபோது, உன் சேவகம் தெரியும் மாதோ!

37
உரை
   


'ஒருவரை ஒருவர் ஒவ்வா உரனுடை வீரர் நீங்கள்
இருவரும் பொரும் போர்தோறும் யாங்களும் பாங்காய் நின்றோம்;
வெருவரல் மறந்தும் இல்லா விசயனை ஒருபோதத்தும்,
திரு வரும் வண்மையோய்! நீ செயித்திடக் கண்டிலேமால்.

38
உரை
   


'வயிர்த்து இருவோரும் சொன்ன வஞ்சினம் முடிக்குமாறு
செயிர்த்திடும் இற்றைப் பூசல் தெரியுமோ? தெரிந்தது இல்லை;
அயிர்த்தனம்!' என்று தேர் ஊர் ஆண்தகை உரைப்ப, நீட
உயிர்த்தனன் ஆகி, மீள உத்தரம் உரைக்கலுற்றான்:

39
உரை
   


சல்லியனைக் கன்னன் கடிய, அவன் வாள் ஏந்தி
மண்ணில் நின்று கன்னனை அறைகூவுதல்

' "இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை" என்று, நின்ற
தந்திரபாலர் முன்னர், சல்லிய! இகழ்தல் வேண்டா;
மந்திர வாசித் திண் தேர் வல்லையேல், ஊர்வது அன்றி,
வெந் திறல் விளைக்கும் வெம் போர் வினைக்கு நீ யார்கொல்?'
                              என்றான். 393

40
உரை
   


வலியுடைத் தேரோன் சொன்ன வாசகம் வலவன் கேட்டு,
கலியுடைத் தடந் தேர் விட்டு, காலின் நின்று, உடைவாள் வாங்கி,
'ஒலியுடைப் புரவித் திண் தேர் உனக்கு நான் ஊருவேனோ?
எலியுடைப் பூசல் பூஞைக்கு எதிர்ப்படின், என் படாதோ?'

41
உரை
   


கன்னனும் கீழ் இறங்கி வாள் ஏந்திப் பொர,
துரியோதனன் வந்து விலக்கி, இருவரையும் தேரில் ஏற்றிப்
போர் செய் வேண்டுதல்

உரு உரும் என்னச் சீறி உடன்றபின், உதயன் காதல்
மருவுறும் மைந்தன்தானும் வாளொடு மண்ணில் தாவி,
இருவரும் இரண்டு காயம் இகலும் முன், உரக கேது
வெருவரும் சிந்தையோடு, வெய்தின் போய் விலக்கினானே.

42
உரை
   


மூளும் வெஞ் சினத்தை மாற்றி, முரணுறுத்தவர்கள்தம்மை
மீளவும் தேரில் ஏற்றி, 'வெஞ் சமர் விளைமின்' என்றான்-
மாளவும் பாண்டு மைந்தர், வையகம் முழுதும் தானே
ஆளவும், கருதி, எல்லா அரசையும் அழிக்கும் நீரான்.

43
உரை
   


கன்னனைக் கிருதவன்மன் முதலியோர் காத்து நிற்க,
துரியோதனன் சல்லியனுக்கும் கன்னனுக்கும்
நல்லுரை பகர்தல்

வனை கழல் கிருதவன்மன், வரி சிலைக் கிருபன், தானே
தனை நிகர் சகுனி, தாமா, சாலுவன், திகத்த ராசன்,
இனைய பொன் தடந் தேர் வீரர் யாவரும், எண் இல் சேனைக்
கனை கடலோடு சூழ்ந்து, கன்னனைக் காத்து நின்றார்.

44
உரை
   


நின்ற அக் கன்னன்தன்னை நெஞ்சு உற மகிழ்ந்து நோக்கி,
'வென்றனம் பூசல் இன்றே; விசயனும் தாதைதன்பால்
சென்றிடும்' என்று தேறிச் செப்பினன், சிற்சில் மாற்றம்-
மன்றல் அம் சுரும்பு மாறா வலம்புரி மாலையானே:

45
உரை
   


'சதமகன் மகன் தேர்ப் பாகன்தன்வயின் கேண்மை விஞ்சி,
விதுரனும் அமர் செய்யாமல், வெஞ் சிலை இறுத்து, பின்னும்
யதுகுலத் தலைவனான இராமனும் தானும், பாரில்
நதி முதல் தீர்த்தம் யாவும் ஆடுவான் நயந்து போனான்.

46
உரை
   


'கங்கைதன் வயிற்றில் தோன்றி, தாதைதன் காதல் தீர்ப்பான்,
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து,
வெங் களத்து உதயன் போல, வீடுமன், களத்தை எல்லாம்
செங் களப் படுத்தி, மீண்டும் தேவரில் ஒருவன் ஆனான்.

47
உரை
   


'கரி முகக் கடவுள் அன்ன கடும் பரித்தாமா என்னும்
குரை கழல் துணைத் தாள் சிங்கக் குருளையைப் பயந்த தாதை,
அரு மறைக்கு அயனை ஒப்பான், அடல் சிலைக்கு அரனை ஒப்பான்,
திருவருட்கு அரியை ஒப்பான், திருத் தகு வீடு சேர்ந்தான்.

48
உரை
   

'சாயலால் சிறந்த தோகைச் சாமளத் தடம் புள் ஊர்திச்
சேய் அலால், தேவர் வாழ்வு தேவருக்கு யாவர் ஈந்தார்?
நீ அலால், சமரில் என்னை நிலையிடற்கு உரியார் உண்டோ?
தோயலால் பயந்த காதல் சூரனை அனைய சூரா!

49
உரை
   


'மித்திரர் என்று நோக்காது, என்னுடன் விளைந்த நண்பால்,
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான்;
குத்திரன் அல்லன்; செம்மைக் கொள்கையன்; மறையின் மிக்க
அத்திர சாபம் வல்லான்; இவனொடு ஆர் அமர் செய்கிற்பார்?

50
உரை
   


'என் மொழி மறாமல் இன்று உன் இரத சாரதியும் ஆனான்;
நன் மொழி அன்றி, வேறு நவை மொழி நவிறல் தேற்றான்;
தன் மொழி உறுதி யாவும் தரும் எனக் கைக்கொளாமல்,
புன் மொழி ஆடி, நும்மில் புலப்பது புன்மை அன்றோ?

51
உரை
   

'இதயமும், வலியும், தேயத்து இயற்கையும், வினையும், பற்பல்
கதிகளும், உணர்ந்து, பூணும் கவன மாத் தெரிந்து பூட்டல்,
எதிரிதன் விசயம் கூறல், இடிக்கும் நண்பு ஆதல், வெம் போர்
முதிர் இடம் காலம் எண்ணல், சூதர்க்கு முறைமை கண்டாய்!'

52
உரை
   


அப்பொழுது திட்டத்துய்மன் வீரரோடு கன்னனை
நெருங்கிப் பொருது தோற்றுத் தேருடன் திரும்புதல்

என்ன மன்னர்மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை
                                  எடுத்து உரைத்து,
அந் நிலத்திலே நிற்க, வல் விரைந்து, அறன் மகன் படைக்கு அதிபன்
                                  என்று முன்
சொன்ன திண் திறல் துருபதேயனும், சோமகேசராய் உள்ள சூரரும்,
கன்னன் நின்ற அம் முனையில், நெஞ்சினும் கடுகு தங்கள் தேர்
                                  கடவினார்களே.

53
உரை
   


சென்ற வீரரும், சிலைகள் கால் பொர திண் சிலீமுகம் சேர ஏவினார்;
நின்ற வீரரும் தனு வளைத்து, மேல் நெடிய சாயகம் நிமிர வீசினார்;
ஒன்ற மா நிலம் பொன்ற மீது எழுந்து ஓதம் ஊர்வது ஒத்து,
                            உம்பர் அஞ்சினார்;
அன்றை ஆகவம்தனில் நிகழ்ந்த போர், ஆரை ஆரை என்று
                            அதிசயிப்பதே?

54
உரை
   


ஏறு தேர் அழிந்து, இவுளிமா அழிந்து, ஏவு பாகு அழிந்து,
                            எண்ணில் எண் இலார்
நூறு நூறு கோல் நுழைய மெய் எலாம் நொந்து துஞ்சினார்,
                            முந்து போர் செய்தார்;
வேறு வேறு பல் கோடி வீரர்கள் மேரு ஒப்பது ஓர் வில் வளைத்திட,
சூறை மாருதம் போல் விபாகரன் சுதன் நடாவு தேர் சூழ வந்ததே.

55
உரை
   


முட்ட வந்து தம் பின் கொடாமல், மேல் முன் கொடுத்து,
                            மா முனைகொள் வாளியின்
பட்டு ஒழிந்த அவ் இருவர் சேனையின் பதிகளும் சயம்
                            பட உடற்றினார்;
விட்ட பாணம் வந்து, இருவர் ஆகமும் வெளி அடைக்கவே,
                            வில் வளைத்தபின்,
திட்டத்துய்மனும் கன்னனுக்கு இடைந்து, ஏறு தேருடன்
                            தேறி ஓடினான்.

56
உரை
   


அப்பொழுது வீமன் வந்து கன்னனோடு பொருதல்

சோமகேசரில் பட்டு ஒழிந்த வெஞ் சூரர்தம்முடன், துரோண சூதனன்,
காம பாணமே என விலக்க அருங் கணைகள் மெய் உறக்
                            கைகழன்றபின்,
தாமம் ஆர் முடித் தம்முன் ஏவலின், தன்னை ஒத்த தோள்
                            வீரர்தம்மொடும்,
வீமசேனன், மற்று அவரை வென்ற போர் விசய கன்னன்மேல்
                            வெய்தின் எய்தினான்.

57
உரை
   


காலினால் வரும் காளை மைந்தனும், கதிரினால் வரும்
                            காளை மைந்தனும்,
மாலினால் வரும் களிறு, வாசி, மா மன்னு தேர் எனும் வாகனத்தினார்,
வேலினால் எறிந்து அமர் உடற்றியும், வெய்ய வாளினால்
                            வெட்டி முட்டியும்,
கோலினால் எறிந்து உருவ எற்றி வில் கோலியும், களம் குறுகினார்களே.

58
உரை
   

மைந்தர் போர் விதம் கண்டு கண்டு, தார் மருவும் அம் புயத்து
                            இருவரும் களித்து,
உந்தும் மா நெடுந் தேர் இரண்டும் வந்து, உள்ளம் ஆன தேர்
                            ஒத்து உலாவவே,
அந்தரம் புதைந்து உம்பரார் எலாம் அஞ்சி ஓடுமாறு அப்பு மாரியும்
சிந்த, எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிடச் சிலை
                            வணக்கினார்.

59
உரை
   


செல் வணக்கி மேல் கீழ் எனும் பெருந் திசை இரண்டினும்
                            திகழும் விற்கள்போல்
வில் வணக்கி, அவ் இருவரும் பொரும் வெஞ் சமத்தில்
                            வீமனை, உரத்தினும்,
மல் வணக்கு தோளினும், இலக்கு இலா வாளி ஏவினான், ஒளியாகவே-
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வலக்
                            கண் அளித்துளான்.

60
உரை
   


வலக்கண் ஆன செஞ் சுடர் இடக்கணும் வாகுவும் துடித்து
                            ஆகுலத்துடன்
கலக் கணீர் பொழிந்து இனையும் வேலையில், கனல் படும்
                            புணில் தடி படும் கணக்கு,
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்-இரண்டு நால்-இரண்டு
                            எண்-இரண்டினால்
அலக்கண் எய்த எய்தனன், உதாரிதன் அணிகள் நீடு தோள்
                            ஆகம் எங்குமே.

61
உரை
   


'விசயன் வஞ்சினம் அழியும்' என்று கன்னனை
வீமன் கொல்லாது விடுத்துச் செல்லுதல்

வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன்,
                            சல்லியன்தனோடு
ஓதினான், ' "இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும்" என்று கொண்டு
                            உயிர் வழங்கினேன்;
சூதனாகி நீ வந்து தேர் விடும் தொலைவு இலாத போர்
                            வலியை அன்றியே,
யாது கூறலாம் வன்மை? வின்மைதான் யாது?' எனா,
                            இமைப்போதில் ஏகினான்.

62
உரை
   


சாத்தகியோடு விடசேனன் பொருது, தேர் முதலிய இழத்தல்

அங்கர் குல நரபாலனும் வாழ்வுடை அங்கர்களும் முனை
                            சாய்தர, ஊழியின்
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும், மைந்தர் அனைவரும்,
                            மாறு அடு காலையில்,
வெங் கை வரி சிலை கால் பொர, யாரினும் விஞ்சு திறல்
                            விடசேனன் எனா வரு
செங்கணவன், வசுதேவன் முன் நாள் அருள் சிங்க அரசு
                            இளையானொடு சீறியே,

63
உரை
   


திண் சிலையின் நெடு நாண் ஒலியோடு அணி சிஞ்சிதமும்
                       எழ மால் இளையோன் இணை
வண் புயமும் வியன் மார்பமும் ஊடுற வன்பு பெறு பல வாளிகள்
                            ஏவலும்,
நண்பொடு அவன், இவன் ஏறிய தேர், கொடி, நன் புரவி, குடை,
                            பாகு, இவை வீழ்தர,
ஒண் பிறையின் முகம் ஆன சிலீமுகம் ஒன்பது உதையினன்,
                            வாகுவும் மார்புமே.

64
உரை
   


சோழன் மாகதனுடன் பொருது, அவன் ஆவி கவர்தல்

குன்றின் அருவிகள்போல் மததாரைகள் கொண்ட கட தட
                            வாரண மாமிசை
சென்று சில கணை ஏவினர், ஓர் இரு சிந்து கிரண
                            திவாகரராம் என,-
'இன்று வயல் உழுவீர்; புது நீர் வரும்' என்று, வரி மணலே
                            குறி கூறிட,
அன்று வரு குட காவிரி நாடனும், அம் பொன் வரி கழல்
                            மாகதர் கோவுமே.

65
உரை
   


கங்கை நதியிடை, வேயொடு பாகு அடர் கம்ப நிகள மதாசலம்
                            நீர் உண,
வங்க மறி கடல் சூழ் எழு பார் வலம் வந்த மனு குல
                            சோழனை, மாகதன்,
அங்கனையர் இள மா முலை தோய் புயம் அந்தி வெயில் நிகர்
                            சோரியின் மூழ்குற,
வெங் கண் அழல் உதிரா, அதிரா, எதிர் மின்கொல் என இணை
                            வாளிகள் ஏவவே,

66
உரை
   

வஞ்சி மதுரை புகார் உடையான், வட மண்டலிகர் திறை
                            வாரிய நேரியன்,
விஞ்சி முனைதொறும் வாள் அசுரேசரை வென்ற பொழுது,
                       அடல் வானவர் கோன் அருள்
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு, நம்பர் சிலை
                            மலைபோல் அவன் ஏறிய
குஞ்சரமும் விழ, மாகதர் கோன் உயிர் கொண்டு திருகினன்,
                            வார் சிலை கோலியே.

67
உரை
   


அண்டர் குல பதியாம் விடை வாகனன், அம் பொன் முடி மலர்
                            நாறிடு தாளினன்,
எண் திசையும் மனு நீதி செய் கோலினன், எங்கும் ஒரு்
                            குடையால இடு நீழலன்,
மண்டு கிரண சிகாமணி மோலியன், வண்டு மது நுகர்
                             தாதகி மாலையன்,
மிண்டு முது புலி ஏறு பதாகையன், வென்றி வளவனை
                             யார் நிகர் வீரரே?

68
உரை
   


மாகதன் மாண்டதும் சேனை புறமிட்டதும் கண்டு,
அசுவத்தாமன் வர, விசயன் அவனை வென்று,
வெறுங் காலுடன் மீள விடுதல்

'யாது ஏவல்?' என்று பல மன்னரும் ஈண்ட, இப் பார்
மீது ஏவல் கொள்ளும் விறல் சென்னி கை வில்லின் வன்பால்
மோது ஏவு பட்டு, முகம் மாறி, மகதர் கோமான்
சாதேவன் வீழ முதுகிட்டது, தானை வெள்ளம்.

69
உரை
   


புறமிட்ட தானை நிலை கண்டு, பொறாது, சோதி
நிறம் இட்ட வில் கைத் துரோணன் மகன் நெஞ்சு கன்றி,
மறம் இட்ட வாளி பல தூவி வருதல் நோக்கி,
அறம் இட்ட சிந்தை அரசன்தன் அனுசர்தம்மில்,

70
உரை
   


'இன்றே முடிப்பன் வினை!' என்று இரண்டு இந்த்ரநீலக்
குன்றே நிகர்ப்பத் திருமாலொடும் கூடி நிற்பான்,
சென்றே அதிரப் பரித்தாமனைச் செங் கை அம்பால்
வென்றே, இமைப்பின் வெறுங் காலினின் மீள விட்டான்.

71
உரை
   


துரியோதனன் தம்பி சுதக்கணன் வர, நகுலன்
அவனை அஞ்சி ஓடச் செய்தல்

துரியோதனன்தன் இளையோரில் சுதக்கணப் பேர்ப்
பெரியோன், முறிந்த பெருஞ் சேனையின் பின்பு நின்றோன்,
பரியோடும், மான் தேர்ப் பரப்போடும், பதாதியோடும்,
கரியோடும், ஊழிக் கனல் என்னக் கனன்று வந்தான்.

72
உரை
   


முகிலின் சிலையின் சிலை கோலி, முனை கொள் அம்பு
பெகுலம் தொடுத்து வரு காளையைப் பெட்பின் நோக்கி,
நகுலன் சிறிது நகைசெய்து, நகை செய் வாளி
அகிலம் தொடுத்து, ஆங்கு அவன்தன்னையும் அஞ்சுவித்தான்.

73
உரை
   


கன்னன் முனைந்து வர, தருமன் எதிர்ந்து பொருதல்

'மட்டுப் படாமல் வரு தெவ்வர் மலையின், நின்றே
தட்டுப்படாது, இன்று எமர்ஆனவர் தானை' என்னா,
பட்டுப்படாத வடி வேல் நரபாலர் சூழ,
முட்டுப்படாத முரட் கன்னன் முனைந்து சென்றான்.

74
உரை
   

பாஞ்சாலரின், கேகயரின், பல பாடை மாக்கள்
ஆம் சார்பினில் வந்து அடைந்தோர்களில், அன்று போரில்
மாஞ்சார் ஒழிந்த பல மன்னரும் சூழ, வண்டு
பூஞ் சாறு அருந்தும் நறுந் தாமம் புனைந்த தோளான்,

75
உரை
   


மன்னன் தருமன் திருமைந்தன், மலைய வந்த
கன்னன் கருத்தும், கடுஞ் சேனையும் கண்டு, மேற் போய்,
பொன் அம் பொருப்பு ஓர் இரண்டு என்ன, வெம் பூசல் செய்தார்,
இன்னம் தமக்குத் தமை அன்றி எதிர் இலாதார்.

76
உரை
   

உதையன் புதல்வன் பெருஞ் சேனை, உதிட்டிரன் கைக்
குதை அம்பில் வீழ்ந்தார், இனையோர் எனக் கூறல் தேற்றார்;
இதையம் பழுது இல் இவன் சேனை அவன் கை அம்பால்
உதையுண்டு வீழ்ந்தார் உரைத்தாலும் உரைக்கல் ஆற்றா.

77
உரை
   


பொற்பு ஊசல் என்ன இரு சேனையும் போயும் மீண்டும்
மற்பூசல் செய்ய, ஒளி செய்யும் அம் மன்னர்-தம்மில்,
முன் பூசல் அம்பின் பிளந்து அண்ட முகடு விள்ள,
வில் பூசல் எய்திப் புரிந்தார்-விலின் வேதம் வல்லார்.

78
உரை
   


கொலை அம்பும் மாளா மணி ஆவமும் கொண்ட செங் கைச்
சிலையும், கிரிகள் இரண்டு என்னத் திரண்ட தோளும்,
நிலையும், குறிப்பும், சிறு நாண் ஒலி நின்றவாறும்,
மலையும் திறலும், புகழ்ந்து, அண்டரும் வாழ்த்தினாரே.

79
உரை
   


தாழம் குறித்துக் கரை செய்யும் தரங்க வேலை
ஆழ் அம்புராசி எழு பார் தனி ஆள நிற்போன்
சூழ் அம் பொன் மாலைத் துணைத் தோள்களின் எட்டும், மார்பின்
ஏழ் அம்பும், எய்தான்-இருள் காயும் இரவி மைந்தன்.

80
உரை
   


தன் தோளும் மார்பும் சரம் மூழ்க, வெஞ் சாபம் வாங்கி
நின்றோனை, வாய்மை நிலை நின்ற நிருபர் ஏறும்,
வன் தோள் உற நாண் வலித்து, ஓர் இரு வாளி ஏவி,
சென்று ஓர் இமைப்பின், சிலையும் திறல் அம்பும் வீழ்த்தான்.

81
உரை
   


கன்னனால் திட்டத்துய்மன் முதலியோர் தளர்தல் கண்டு,
தருமன் சேனையுடன் நெருங்கிப் பொருதல்

வேறு ஓர் வரி வில், வெயிலோன் மகன், வெய்தின் வாங்கி,
நூறோடு நூறு தொடுத்து ஏவும் நுதி கொள் அம்பால்,
கூறு ஓர் இரண்டு பட யாரையும் கொன்ற போழ்தின்,
ஆறு ஓடிவிட்டது, அடையார் உடல் அற்ற சோரி..

82
உரை
   


சாதேவன், தண்டதரன், தண்டகன், சித்ரதேவன்,
தீது ஏதும் இல்லாத் திறல் சாத்தகி, சித்ரகீர்த்தி,
தாது ஏறு தார்த் தம்பியரோடு, இகல் தண்டநாதன்
மீது ஏறு தேரும் தகர்ந்து, ஒண் சுடர் வில்லும் அற்றான்.

83
உரை
   


முன் சேனையோடும் வலி உற்று முனைந்து, கொற்ற
மன் சேனைநாதன் பொழி வாளி மழையில் மூழ்கி,
தன் சேனைநாதன் முதல் யாவரும் தளர்தல் கண்டு,
நன் சேனை நாலும் உடன் சூழ, நடக்கலுற்றான்.

84
உரை
   

கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி,
              கிருதவன்மன், சிந்தை விரகுடைச் சகுனி எனும்
நிருபர், அங்கங்கள்தொறும் நிரையினில் துளை உருவ, நெடிய அம்பு
              ஐம்பது அறுபது படப்பட முடுகி,
முரண் மிகும் திண் கடவுள் முரசுடைக் கொடி கொள் அணி முகிலின்
              வந்து அண்டர் குல முதல்வன் அத் தனுவினொடு
தரணியின்கண் சமரம் மலைவது ஒத்து, இரதமிசை தருமன் மைந்தன்
              பரிதி புதல்வனைக் குறுகினனே.

85
உரை
   


தருமன் மைந்தன் பரிதி புதல்வனைக் குறுகி, இரு சரம் அவன் செங்
              கை வரி சிலை துணித்திடவும், எதிர்
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும், உடன் இரு சரம் சென்று
              தனி இரத மொட்டு இடறிடவும்,
ஒரு சரம் பொங்கு திறல் வலவன் மெய்ப் புதைதரவும், ஒரு சரம் திண்
              கவன துரகதத்து உரன் உறவும்,
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து, எரி கொள் சில வடி சரம்
              கொண்டு, அவனது இரு புயத்து எழுதினனே.

86
உரை
   

கலிங்கர் முதலியோரைத் தருமன் ஓட்டி,
பலரையும் விண் புகச் செய்தல்


வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதிய பின், வட கலிங்கம்,
            குகுரம், மகதம், ஒட்டியம், முதல
படிதொறும் தங்கள் குடை நிழல் பரப்பிய அரசர் பலருடன், பைம்
            பொன் முடி மகுடவர்த்தனர் பலரும்,
இடி முழங்கும் குரலின் அதி பயத்தொடு பிலனில் இழி புயங்கங்கள்
            என, ஒருவருக்கு ஒருவர் நடை
அடி தளர்ந்து, அஞ்சலியும் முதுகும் இட்டவர் ஒழிய, அடைய அன்று
            உம்பரிபதி குடி புக, பொருதனனே.

87
உரை
   

தருமன் சங்கு முழக்க, கன்னனும் சங்கு முழக்கி,
தருமன் நின்ற சமர முகத்து வருதல்


அடைய, அன்று, உம்பர் பதி குடி புகப் பொருது, தனது அணி கொள்
           சங்கம் பவள இதழின் வைத்தருளுதலும்,
யஉடையும் அண்டம், திசைகள் செவிடு பட்டிடும், அமரர் உலகு
           பொன்றும், பணிகள் பிலமும் முற்றுற இடியும்,
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும்ய என முழங்கும்
           பெரிய அரவம், எக் கடலும் எழு
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ, மண்டும்
           பவனன் ஒலியினின், கடுகியதே.

88
உரை
   

கதுவ, மண்டும் பவனன் ஒலியினின் கடுகி, அணி கவசமும் குண்டலமும்
             மகபதிக்கு அருள் குரிசில்,
சதுர் முகம் கொண்டது ஒரு கனக மொட்டு இரதமொடு சதுர் விதம்
             தங்கு கதி இவுளி ஒப்பு அற அடைசி,
மதுபம் ஒன்றும் புதிய தெரியல் மத்திர நிருப வலவன் உந்தும்
             பொழுதில், அதனின் மிக்கு எழு மடியும்
அதிரஎங்கும் தனது வளை முழக்கினின் அயர, அறனின் மைந்தன் சமர
             முனை முகத்து அணுகினனே.
89
உரை
   


தருமனது புயம் முதலியவற்றில் கன்னன் அம்பு எய்ய,
அவன் சோர்ந்து புறங் கொடுத்தல்

அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி, அவன் அகலமும்
           திண் புயமும் வடி சுடர்ப் பகழி பல
உறவும், அஞ்சங்கள், முடி, உருளை, அற்று இரதம் நடு உடையவும்,
           துங்க வரி சிலை குணத்துடன் அறவும்,
மறம் விளங்கும் பரிகள் துணிகள் பட்டிடவும், விறல் வலவன்
           அங்கம் சிதறி உரனில் உற்றன முதுகு
பறியவும், தண்டு முரசு எழுது பொன் துகிலினொடு பரியவும், சண்ட தனு
           உற வளைத்தனன், இவனே.

90
உரை
   


இவனும் அவனைப் புயமும் உரமும் முழுக, துவசம் இடிய, மணி
             மொட்டு இரதம் ஒடிய, வரி வில் துணிய,
நவ நடை வயப் புரவி விறல் வலவன் மெய்ப் புதைய, நகு சரம்
             நிரைத்து ஒரு வில் நடு உற வணக்கின பின்,
'அவனும் இவனைப் பொருது, முனம் இவன் மலைத்தபடி அடையவும்
             அழித்தனன், இவ் அடல் மிகு களத்தில்' என,
உபநிடத வித்து முதல், அவனிபர் எனைப் பலரும், உரமும் அவர்
             கற்ற கலை உறுதியும் உரைத்தனரே.

91
உரை
   


உறுதியுடன் மற்றொர் ரதமிசை கொளும் உதிட்டிரனும், ஒரு கையில்
             வயச் சிலையும், ஒரு கையில் வடிக் கணையும்,
விறலினொடு எடுத்து எதிர் செல்பொழுது, அருள் மிகுத்த மொழி
             வெயிலவன் அளித்தருளும் விதரண குணக் குரிசில்
மறம் உற விடுத்த கணை பொடியுற இயற்றி, அவன் மது மலர் உரத்தை
             வழிவழி துளை படுத்துதலின்,
எறி படை விடுத்து, இரதமிசை உற இளைத்து, முதுகு-இட, அறன் மகற்கு
             இரவி மகன் இவை உரைத்தனனே:

92
உரை
   


தருமனைப் புறமிடுதல் தகாது என்று கன்னன் கூற,
அவன் உரையை மதித்துத் தருமன் நின்றபோது,
வீமன் ஆங்கு வருதல்

'உரை உடையை; கற்ற கலை உணர்வு உடையை; தக்க மதி உளம்
             உடையை; மிக்க கிளை உறவு உடையை; சத்ய குண
வரை உடையை; எத் திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள்
             அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை;
தரை முழுதும் முத்த நிலவு உமிழ் குடை நிழற்ற ஒரு தனி நனி புரக்கும்
             உயர் தலைமை பெறுகிற்றி; பகை
கரை அழிய உற்ற பொழுது உயிர் கொடு புறக்கிடுதல் கடன் அல
             உனக்கு; நிலை கருதி, அணி நிற்றி' என,

93
உரை
   


'கருதி அணி நிற்றி' என, உறுதி சமரத்து உரைசெய் கருணனை மதித்து, மிகு
             கருணையவன் நிற்பளவில்,
விருதர் தலை அற்று உருள, விருதர் மத அத்திகளின் விரி தலைகள்
             அற்று உருள, விறல் இவுளி மெய்த் துணிய,
இரதம், வயிர் அச்சு, உருளை, முடிகொள் தலை, அற்று உருள, இரு
             புறமும் முட்டி விறல் ஒரு கதைகொடு எற்றி, எதிர்
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவனக் கடவுள் புதல்வன் ஒர்
             இமைப் பொழுதில் முதல்வனை அடுத்தனனே.

94
உரை
   


'வீமனை வெல்லுதல் அரிது!' என்று சல்லியன் கூற,
கன்னன் வீரம் பேசுதல்

முதல்வன் வென்னிடுதல் கண்டு, முடியுடை வேந்தரோடும்,
விதலை இல் வயிர நெஞ்சின் வீமன் வந்து உறலும், 'காலின்
புதல்வனைப் பொருது வேறல் அரிது!' எனப் பொலம் பொன் தேரோன்
                          மதலையை நோக்கி, பாகன்,
வன் பகை தோன்றச் சொன்னான்.

95
உரை
   


காமனே என்ன நின்ற கன்னன் வில் கையில் வாங்கி,
'வீமனே ஆக, வென்றி விசயனே ஆக, வெற்றித்
தாமனே! காண்டி; இற்றைச் சமரில், என் தழல் வாய் ஒற்றைத் தூமம்
                          நேர் பகழிக்கு ஆற்றார்;
தூண்டுதி இரதம்' என்றான்.

96
உரை
   

வீமன் அம்பால் கன்னன் அயர்ந்து வீழ்தல்


என்னும் முன், மருத்தின் மைந்தன் இரதமேல் வரி வில் வாங்கி,
கன்னனது உரையும் வில்லும் கணத்திடைச் சிதைந்து வீழ,
முன் ஒரு வாளி தொட்டான்; எதிரியும் முரண் வில் ஒன்றால்,
பன்னிரு வாளி மீளி மார்பிடைப் பரப்பினானே.

97
உரை
   

பாய்ந்த அப் பாணம் தன்னைப் பாணியால் திமிர்ந்து, வீமன்
காய்ந்த வாள் அனைய தாரைக் கடுங் கொடும் பகழி ஒன்றால்
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான்;
வேய்ந்த தாரவனும் தேரின்மிசை அயர்வுற்று வீழ்ந்தான்.

98
உரை
   


சல்லியன் தேற்றத் தேறி, கன்னன் அம்பு எய்தல்

வீழ்தலும், மன்னர் மன்னன் வெம் படை வென்னிட்டு ஓட,
வாழ்வு அற வீழ்ந்தோன்தன்னை மத்திரத் தலைவன் தேற்ற,
ஏழ் பரித் தேரோன் மைந்தன் எழுந்து, பின் சாபம் வாங்கி,
சூழ் படை வீரர் யாரும் துஞ்சிடத் துணித்திட்டானே.

99
உரை
   


சிங்கசேனனை உள்ளிட்ட எழுவர் மாய, வீமன் சேனையோடு
முதுகிடுதலும், அருச்சுனன் அங்கு வந்து பொருதலும்

கைத்தல வண்மை வேந்தன் கார்முகம் பொழிந்த அம்பால்,
எத்தனை நிருபர் மாய்ந்தார்? எண்ணுதற்கு யாவர் வல்லார்?
பத்தி கொள் சாதுரங்கப் படைஞர் பாஞ்சாலர்தம்மில்
செத்தனர் எழுவர், சிங்கசேனனை உள்ளிட்டாரே.

100
உரை
   


சேனையும் முறிந்து, வீமசேனனும் முதுகிட்டு ஓட,
கான் அமர் துளவோன் கண்டு, கடும் பரி நெடுந் தேர் பூண்ட,
யானைமேல் சிங்கம் செல்வது என்ன வந்து, எய்தியிட்டான்-
வானவர்க்கு அரசன் மைந்தன், மைந்துடை வரி வில்லோனே.

101
உரை
   


சென்றவன் சேனை தன்னில் நிருபரும், செருச் செய்கிற்பான்
நின்றவன் சேனைதன்னில் நிருபரும், நேர்ந்தகாலை,
என்றவன் மதலை ஏவும், இமையவர் தெவ்வை ஓட
வென்றவன் ஏவும், தம்மில் விசும்பினை வேய்ந்தவாலோ.

102
உரை
   


கன்னனுக்கு உதவியாக அசுவத்தாமன் வந்து
கடும்போர் விளைத்தல்

இரவிதன் மதலைக்காக, இமைத்த கண் விழிக்கும் முன்னர்,
புரவிஅம்தாமா என்னும் பூசுரன் தேரில் தோன்றி,
அரவு-அணைச் செல்வன் மெய்யும் அருச்சுனன் மெய்யும், செக்கர்
விரவிய வானம் என்ன, வெஞ் சரம் புதைவித்தானே.

103
உரை
   


விசையனும் வெகுளுற்று, அந்த வேதியன் வில்லும் தேரும்
அசைவுற முடுகி எய்தான்; அவனும் மற்று இவனை வேறு ஓர்
குசையுடைப் புரவித் தேரும் குனி வரும் சிலையும் கொண்டு,
நிசையினை அருக்கன் போல, நிலை தளர்ந்திடுவித்தானே.

104
உரை
   


தளர்ந்த அத் தளர்ச்சி கண்டு, தனஞ்சயன்தன்னைத் தேற்றி,
'கிளர்ந்து அடர் புரவித்தாமா கேவலன் அல்லன், ஐயா!
பிளந்திடு, இங்கு இவனை' என்ன, பிறை முகப் பகழி ஒன்றால்,
உளம் புகத் தொடுத்தான், பாகன் உரை முடிவதன்முன் அம்மா!

105
உரை
   


கண்ணன் உரைப்படி பிறைமுக அம்பை விசயன் ஏவுதலும்,
அசுவத்தாமன் மயங்கித் தேரில் விழ, துச்சாதனன் கண்டு
தேரொடும் அவனைக் கொண்டு போதலும்

எய்த அப் பகழி ஒன்றால், ஈசன் மா மதலை மாழ்கி,
வெய்துயிர்த்து இரதமீது வீழ்ந்தனன்; வீழ்ந்தோன்தன்னைக்
கைதவச் செயலினான் துச்சாதனன் கண்டு, முன்னைச்
செய் தவப் பயன்போல் வந்து, தேரொடும் கொண்டு போனான்.

106
உரை
   

அசுவத்தாமன் மீண்டும் வர, சித்திரவாக
பாண்டியன் அவனோடு பொருதல்


போன அப் புரவித்தாமா புரிந்து போர் தொடங்கும் எல்லை,
சேனைகள் நான்கினோடும் சித்திரவாகன் என்னும்
மீனவன், வழுதி, மாறன், வெண் மதி மரபில் வந்தோன்,
வானவர் முதல்வன் சென்னி வரி வளை உடைத்து மீண்டோன்,

107
உரை
   

சென்று எதிர் ஊன்றி, வெவ் வேல் சேய் அனான் தேரின்மேலும்,
வன் திறல் வலவன்மேலும், வாம் பரிமாவின்மேலும்,
துன்றிய கணைகள் ஏவி, தொடு சிலை துணித்து வீழ்த்தான்;
அன்று அவன் செய்த வீரம் அரசரில் ஆர் செய்தாரே!

108
உரை
   


வேறு ஒர் தேர் மேற்கொண்டு, விதி தரு மரபினோனும்
சீறி, வெங் கணைகள் நூறு தெரிந்து, ஒரு சிலையும் வாங்கி,
கூறிய செஞ் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை
ஆறு உடையவனை அஞ்ச, அருஞ் சமர் உடற்றினானே.

109
உரை
   


அந்தணன் ஏவை எல்லாம் அவனிபன் அவ் அவ் அம்பால்
முந்துற விலக்கி, தங்கள் மூவகைத் தமிழும் போல,
சிந்தையில் குளிக்குமாறு, சிலீமுகம் மூன்று விட்டான்;-
தந்தையை முதுகு கண்டோன் தனயனுக்கு இளைக்குமோதான்?

110
உரை
   


காலினல் துகைத்து, வேலைக் கனை கடல் ஏழும் முன் நாள்
வேலினால் சுவற்றும் கொற்ற வெங் கயல் விலோத வீரன்,
மாலினால் பொரு கை வேழம், வாசி, தேர், பதாதி, மாய,
கோலினால் சுவற்றினான், அக் குறுகலார் சேனை வெள்ளம்.

111
உரை
   


பாண்டியன் அசுவத்தாமனோடு கடும் போர்
விளைத்து இறந்துபடுதல்

சங்கரன் அருளால் வந்த சதுர் மறைக் குமரன் மீள,
பொங்கு அழல் கடவுள் என்ன, பொரு சிலை வெய்தின் வாங்கி,
மங்குல்போல் பொழியும் வாளி மழையினால் அழிந்தது அந்தோ,
செங் கயல் நெடும் பதாகைத் தென்னவன் செம் பொன் தேரே!

112
உரை
   


சிங்க ஏறு அனையான் அந்தத் தேரின்நின்று இழிந்து, முன்னம்
தங்கள் மால் வரையில் வைகும் தமிழ்முனிதன்னைப் போல,
பொங்கு வெண் தரங்க முந்நீர்ப் புணரிகள் ஏழும் சேர
வெங் கையால் வாரும் கொற்ற வேழமா மேற்கொண்டானே.

113
உரை
   


மலையினில் பிறந்த ஆரம் மணம் கமழ் வடிவில் தங்கள்
அலையினில் பிறந்த ஆரம் அழகு உற அணிந்த கோமான்,
கொலையினில் சிறந்த கோட்டுக் குஞ்சரம் கொண்டு, மீண்டும்
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செருச் செய்தானே.

114
உரை
   


மோதி மத் தாரை மாறாக் கைம் முகம் உகுத்த செக்கர்ச்
சோதி மத்தக வெங் குன்றின் தழை செவித் துளங்கு காற்றால்,
சாதிமைத் துரோணன் மைந்தன் தனித் தடந் தேரில் கொற்ற
ஓதிமப் பதாகை ஆடை அப்புறத்து ஒடுங்கிற்று அம்மா!

115
உரை
   


கூற்று என, கொண்டல் என்ன, குரை கடல் என்ன, சூறைக்
காற்று என, கொடிய கோபக் கடும் பெருங் கரட மாவின்
ஊற்று எழும் மதங்கள் ஏழும் ஒழுகி, மண் உடைந்து, தாழும்
சேற்றிடைப் புதைந்தது, அந்தச் சேய் அனான் தேரின் காலே.

116
உரை
   


மறையவன் செம் பொன் தேரை வளைந்து, மண்டலங்கள் ஓட்டி,
பிறை முகக் கணையால் அம் தண் பிறைக் குல வழுதி எய்ய,
நிறை வயப் புரவித்தாமா நேர் உற விலக்கி, தன் கை
அறை சிறைப் பகழி ஒன்றால், ஆனையை வீழ்வித்தானே.

117
உரை
   


பாண்டியன் கை வில்லோடும் பதாதியாய், பகழி சிந்தி,
ஈண்டிய இவுளித்தாமன் இரு தடந் தோளும் மார்பும்
வேண்டியவாறு சோரி வீழ்தரப் பொருத பின்னர்,
தூண்டிய துரோணன் மைந்தன் தொடை ஒன்றால், தானும் வீழ்ந்தான்.

118
உரை
   


தருமன் சேனை பின்னிட, துரியோதனன்
சேனையோர் அம்பு எய்தல்

'பட்டனன் முனிவன் கையின் பஞ்சவன்' என்று, வேந்தர்
கெட்டனர், முரசம் தீட்டும் கேதனன் சேனையுள்ளார்;
தொட்டனர், வரி வில்; வாளி தொடுத்தனர்; அடுத்து மேன்மேல்
விட்டனர், வேந்தர் வேந்தன் சேனையில் வேந்தர் உள்ளார்.

119
உரை
   

அசுவத்தாமன் முன் சோழன் தோன்றி, அவனை இகழ்தல

விற் கை ஆரியன் மகன் விசும்பின் வீழ்தரும்
உற்கையாம் என விடும் ஒளி கொள் வாளியால்,
கொற்கையான் இறந்த பின், கோழியான் எனும்
சொல் கையா மனு குலத் தோன்றல் தோன்றினான்.

120
உரை
   

'தேரின்மேல் நின்று, நீ சிறு கண் செம்புகர்க்
காரின்மேல் வீரனைக் கணையின் காய்வதே?
பாரின்மேல் ஆர்கொல் இப் பாதகம் செய்தார்?-
நீரின்மேல் எழுத்து என நிலை இல் ஆண்மையாய்!

121
உரை
   

'ஆர்ப்பன மறை மொழிந்து, அனைவர் பாவமும்
தீர்ப்பன வேள்விகள் செய்வது அன்றியே,
கூர்ப்பன பல படை கொண்டு போர் செய,
பார்ப்பன மாக்களும் பாரின் வல்லரோ?

122
உரை
   


'தாதையைக் கொன்ற வெஞ் சாப வீரனைக்
கோதை வில் கணைகளால் கொன்றிலாத நீ,
ஊதை முன் சருகுபோல் ஓடல் அல்லதை,
மோது அயில் படைகொடு முனைய வல்லையோ?'

123
உரை
   

சோழனும் அசுவத்தாமனும் பொருத வகை


என்று, சில் மொழி மொழிந்து, இவுளித்தாமன்மேல்
துன்று வில் வளைத்தனன், சோழ பூபதி;
குன்றுடன் குன்று அமர் குறிக்குமாறுபோல்
சென்று சென்று அடுத்தன, தேரும் தேருமே.

124
உரை
   


இருவர் செங் கரங்களும், இரண்டு கால்களும்,
உரன் உறப் பிணித்த நாண் ஓசை வீசவும்,
மருவு பொன்-தோள் உற வலியின் வாங்கவும்,
விரைவுடன் வளைந்தன, வில்லும் வில்லுமே.

125
உரை
   


புகல் அரு மறையவன் புராரி ஆதியாம்
திகழ் ஒளி இமையவர் சிறப்பின் ஈந்தன,
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே,
அகல் வெளி புதைத்தன, அம்பும் அம்புமே.

126
உரை
   

சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை
இரு கணை புயத்தினும், இரண்டு மார்பினும்,
ஒரு கணை நுதலினும், உருவ ஏவினான்-
மரு விரி தாதகி வாச மாலையான்.

127
உரை
   

பிறை முடிச் சடையவன் பிள்ளை வள் உகிர்
விறலுடைப் புலிக்கொடி வீரன் மெய் எலாம்
புறவினுக்கு அரிந்த நாள் போல, மேல் விடும்
திறலுடை வாளியால் சிவப்பித்தான்அரோ.

128
உரை
   


சோழன் எறிந்த வேலால் அசுவத்தாமன் கலங்கி விழ, சகுனி
முதலியோர் அவனை எடுத்து, வருத்தம் மாற்றுதல்

துளவு அணி முடியவன் துள்ளு கன்றினால்
விளவினை எறிந்தென, வீர வேலினால்,
வளவனும் வெகுண்டு, பின், மயூரவாகனன்
இளவலை எறிந்தனன், எவரும் அஞ்சவே..

129
உரை
   


உருத்திரன் தாதுவின் உற்பவித்த அக்
கருத்துடை முனிவன் மெய் கலங்கி வீழ்தலும்,
திருத் தகு சகுனியும், சிற்சில் வேந்தரும்,
வருத்தமோடு எடுத்து, அவன் வருத்தம் மாற்றினார்.

130
உரை
   


அசுவத்தாமனுடன் மன்னர் பலர் மீள வந்து,
சோழனுடன் போர் செய்து, அழிந்து மீளுதல்

அவனொடும் மீள வந்து, அபயன் தன்னொடு,
கவன மான் தேருடைக் காவல் மன்னவர்,
சிவனொடும் அமர் பொரும் தெவ்வர் என்னவே,
துவனி செய் முரசு எழ, துன்று போர் செய்தார்.

131
உரை
   

துன்மருடணன் மகன் சுவாகு, துன்முகன்
வில்மகன் சுவாது, வாள் வெயில் விபாகரன்-
தன் மகன் திருமகன் சங்கன், என்பவர்
மன் மகார் பலரொடும் மடிந்து வீழவே,

132
உரை
   


பண் அக இசை அளி பாடு தண்டலைக்
கண் அகன் காவிரி நாடன் கைக் கணை,
மண்ணகம் நெருக்கு உற மலைந்த மன்னரை,
விண்ணகம் இடன் அற விரைவின் ஏற்றவே,

133
உரை
   


முன்னிய சிலை மறை முனிவன் மைந்தனும்,
தன் நிகர் இலா விறல் சகுனி ஆதியாத்
துன்னிய நிருபரும், 'தொல் அமர்க்கு நீ
சென்னி!' என்று, அவன் புகழ் செப்பி மீளவே,

134
உரை
   

தம்பியர் ஒன்பதின்மருடன் துச்சாதனன்
வீமனை அடுத்து எதிர்த்தல்


சோனா மேகம் பொழிவதுபோல்,-துச்சாதனனும் தம்பியரும்
வான் நாடு ஏற வழி தேடி வருவார் போல, வெருவாமல்,
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற
                          வீமன் எதிர்,-
ஆனா வாளி மழை தூவி அடல் வெஞ் சிலையோடு, அடுத்தாரே.

135
உரை
   


'உருத்து, இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன்!' என, எண்ணி,
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவனப் புரவிக் கால் தேரில்
செருத் திண் பணைகள் முழங்க வரு செங்கோல் மன்னற்கு
                          இளையோனை
மருத்தின் புதல்வன் கண்டு, மழை முகில்போல், எதிர்
                          வாய்மலர்ந்தானே:

136
உரை
   

துச்சாதனன் வீரத்தை வீமன் பழித்துரைத்து,
வஞ்சினம் கூறுதல்

'துச்சாதனனே! உனைப்போலும் சூரர் உளரோ? சூரர் எலாம்
மெச்சாநின்றார் வேத்தவையில் மேல் நாள் நீ செய் விறல்
                          ஆண்மை;
அச்சு ஆர் இரதப் போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு?
                          அம்ம! விரைந்து,
இச்சா போகமாக விருந்து இன்றோ மறலிக்கு இடும் நாளே?

137
உரை
   

'இன்றோ, உன்தன் சென்னி துணித்து இழி செம் புனலில்
                          குளித்திடும் நாள்?
இன்றோ, அழலின் உற்பவித்தாள் இருள் ஆர் அளகம்
                          முடித்திடும் நாள்?
இன்றோ, தாகம் கெட நாவுக்கு இசைந்த தண்ணீர் பருகிடும் நாள்?
இன்றோ, உரைத்த வஞ்சினங்கள் எல்லாம் பயன் பெற்றிடும் நாளே?

138
உரை
   


'வென்றே அவனி முழுது ஆளும் வீரோதயன் நின் தம்முனையும்
கொன்றே, நாளை அமரர் எதிர்கொள்ளக் கடிதின் வர விடுவன்;
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய்; எண்ணா எண்ணம்
                          எணி, மன்றில்
அன்றே கலகம் விளைத்து, என்றும் அழியா அரசை அழித்தோனே.

139
உரை
   


துச்சாதனன் வாய் பேசாது நிற்க, ஒன்பதின்மர்
தம்பியரும் வீமனை எதிர்த்து மாளுதல்

வீமன் கருத்தோடு இவை மொழிய, வேறு உத்தரம் மற்று
                          ஒன்று இன்றி,
ஊமன்தனைப்போல் அவன் நிற்க, உடனே இளையோர் ஒன்பதின்மர்
                          நாமம் பெறு கோல் ஓர்
ஒருவர் நால் நாலாக நடந்த வழி
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார், எதிர் வந்து அடுத்தாரே.

140
உரை
   


தொடுத்தார் தொடுத்த கணை அனைத்தும், சூரன்தானும்,
                          தன் கணையால்
தடுத்தான்; மீள ஓர் ஒருவர்க்கு ஓர் ஓர் பகழி, தனு வாங்கி,
விடுத்தான்; அவரும் இரதமிசை வீழ்ந்தார்; வீழ்ந்த வீரரை வந்து
அடுத்தார், விரைவில், அகல் வானத்து அழகு ஆர்
                          காதல் அரம்பையரே.

141
உரை
   

துச்சாதனன் வெகுண்டு வீமனுடன் விற்போர் பொருதல்

உயிர்க்கு ஆர் உயிராம் தம்பியர்கள், ஓர் ஒன்பதின்மர்,
                          வீமன் கைச்
செயிர்க் காய் கணையால் சிரம் துணிந்து, தேர்மேல் வீழ,
                          சினம் கதுவி,
பயிர்க்கா மாரி பொழிந்து வரு பருவப் புயல்போல் பாவனனை
மயிர்க் கால்தொறும் அம்புஇனம் சொருக, மன்னற்கு இளையோன்
                          மலைந்தானே.

142
உரை
   


தன் மேல் உரக கேதனனுக்கு இளையோன் தொடுத்த
                          சரங்கள் எல்லாம்
கல்மேல் மேகத் துளி என்னக் காய்ந்தான், அவற்றைக் கடிது உதறி,
மல் மேற்கொண்ட புயம் உற வில் வாங்கி, கொடும் போர் வாளி பல
மென் மேல் எய்தான்; எதிர்ப்பட்டால் விடுமோ, பின்னை,
                          விறல் வீமன்?

143
உரை
   


தூவாநின்ற ஏ அனைத்தும் துச்சாதனன் தன் தொடை பிழையா
ஏவால் விலக்கி, ஏழு கணை எய்தான்; எய்த கணை ஏழும்
மாவானவற்றின் தலை நான்கும், மடங்கல் கொடியும், மணித் தேரும்,
மேவா, நிருபன் மலர்த் தடக் கை வில்லும், துணித்து, வீழ்த்தனவே.

144
உரை
   

இத் தேர் அழிய, வேறு ஒரு தேர் ஏறி, பரவையிடைச் சுழன்ற
மத்தே அனையான் சிலை வாங்கி, மன்னற்கு இளைய வய மீளி
அத் தேர் அழிய, கொடி, வலவன், வய மா, அனைத்தும் அற்று விழ,
பத்தே எய்து, ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட, எய்தான்.

145
உரை
   

தேர் இழந்த நிலையில் இருவரும் கதைப் போர் புரிதல்


காரின் கரிய குழல் தீண்டி, கலை அன்று உரிந்த கழற் காளை
பாரில் குதித்து, ஓர் அதி பாரப் பைம் பொற் கதையால் பாவனன்தன்
தேரில் புடைக்க, தேர் சிதைந்து சிந்திற்று; அவனும் சிலை மாற்றி,
போரில் சிறந்த தண்டமுடன் புவிமேல் பாய்ந்தான், புலி போல்வான்.

146
உரை
   


இருவரும் புயங்களின் அப்பி, ஒத்தினர்; இகல் புரிந்து, தண்டு
                          இறுகப் பிடித்தனர்;
மருவி ஒன்றொடு ஒன்று அனல் கக்க, மொத்தினர்; வலம் இடம்
                          கொள் மண்டலம் முன் பயிற்றினர்;
அருகு சென்று சென்று, அடி வைத்து அடுத்தனர்; அகல நின்று நின்று,
                          ஒர் இமைப்பின் முட்டினர்;
திருகு வெஞ் சினத்து, இடி ஒத்து, உரப்பினர்; திசையின் மண்டு இபக்
                          கிரி சத்தமிட்டவே.

147
உரை
   

வெகுளி கொண்டு கொண்டு, எதிர் கொக்கரித்தனர்; விசையுடன்
                          கிளர்ந்து உயரக் குதித்தனர்;
உகவை விஞ்ச வெங் கதையைச் சுழற்றினர்; உயர் விசும்பு எறிந்து,
                          ஒரு கைப் பிடித்தனர்;
முகம் மலர்ந்து நின்று, அதிரச் சிரித்தனர்; முதிர வஞ்சினம் பல
                          கட்டுரைத்தனர்;-
மகிபர் கண்ட கண்டவர் சித்தம் உட்கிட, வரை இரண்டு வெஞ்
                          சமர் கற்பது ஒக்கவே.

148
உரை
   

இகலி வெங் கொடுங் கதை ஒத்து மொத்து ஒலி, இடியின் வெங் கொடுங்
                                    குரல் ஒத்து, ஒலித்தன;
மகிதலம் பிளந்தது; சர்ப்ப வர்க்கமும் வயிறு அழன்று, நஞ்சுகள்
                                    கக்கியிட்டன;
திகிரி அம் தடங் கிரி பக்கு நெக்கது; செவிடுகொண்டு அயர்ந்தன,
                                    திக் கயக் குலம்;
முகடு விண்டது, அண்டமும் அப்புறத்து உற; முகில்களும், பெருங்
                                    குகை புக்கு ஒளித்தவே.

149
உரை
   

விழிகளும் சிவந்தன; நெற்றியில் பொறி வெயர்வு வந்து அரும்பின,
                               இப்பி முத்து என;
மொழிகளும் கிளம்பின, நெட்டிடிப்பு என; முரி முரிந்த, வண் புருவச்
                               சிலைத் துணை;
எழிலுடன் பரந்து இறுகித் தடித்தன, இமய மந்தரங்களொடு ஒத்த
                               பொற் புயம்;
அழியும் அங்கம் என்று, ஒரு சற்று இளைத்திலர்; அமரில் அன்று,
                               அருங் கதை இட்டு, அடிக்கவே.

150
உரை
   


எதிர் மலைந்த வெஞ் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி
                                 மொய்ம்புற உத்தரிக்கவும்,
உதரம், நெஞ்சு, உரம், புயம், மெய், கழுத்து, என உரை செய்
                                 அங்கம் ஒன்றினும் உற்று உறைத்தில;
கதைகளும் பிளந்து, ஒடிபட்டு எடுத்தன; கரதலங்களும்
                                 கருகிச் சிவந்தன;
முதிர் சினம் கொளுந்தலின், முற்றும் விட்டிலர்; முரணுடன்
                                 தொடங்கினர், முட்டி யுத்தமே.

151
உரை
   

கதையை விடுத்து, இருவரும் முட்டி யுத்தம் செய்தல்


விரல்கள் ஐந்தையும் செறியக் குவித்து, ஒளி மிகு நகம் புதைந்திட
                                    உட் புதைத்து, இரு
கரதலங்களும் சிகரப் பொருப்பிடை கரிய கொண்டல் மண்டு உரும்
                                    ஒத்து இடித்திட,
அருளுடன் சிறந்து அறன் உற்ற கொற்றவன் அநுசனும், தயங்கு
                                    உரகத் தனிக் கொடி
நிருபர்தம் பெருந்தகை முன் கனிட்டனும், நினைவுடன் கலந்து, எதிர்
                                    குத்தியிட்டபின்.

152
உரை
   

அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன், அரசன் முந்து
                                    தம்பியை மத்தகத்திடை
கனல் கொளுந்த வந்து அதிரத் தகர்த்து, இரு கவுள் நெரிந்து, வண்
                                    செவி உட் கரக்கவும்,
முனை சிதைந்து உரம் பெறு பல் தெறிக்கவும், மொழிகளும் தளர்ந்தன
                                    முற்று ஒளிக்கவும்,
மினலினும் சிவந்து ஒளி மிக்க அற்புத விழி பிதுங்கவும், பெருகக்
                                    கலக்கியே,

153
உரை
   


பத யுகங்கள் அங்குலி தொட்டு உறுப்பு உள பலவும் என்புடன் தசை
                                    பற்று விட்டு அற,
விதவிதம் படும் புடைபட்டு இடிப்புற, விசி நரம்பு சந்துகளில்
                                    தெறித்து இற,
மதுகை அம் தடம் புய வெற்பு அற, பல வரையுடன் பொருந்திய
                                    நல் கழுத்து அற,
முதுகிலும் கவின் பெற உற்பவித்தென முகனையும் புறம்
                                    திருகத் திருப்பியே,

154
உரை
   

வீமன் துச்சாதனன் உடலைத் துகைத்து, குருதியில் குளித்தல்


மயிரை வன் கரம்கொடு உறப் பிடித்து, எதிர் வர விழுந்திடும்படி பற்றி
                                       இட்டு, உடல்
அயிர் படும் கடுந் தரையில் துகள்பட, அடி இரண்டினும் சரியத்
                                       துகைத்து, எழு
செயிருடன் பெருந் தொடை தொட்டு இழுத்து, அணி திகழ் உரம்
                                       புகுந்து அவுணக் குலத்து இறை
உயிர் கவர்ந்த சிங்கமொடு ஒப்புறத் தனது ஒளி சிறந்தனன்,
                                       கடிது உக்கிரத்தொடே.
155
உரை
   

உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி, எங்கணும்
                                    புதைபட்டு, உரத்தலம்
வகிரவும், கொடுங் குடர்வட்டம் அற்று உகு வயிறு தொங்கவும்,
                                    கிழிவித்த பின்,-செறி
துகிர் பரந்த செம் பவர் ஒத்த நெட்டுடல் சொரிதரும் செழுங்
                                    குருதிப் பெருக்கிடை,
பகிரதன் தரும் கடவுள் துறைப் புனல் படியும் உம்பர்தம்
                                    பரிசின், குளிக்கவே,

156
உரை
   


துச்சாதனன் இறக்கவே, துரியோதனன் சேனை
நில்லாது வென்னிடுதலும், கண்ணன் முதலியோர்
வீமனை வந்து கூடுதலும்

மன்னற்கு இளையோனை வாள் தருமனுக்கு இளையோன்
துன்னிப் பிளந்து, சுரர் உலகம் ஏற்றுதலும்,
கன்னற்கும் மற்று உள்ள காவலர்க்கும் நில்லாமல்,
வென்னிட்டது, அம் மன்னன் வீரப் பெருஞ் சேனை.

157
உரை
   

வண்டு ஆரவாரம் அறாத நறும் பூந் துளபத்
தண் தார் முடியோனும், விற் கைத் தனஞ்சயனும்
கண்டார்; அவர் முதலாம் காவலரும் கைகலந்தார்;
வெண் தாரகை பரந்த விண் ஒத்தது, ஆகவமே.

158
உரை
   


வீமன் துச்சாதனன் விரல் பத்தையும் மீண்டும் துணித்து,
அவனது உதிரத்தைக் குடிக்கப் புக, கண்ணன் தடுத்தல்


'வேகம் மிகும் செந் தீயில் மேல் நாள் அவதரித்த
தோகை குழலும் துகிலும் உடன் தொட்டன' என்று,
ஆகம் உறப் பிளந்த ஆண்தகை, மீண்டு, அவ் வீரன்
பாகம் உறு கை விரல்கள் பத்தும் துணித்தானே.
159
உரை
   

தண்ணீர் நிகர் எனத் துச்சாதனன் தன் மெய்யில் இழி
புண்ணீர் பருகப் புகுவோனை, யாவருக்கும்
கண்ணீர் வரத் தடுத்தான்-காணுங்கால், எத்திறத்தும்
வெண் நீர்மை இல்லாத மேகம்தனைப் போல்வான்.

160
உரை
   

வீமன் குருதியைக் குடியாமல் கொப்பளித்து நின்று கூத்தாடி,
தருமனது அடி வீழ்ந்து செய்தி சொல்லி, அகங்கரித்தல்


குடியாமல் அக் குருதி கொப்பளித்து, வாகை
முடியாநின்று, 'என் எண்ணம் முற்றினன்' என்று ஆங்கண்
படி ஆளும் செங்கோன்மைப் பார்த்திவருக்கு எல்லாம்
கொடி ஆர் மடங்கல் எனக் கூத்தாடி நின்று ஆர்த்தான்.

161
உரை
   


'துன்பம் உறும் துன்னீதித் துச்சாதனன் போர் செய்து,
ஒன்பதின்மர் தம்பியரோடு உம்பர் ஊர் புக்கான்' என்று,
அன்புடைய தம்முன் அடி வீழ்ந்து அகங்கரித்தான்-
வன்புடைய தாதையினும் மிக்க வலியோனே.

162
உரை
   


கன்னன் சற்றுப் போர் ஓய்ந்திருக்க, சல்லியன்
இடித்துரைத்தல்

பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என,
காண்டவம் அன்று உண்ட கனல்போல், நனி தருக்கி,
மூண்ட நிலை கண்டு, முதுகிடு தன் சேனையுடன்
மீண்டும் எதிர் ஊன்றாமல், வெய்யோன் மகன் நின்றான்.

163
உரை
   


'மேல்கொண்டு பாண்டவர்தம் வெஞ் சேனை சூழ்ந்திடவும்
மால் கொண்டவர் போல மாண்டாய்!' எனக் கழறி,
கால் கொண்ட திண் தேர் கடாவினான், கை உளவு
கோல் கொண்டான்; கன்னனும் அக் கூற்றுக்கு எதிர் கூறும்:

164
உரை
   

'துச்சாதனன் இறந்த சோகமே தவிர வேறு அன்று' என்று,
கன்னன் சேனையைப் பேரணி ஆக்கி எதிர்த்தல்


'வேந்தன் அனைய விறல் தம்பி வீமன் கை
மாய்ந்த நிலை கண்டு, மனம் தளர்ந்தது அல்லாது,
கூர்ந்த திறல் மத்திரத்தார் கோவே! வெருவுமோ,
பாந்தள் எதிர் செல்லப் பறவைக்கு அரசு?' என்றான்.
165
உரை
   

முன்னம் அமரில் முதுகிட்ட மன்னரையும்,
மன்னவர்கள் மன்னனையும், வன் பேர் அணி ஆக்கி,
பொன் அசலம் போலும் புனை பொற் கொடி நெடுந் தேர்க்
கன்னன், எதிர் ஊன்றினான், காயும் கனல் போல்வான்.

166
உரை
   


திட்டத்துய்மனும் தன் சேனையை வகுத்து
எதிர் வந்து பொருதல்

சேனாபதியான தேர்த் துருபதேயனும், வான்
மீனாம் எனப் பரந்த வேந்தருடனே, தனக்குத்
தான் ஆண்மைக்கு ஒப்பாம் தருமனையும் சேனையையும்,
மா நாகம் உட்க வகுத்து, ஆங்கு எதிர் நடந்தான்.

167
உரை
   

பொன் ஆர் முரசம் முதல் போர் வெம் பணையாலும்,
வில் நாண் ஒலியாலும், விண்ணோர் செவிடுபட;
பல் நாம பேதப் படை ஒளியாலும், பல பூண்
மின்னாலும், கண்கள் வெறியோடிவிட்டனவே.

168
உரை
   


விடசேனன் நகுலனுடன் பொருது, அவனை
மயங்கி விழுமாறு செய்தல்

யாமினியில் எவ் உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன்
மா மதலை கோ மதலை மான் தேர் விடசேனன்,
நாம மணித் தேர்மேல், நகுலன்மேல் சென்று, சில
தாம முனை வாளி தழற் பொறிபோல் சிந்தினனே.

169
உரை
   

வெம் புரவித் திண் தேர் விசயற்கு இளையோனும்,
செம் பதுமக் கையில் சிலை நாண் ஒலி எழுப்பி,
கம்ப மத மால் யானைக் கன்னன் மகன் ஏவிய கூர்
அம்பு அடைய அம்பால் அறுத்து அறுத்து, வீழ்த்தினனே.

170
உரை
   

அண்டர் பெருமானுக்கு அம் பொற் கவசமுடன்
குண்டலமும் ஈந்தோன் குமரன் கொடுங் கணையால்,
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த
திண் திறலோன் தம்பி தடந் தேர்க் கால்களை அழித்தான்.

171
உரை
   


மற்று ஒரு தேர் ஏறி, மருத்துவர்தம் மைந்தனும், அக்
கொற்ற நெடுங் கச்சைக் கொடியோன் திருமைந்தன்
வெற்றி விலோதனமும் வெஞ் சாபமும் உடனே
அற்று விழ எய்தான்; அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே?

172
உரை
   


மீண்டு, அவனும் வேறு ஒரு வில் மேரு என வாங்கி,
பாண்டவனை வீழும்படி எய்தான்; வீழ்ந்தோனை
மூண்ட அனல் செங் கண் முரண் வீமன் கொண்டு ஏக,
காண்டவம் நீறு ஆக்கினான், கண்டான் அவன் போரே.

173
உரை
   


விழுந்த நகுலனை வீமன் கொண்டு செல்ல, அருச்சுனன்
விடசேனனோடு பொருது, அவனை மாய்த்தல்

நன் தூண் திகழ் மதியா, நாகம் பரு மத்தா,
அன்று ஊண் திரை மதியா, அண்டர்க்கு அமுது அளித்தோன்
முன் தூண்டிய தேரில் சென்றான்-முனை வாளி
மின் தூண்டில் வீசி, விடசேன மீன் படுப்பான்.

174
உரை
   

'தம்பி படும் துன்பம் தமையனையும் காண்பன்' என
வெம்பி எதிர் சென்று, விடசேனன் வில் வாங்கி,
பம்பி வரு கொடித் தேர்ப் பார்த்தனையும் பாகனையும்
அம்பின் மறைத்தான், அடல் ஏறு அரி அனையான்.
175
உரை
   

வில் நாணும், வில் பிடித்த வெவ் விரலும், வில் நடுவும்,
முன் ஆன தும்பை முடித்தோன் முடித் தலையும்,
பின் ஆக வாங்கும் பிறை அம்பும், பேர் அமரில்
ஒன்னார் முனை தடிந்தோன், ஓர் அம்பினால் அறுத்தான்.

176
உரை
   


வீழ்ந்தான் விடசேனன்; வேந்தர் எலாம் வெஞ் சமரில்
தாழ்ந்தார், புறங்கொடுத்தார், தந்தை தடந் தேர்க் காலைச்
சூழ்ந்தார்; சில வீரர் தோலாது எதிர் நடந்து,
வாழ்ந்தார், சுரர் ஆகி, வான் மாதர் மெய் கலந்தே.

177
உரை
   

அப்பொழுது கன்னன் கருத்து அழிந்து
விழ, சல்லியன் தேற்றுதல்


'சாய்ந்தனன் களத்து அருச்சுனன் சரத்தினால் தனயன்'
                             என்று அவன்-தந்த
வேந்தனும் கருத்து அழிந்து தன் தேர்மிசை வீழ்ந்தனன்;
                             அவன பொன்-தேர்
ஊர்ந்த சல்லியன் தேற்றினன், பற்பல உரைகளால்; அவ் எல்லைப்
பாந்தள் அம் கொடிப் பார்த்திவன் நின்றுழிச் சென்றனன்,
                             பரித்தாமன்..

178
உரை
   


அசுவத்தாமன் துரியோதனனை அடுத்து, 'இப்பொழுதாயினும்
பாண்டவருடன் கூடி வாழ முற்படு!' எனல்


'தப்ப அருஞ் சமர் விளைத்தனிர், நீயும் அத் தருமன்
                             மைந்தனும்; வென்றே
மெய்ப் பெரும் புகழ் புனை குருகுலத்திடை, வீடுமன் முதலான
எப் பெருந் திறல் குரவரும் கிளைஞரும், ஏனை மன்னரும், யாரும்,
ஒப்பு அரும் பெருஞ் சாதுரங்கத்துடன் உடன்று, உயிர் மாய்ந்தாரே!
179
உரை
   

'வளை இலாதன மங்கல விழவும், நல் வரம்பு இலா மரபும், தொல்
விளைவு இலா அரும் புலமும், முத் தீ இலா வேதியர் மனை வாழ்வும்,
                           துளை இலா மணி
முத்தும், அம் தண் புனல் துறை இலா வளநாடும்,
கிளை இலா அரசு இயற்கையும், நன்று எனக் கேட்டு
                           அறிகுவது உண்டோ?

180
உரை
   

'தும்பி மா, பரிமா உள, தேர் உள, சுருங்கின; சுருங்காமல்
நும்பிமார்களில் இருந்தவர்தம்மொடும், நுவல் அரும் பல கேள்வித்
                            தம்பிமாரொடும், நும்முன் ஆகிய
விறல் தருமன் மா மகனோடும்
பம்பி, மா நிலம் புரப்பதே கடன்' எனப் பார்த்திவற்கு
                            உரை செய்தான்.

181
உரை
   


'போரில் மாய்தலே நான் பெறும் பயன்!' எனத்
துரியோதனன் மறுத்து மொழிதல்

ஆரியன் திருமகன் இவை உரைசெய, அரசனும் அவை கேட்டு,
'காரியம் புகல்வது புவி ஆட்சியில் கருத்து உடையவர்க்கு அன்றோ?
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ, சுரர் உலகு உயிர் எய்த,
வீரியம் பெறல் எனக்கு இனிப் பயன்!' என விளம்பினன்,
                             விறல் வேலோன்.

182
உரை
   


அசுவத்தாமனுடன் துரியோதனன் கன்னனை அடுத்து, அவன்
சோகம் மாற்றி, விசயனது உயிரைக் கொள்ளுமாறு தூண்டுதல்

முனி மகன் புகல் கட்டுரை மறுத்த பின், முனிவு உறாவகை போருக்கு
இனிமை கொண்ட சொல் பல மொழிந்து அவனொடும்,
                              இரப்பவர் உள்ளங்கைக்
கனி எனும் கொடைக் கன்னனைத் தழீஇ, அவன் கண் உகு
                              புனல் மாற்றி,
பனி நெடுங் குடைப் பார்த்திவன் நுவன்றனன், பார்த்தனது
                              உயிர் கொள்வான்.

183
உரை
   


'விசயன் தலை கொய்வேன்!' என்று கூறிக் கன்னன் எழ,
இருபக்கத்துச் சேனைகளும் நெருங்கிப் பொருதல்

'மலை கலங்கினும், மாதிரம் கலங்கினும், மாதிரங்களில் விண்ணோர்
நிலை கலங்கினும், நெடுங் கடல் கலங்கினும், நிலம்
                              கலங்கினும், சேடன்
தலை கலங்கினும், பேர் அவை மூன்றினும் தளர்வு இலாதவர் கற்ற
கலை கலங்கினும், போர்முகத்து என் மனம் கலங்குமோ? கலங்காதே.

184
உரை
   

'என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு
                     ஏவிய புருகூதன்,-
தன் மகன் தலை துணிப்பன், இக் கணத்தில்,
                     ஓர் சாயகம்தனில்' என்று,
மன்மகன்தனக்கு, இரதம் ஊர் மத்திரன் மகன்தனக்கு,
                     உயர் வேள்வி
வில் மகன்தனக்கு, உளம் மகிழ்ந்து உரைத்தனன்,
                     வெயிலவன் மகன் அம்மா.
185
உரை
   

'சுரிமுகங்களில், பேர் இயங்களில், எழு துவனியால் பகிரண்டம்
நெரியும்!' என்று அயன் அஞ்சினன்; 'சேனையின் நெருக்கினால்,
                               எனைத்து உள்ள
கிரிகளும் சரிந்திடும்!' என அஞ்சினன்; கிரீசனும்; கிளர் ஆழி
அரியும் அஞ்சினன், 'தூளியால் அலை கடல் அடைய
                               வற்றிடும்!' என்றே.

186
உரை
   


பரியுடன் பரி நெருங்கின; நெருங்கின, படையுடன் படை; மத்தக்
கரியுடன் கரி நெருங்கின; நெருங்கின, கடவு தேருடன் தேரும்;
விரி நெடுங் குடை குடையொடு நெருங்கின; விலோதமும் விலோதத்தோடு
அரி எறிந்திட நெருங்கின, ஆடையும் ஆடையும் அலமந்தே.

187
உரை
   

பரியில் வீரரும் பரியில் வீரரும் வயப் படை எறிந்தனர்; கொற்றக்
கரியில் வீரரும் கரியில் வீரரும் அமர் கடுகினர்; கால் தேராம்
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர்; பத சாரித்
தெரியல் வீரரும் தெரியல் வீரரும் உடன் செருப்
                              புரிந்தனர் அன்றே.

188
உரை
   


எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன; இலக்கு உறக்
                                கொடும் பாணம்
தொடுத்த சாபமும் சாபமும் வளைந்தன; தொடியுடைக் கர சாலத்து
அடுத்த வாளமும் வாளமும் பொருதன; அங்குலிகளின் சுற்றி,
விடுத்த நேமியும் நேமியும் துணித்தன, வீரர் சென்னிகள் வீழ

189
உரை
   

அறன் மகன் பெருஞ் சேனையின் நிருபரும், அரவ வெங் கொடி ஆடை
                               மறன் மகன் கொடுஞ்
சேனையின் நிருபரும், -வஞ்சினம் பல கூறி,
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிர் எதிர் சென்று சென்று,
                                இடம்தோறும்
உற மலைந்தனர், -ஒருவருக்கு ஒருவர் தோள் உரமும்
                                வீரமும் ஒத்தோர்.

190
உரை
   

விசயன் தம்பியரோடு கணைமழை பொழிந்து வர, கன்னனும் அசுவத்தாமா முதலியோர் சூழச் சென்று, கடும் போர் பொருதல்

இளைஞரும் பெருஞ் சேனையும் இரு புடை நடக்க,
கிளைஞர் யாவரும் நேமி அம் கிரி எனச் சூழ,
விளையும் வெஞ் சின வீமன் முன் போதர, விசயன்
வளை நெடுஞ் சிலை கணை மழை பொழிந்திட, வந்தான்.

191
உரை
   


கிரிசன் மைந்தனும், கிருபனும், கிருதவன்மாவும்,
வரி பொலங் கழல் சகுனியும், முதலிய மறவோர்
எரியும் வெங் கனற் கண்ணினர் எயில் எனச் சூழ,
தெரியும் வாளி வன் சிலையுடைக் கன்னனும் சென்றான்.

192
உரை
   

மல் வளைத்த தோள் வலன் உற வலன் உறத் தம்தம்
வில் வளைத்தனர், விசையுடன் சிலீமுகம், திகிரிக்
கல் வளைத்த பார்தனக்கு இடு காவணம் போல,
சொல் வளைத்திலர், தொடுத்தனர்-தும்பை அம் தொடையார்.

193
உரை
   


மருவ அருஞ் சுருதி கூறும் நிலை நாலும் வழுவாது
இருவரும் சிலை வணக்கியதும், எய்த விரகும்,
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்; உகாந்தம் எனவே
வெருவரும் செயலில் விஞ்சினர்கள், விஞ்சையருமே.

194
உரை
   

ஒன்றொடு ஒன்று முனையோடு முனை உற்று உற விழும்;
ஒன்றொடு ஒன்று பிளவு ஓட விசையோடு புதையும்;
ஒன்றொடு ஒன்று துணி பட்டிட ஒடிக்கும்; உடனே,
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும்;-எதிர் ஓடு கணையே.
195
உரை
   


இடம் புரிந்திடில் வலம் புரியும், எண்ணின் முறையால்;
வலம் புரிந்திடில் இடம் புரியும்; மண்டலமும் ஆய்,
நடம் புரிந்து, பவுரிக் கதி நடத்தும்;-எதிரே,
சலம் புரிந்து, அதிர முட்டும் இரு சந்தனமுமே.

196
உரை
   


ஆசு போம் இவுளி மா கடவி, ஆழி இரதம்
மூசு போரில் ஒருவர்க்கு ஒருவர் முந்த விடலால்,
வாசுதேவனையும் மத்திர மகீபதியையும்
தேசு வேறு தெரிகிற்றிலர்கள், தேவர்களுமே.

197
உரை
   


மறமும் ஒத்த; வழு அற்ற சுழி ஒத்த; வலி கூர்
புறமும் ஒத்த; கதி பற்பலவும் ஒத்த; புகல் வாள்
நிறமும் ஒத்த; உயரம் பருமை நீளம் எனும் மெய்த்
திறமும் ஒத்த;-இரு தேரில் வரு திண் பரியுமே.

198
உரை
   


நிலை இரண்டில் உற நின்ற நிமலர்க்கு நிகர்வோர்
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே,
அலை இரண்டு என அதிர்ந்து பொரும் அவ் இருவர் கைச்
சிலை இரண்டும் நிமிராது, கணை சிந்தினர்களே.

199
உரை
   

அருச்சுனன் தேவதத்தம் முழக்கி, அம்பு
தெரிந்து விட, கன்னன் பராபரம் முழக்கி,
அவற்றைத் தறித்தல்

தேவதத்தமும் முழக்கி, உயர் தேவர் பலரால்
ஆவம் மெத்தும் வகை பெற்ற பல அம்பு தெரியா,
மூவர் தம்தம் வடிவாம் முதல்வன் மெய்ப் புதல்வன்மேல்
பூவின் மொய்த்த அறுகாலின் நிரை போல விடவே,

200

உரை
   

பரிதி அன்பொடு வழங்கிய பராபரம் எனும்
பெரு வலம்புரி குறித்து, விறல் அங்கர் பெருமான்,
வரி நெடுஞ் சிலை வலாரி திருமைந்தன் விடு திண்
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா,

201
உரை
   

மாயன் தேர் செல்லாதபடி கன்னன் சரகூடம்
அமைக்க, கண்ணன் விரகினால் எதிர்ப்
பக்கத்தும் சரகூடம் உளதாதல்

வயக் கதிர்க் கணை விதங்கள் கொடு மாயன் விடு தேர்
இயக்கம் அற்றிட இயற்றினன், ஓர் கூடம், இவனும்;
தியக்கம் உற்றிட மயக்கி, நெடுமால் செய் விரகால்,
உயக்கம் மிக்க சரகூடம் உளதாயது, அவணும்.

202
உரை
   

'செயலற்று நிற்றல் ஏன்?' என்ற கண்ணனுக்கு, விசயன்,
'கன்னன் தருமன்போல் தோன்றுதலின் எனக்கு அமர்
செய்தல் அரிது; தேரினை மீளவிடு' என மறுமொழி பகர்தல்

மாயா சரகூடம் வளைத்திடலால், வலையுள் படு வீர மடங்கல் என,
சாயாபதி மைந்தனும் நின்றனன்; மெய் தளர்வுற்றனன், நின்ற
                                தனஞ்சயனும்;
'ஏயா இது என்கொல் முனைந்து பொராது எழுது ஓவியம் ஆயினை'
                                என்று விறல்
காயா மலர் வண்ணன் விளம்புதலும், கவி வெங் கொடியோன் இரு
                                கை குவியா,

203
உரை
   


'வன் போர் புரி வெங் கணை அங்கர் பிரான் மறனால் உயர் பேர்
                                அறனார் குமரன்-
தன் போல விளங்கினன்; ஆதலின் என் தனுவும் குனியாது;
                                சரங்கள் செலா;
அன்பு ஓடியது உள்ளம்; எனக்கு இனிமேல் அவனோடு அமர்
                                செய்தலும் இங்கு அரிதால்;
வென் போகுவன்' என்றலுமே, இறைவன் விசையோடு இரதத்தினை
                                மீள விடா,

204
உரை
   


விசயன் தருமனை அடுக்க, அவன் விசயனது
வில்லைப் பழித்தலும், அது குறித்துக் 'கொல்வேன்!'
என்று எழுந்த விசயனைக் கண்ணன் விலக்குதலும்

முகில்வண்ணனும் வாசவன் மா மகனும் முரசக் கொடி மன்னவன்
                                முன்பு செல,
'பகலின்பதி மைந்தனை இன்னமும், இப் பகல் சாய்வதன் முன்பு,
                                படுத்திலையால்;
இகல் எங்ஙன் முடித்திடும், நின் கையில் வில்? இது என்ன வில்?'
                                என்று திருத்தமையன்
புகலும் சொல் அவன் செவியில் புகவே, புண்மேல் அயில் உற்றது
                                போன்றதுவே.

205
உரை
   


கூர் ஆர் முனை வாளி கொள் இச் சிலையைக் குறை என் எதிர்
                                கூறினர், அம் புவிமேல்
யார் ஆயினும், ஆவி செகுத்திடுமால்; இது வஞ்சினம் ஆதலின்,
                                இப்பொழுதே
தார் ஆர் புய வென்றி உதிட்டிரனைத் தலை கொய்வன்' எனத்
                                தனுவும் குனியா,
வாராமுன், விலக்கி, அருச்சுனனை 'வருக!' என்று தழீஇ மதுசூதனனே,

206
உரை
   


'"குரவோர்களை நீ எனினும், கொலையின் கொடிது" என்று உயர்
                                கேள்வியர் கூறுவரால்;
உரவோனையும் அம் முறை கொன்றதனோடு ஒக்கும் சில புன்சொல்
                                உரைத்திடுவாய்-
இரவோர் தமது இன் முகம் வண்மையினால் இதயத்தொடு கண்டு,
                                மகிழ்ந்து, பெரும்
பரவு ஓத நெடுங் கடல் சூழ் புவியில் பரிதாபம் ஒழித்த பனிக்
                                குடையோய்!'

207
உரை
   

விசயன் தமையனை நோக்கி இசையாத புன்மொழி பேச, தருமன்
ஒன்றும் கூறாது 'துறப்பேன்!' என்று கான் புக நினைதல்

என்னா உரை செய்தலும், அஞ்சி இளைத்து, இரு கைகொடு
                                இறைஞ்சி, நராதிபனைத்
தன் நா இசையாதன சிற்சில சொல், தளர்வோடு எதிர் நின்று,
                                தனஞ்சயனும்
சொன்னான்; அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல், 'இனித்
                                துறவு எய்துவன்!' என்று
உன்னா, விரைவொடு இரதத்தின் இழிந்து, உயர் கான் அடைவான்
                                உணர்வுற்றனனே.

208
உரை
   


கண்ணனும் விசயனும் தருமனை வணங்கி, 'கன்னனை உயிர் கொள்வோம்!' என்று விடை கொண்டு செல்லுதல்

நர நாரணர் சென்று தராபதி தாள் நளினத்தில் விழுந்து, ஒரு நாயகமா
வரன் ஆம் அவனைப் புனை தேர்மிசையே வைத்துத் துனி
                                மாறிடுமாறு உரைசெய்து,
'அரனாம் என நீ அணி நின்றிட, யாம் அனல் அம்பு என ஓடி
                                இமைப்பிடை, முப்
புரமே அகம் ஆய தயித்தியரின் பொருவோன் உயிர் கைக்கொடு
                                போதுவமே.

209
உரை
   

'விடை கொண்டனம்' என்று வணங்கி, நிலா மதியம் பகலே ஒளி
                                விட்டது எனக்
குடை கொண்டு நிழற்ற, இரண்டு அருகும் குளிர் சாமரம் மாருதம்
                                மாறு பொர,
புடை கொண்டு மகீபர் திரண்டு வர, புனை தேர், மத மா, புரவித்
                                திரள், கைப்
படை கொண்ட பதாகினி, முன் பின் வரும் படி ஏகினர்
                                மாதவ பற்குனரே.

210

உரை
   

வெங் கோதை நெடுஞ் சிலையின் சிறு நாண் விசை ஓதையும், வெவ்
                                விருது ஓதையும், வெண்
சங்கு ஓதையும், வண் பணை ஓதையும், நால் வகையாகிய தானை
                                நெடுங் கடலின்
பொங்கு ஓதையும், அண்டம் உடைந்திட அப் புறம் உற்று அகலாது
                                செவிப்பட, மற்று
இங்கு ஓதை எழுந்தது அறிந்திலரால், இமையா விழியோர்
                                முதல் யாவருமே.

211
உரை
   

கன்னன் சரகூடத்தை அறுத்து வீமனோடு
பொருதலை விசயன் கண்டு, களத்தை அடுத்துக்
கன்னனுடன் பொருதல்

தாமங்களின் வைப்பு அருள் காளையும், அச் சரகூடம் அறுத்து,
                                அணி தானையொடும்
வீமன்தனொடும் பொருகின்றமை தன் விழி கண்டு களித்திட,
                                வில் விசயன்,
காமன்தனை நீறு எழ வென்ற நுதல் கண்போல் எரிகின்ற கருத்துடனே,
                                மா மந்தர வெற்பு அன
தேர் கடவும் வலவன்தனொடு ஆகவம் மன்னினனே.

212
உரை
   


அங்கிக் கதிர் தந்த கொடுஞ் சிலை நாண் அரவக் கணை அஞ்ச
                                எறிந்து, மிகச்
சங்கித்து, அடல் அங்கி அளித்த தனிச் சரம் ஏவினன் வந்து
                                தனஞ்சயனும்;
பொங்கிக் கனல் சாலம் எழுந்தது எனப் புகையும்படி போய்,
                                அகல் வான் நதியின்
கங்கில் பொறி விட்டது, தாரகையின் கணம் என்ன, எழுந்தது
                                காய் கனலே.

213
உரை
   


இணை இன்றி எழுந்து சுடும் கனலால், இரதங்களும், வேல் முதல்
                                எப் படையும்,
கணையும், சிலையும், கவனப் பரியும், கரியும், கரியானவை
                                கண்டு, இயமன்
துணைவன் துணை வாகு வளர்ந்திடவும், துணை வார் புருவங்கள்
                                துடித்திடவும்,
பணை வெங் குரல் கன்றி முழங்கிடவும், பவ்வத்து அரசன் தரு
                                பாணம் எடா,

214
உரை
   


பவ்வம் புனல் வற்ற முகந்து வலம் பட அம்பரமூடு உருவப் பரவா,
வெவ் அம்புதம் ஏழும் உடன் பொழியும் வெள்ளம் புரை வெள்ளம்
                                மிகச் சொரிய,
செவ் அம்பரம் ஒத்த களத்திடை, அச் செய்யோன் மகன் வன்பொடு
                                சீறி விடும்
அவ் அம்பு நொடிப்பொழுதத்து அறவோன் அனுசன் தழல் அம்பை
                                அவித்ததுவே.

215
உரை
   


வாயுக் கணை ஏவினன் வானவர்கோன் மைந்தன்; திகழ் பேர்
                                ஒளி வான்மணியின்
சேய் உற்று உரகேசன் வழங்கிய திண் திறல் வெங் கணை
                                ஒன்று தெரிந்தனனால்;
ஆயுப் புறமிட்டுவிடப் பொருவோன் அரி வெங் கணை,
                                அங்கு மலைந்திடுவோன்
வீ உற்பல மா முனை வெங் கணை மேல் வீசிப் பொரும்
                                முன்பு, விழுங்கியதே.

216
உரை
   


'என் அம்புதனக்கு எதிர் இல்லை' எனா, இருள் அம்பினை ஏவினன்
                                வில் விசயன்;
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து
                                எதிர் கன்றினனால்;
முன் அம்பு சிதைந்து சிதைந்து அழியா, முகம் மாறி இமைத்து
                                விழிக்கும் முனே,
பின் அம்பு தொடர்ந்து செலச் செலவே, பிலம் மூழ்கியது; என்ன
                                பெரும் பிழையோ?

217
உரை
   


மகவான் அருள் வாளி தொடுத்தனன், அம் மகவான் மகன்; வாசிகள்
                                ஏழுடை வெம்
பகவான் அருள் வாளி தொடுத்தனன், அப் பகவான் அருள்
                                தியாகபராயணனும்;
தக வாளி இரண்டும் உடன் கதுவி, தாழாது உயராது சமம் பெறவே,
முகவாய்கள் பிளந்தன; மற்று உள போர் முனை வாளியும்,
                                இப்படி முட்டினவே.

218
உரை
   


உரம் மந்தர வெற்பினும் மிக்க புயத்து உரவோன், உளம் வெஞ்
                                சினம் ஊறி எழ,
பிரமன் கணை ஏவுதலும், சமனார் பின்னோன் முடுகிப் பிறை
                                மா மவுலிப்
பரமன் கணை ஏவினன்; அக் கணை அப் பகவன் கணை
                                நீறுபடுத்துதலின்,
சரம் அங்கு அவை வேறு தொடுத்திலர், கைத் தனுவும் குனிவித்திலர்,
                                தார் முடியோர்.

219
உரை
   


இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய
                                மா மறை கூர்
வெவ் வாளிகள் ஓடி உடற்றுதலால், வெஞ் சேனை அடங்க
                                மடங்கியபின்,
மை வான் அளகம், திசை வாள் முகமா, மலையாம் முலை,
                                வாரிதி வண் துகிலம்,
செவ் ஆறு படுத்தலின், மேதினியாள் திருமேனி அணிந்தது,
                                செவ்வணியே.

220
உரை
   

கன்னன் நாகாஸ்திரத்தை விசயன் கழுத்திற்கு இலக்காக எய்தலும், கண்ணன் தேரை அழுத்தவே, அது அவனது கிரீடத்தை இடறிச் செல்லுதலும்

'மகபதி மைந்தனை, மீளவும், தினகரன் மகன், உயிர்
                         கொண்டிடவேணும்' என்று, உறு சினம்
மிக மிக, வன் சிலை கோலி, ஒண் கிரி பல மிடை வனம் வெந்திட
                         ஓடி, அந்தரமிசை
புகை கதுவும்படி சீறி, வெம் பொறி விடு புரி தழல் மண்டிய நாளில்
                         அம்பு என வரும்
இகலுடை வெம் பகு வாய்கள் ஐந்து உடையது ஒர் எழில் கொளும்
                         புயங்கனை ஏவ என்று உசவியே,

221
உரை
   


பரிமள சந்தன தீபமும், கமழ் புகை பனி மலரும் கொடு
                                பூசையும் பரிவுடன்
அருளி, வணங்கி, எடா விடும் பொழுதினில், அடல் வலவன் சில
                                கூறினன் பரிவொடு;
'விரி துளவம் புனை மாயன் வஞ்சனை உளன்; விசயன் அகன் தட
                                மார்பகம் புதைதர
உரக நெடுங் கணை ஏவுக!' என்றிட, அவன் உறுதி நினைந்திலன்,
                                ஆதவன் குமரனே.

222
உரை
   

மழு உறு செங்கை இராமன் என்பவன் அருள் வரி சிலை கொண்டு, அணி
                                நாணி தன் செவியொடு
தழுவுற, மண்டலமாய் வளைந்திட, முது தறுகண் நெடுஞ் சினம் மூளும்
                                வெங் கணையினை,
எழிலி மதங்கய வாகனன் தனயனது எழில் பெறு கந்தரமே துணிந்திடும்
                                வகை,
அழல் எழு நெஞ்சொடு நாடி நின்று, உதையினன்-அளி முரல் பங்கய
                                நாயகன் குமரனே.
223
உரை
   


வலவன் எனும் திருமால், அதன் துனை கெழு வரவை அறிந்து, அணி
                                தேரின் வன் திகிரிகள்
இலகிய அங்குலி ஆறு-இரண்டு அவனியின்-இடை புதையும்படி
                                தாழ நின்றிடுதலின்,
அலர் கதிர் தந்தருள் காளை அம்பு என விடும் அரவு தனஞ்சயன்
                                மார்பையும் களனையும்
விலகி, அவன்தன தாதை அன்று உதவிய வெயில் மகுடம்தனை
                                மோதி வந்து இடறவே,

224
உரை
   

நாகாச்திரத்தை விசயன் இருகூறாக்குதலும், அது மீண்டும் கன்னனிடம் வந்து, தன்னை விடுமாறு வேண்ட அவன் மறுத்தலும்

இடறிய திண் பணி வாளி பின் பறிதலும், எதிர் பொர, வெஞ் சிலை
                                   கோலி நின்றவன், அணி
பிடரினும் உண்டுகொல் பார்வை என்றிட, வலி பெற நிலை நின்று இரு
                                   தோள்களும் பரிவுற,
அடவியின் வெந்து தன் வால் குறைந்திட விடும் அயில் முக வெங்
                                   கணையால், அதன் பருமைகொள்
உடலம் இரண்டு உடலாய் விழுந்து அலமர உதையினன் உம்பர்பிரான்
                                   அருள் குரிசிலே.

225
உரை
   


பிறகு புரிந்து எழில் கூர் தனஞ்சயன் விடு பிறைமுக வெங் கணையால்
                              அழிந்திடு பணி
திறலுடன் முன் துணி சேரும் ஐந் தலையொடு திரியவும் வந்து,
                              'எனை ஏவுக' என்று அலறவும்,
'உறவொடு குந்தி வழா வரம் பெறுதலின், உரை வழுவும்; பெரிது
                                ஆகுலம் புரியினும்,
மறு கணை ஒன்று தொடேன், முனிந்து, இனி' என, வரி கழல் அங்கர்
                                குலாதிபன் புகலவே,

226
உரை
   


நாகம் கன்னனை நொந்து உரைத்து, உயிர் துறத்தல்

'எரியிடை வெந்து, உடல் வாலும் முன் தறிதலின், இடர் அற உய்ந்திட,
                             நீ பெரும் புகல் என
விரைவொடும் வந்து, "எனை வாளி கொண்டிடுக!" என விசயனை
                             வென்றிடுமாறு உளம் கருதவும்,
ஒரு தனி வெஞ் சிலை கால் வளைந்திலதுகொல்? ஒரு படியும்
                             பிழைபோனது உன் தொடை' என
வரி கழல் அங்கர் பிரானை நொந்து, உரைசெய்து, மறலியிடம்தனில்
                             ஆனது அன்று, உரகமே.

227
உரை
   


இருதிறத்தாரும் விசயன் தப்பியமைக்கு மகிழ்தல்

நாகாயுதம் தப்பி நரன் உய்ந்த பொழுதத்து, நாகக் கொடிச்
சேகு ஆன நெஞ்சத்தவன் சேனையில், தன் செருச் சேனையில்,
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார்-
ஏகாதசம்தன்னில் எக் கோளும் நிகர் என்ன இகல் இன்றியே.

228
உரை
   

சல்லியன் உளம் நொந்து கூறி, கன்னனுக்குத்
தேர் ஓட்டேன் என்று தேரிலிருந்து இறங்கி,
தனது தேருக்குச் செல்லுதல்

'அரு மார்பு இலக்காக எய்' என்ன எய்யா அகங்காரமும்,
வரு மாசுணம்தன்னை மறுகாலும் ஏவாமல் மறை செய்ததும்,
பொருமாறு நினைவு அற்றதும், கண்டு, நரன் ஒத்த போர் மீளியை,
திருமாலொடு ஒப்பானும் உளம் நொந்து, நொந்து, அம்ம சில கூறுவான்:

229
உரை
   


'என்னாலும் அரிது, இத் தடந் தேர் விரைந்து ஊர்தல்; இனி
                                என்றும் மற்று
உன்னாலும் அரிது, அந்த விசயன்தன் உயிர் கொள்ளல்
                                உன்னித்த போர்;
பன்னாக துவசற்கும் அரிதால், உனைக் கொண்டு பார் ஆளுமாறு!'
என்னா இழிந்தான், அவன் தேரின்மிசைநின்றும், இசை நின்றுளான்.

230
உரை
   


என்றே, எழில் குந்திவயின் நல்கு தனி ஆளி இகல் ஏறு அனான்
வன் தேர் செலுத்திப் பெரும் போர் முடிப்பிக்க வரு சல்லியன்,
தென் தேர் இசைச் செவ்வி நறை நாறு மலர் விட்ட சிறை வண்டு என,
தன் தேரின் மேல்கொண்டு, தனி வில்லும் மீளத் தரித்தான்அரோ.,

231
உரை
   

கன்னன் பரசுராமன் சாபத்தை நினைந்தவனாய்,
வேறு தேர் ஏறி விசயனுடன் பொருதல்

கத வாசி நடை அற்று, வலி அற்று, வரி விற் கொள் கணை யாவையும்
வித ஆழி நிலன் உற்று விரை தேரும் மெய் வன்பும் மெலிவு
                                உற்ற பின்பு,
உதவாமல் மழுவாளி உரைசெய்த சாபத்தை உற உன்னினான்-
அதவா, முரண் போர்தனக்கு அஞ்சுமோ, என்றும் அடல்
                                அங்கர்கோன்?

232
உரை
   


இயற்கைப் பெருங் கொற்ற வலி அன்றி, யார் யாரிடத்தும் பெறும்
செயற்கைப் படைத் திண்மை கை வந்திலா வெய்ய
                                செய்யோன் மகன்,
வெயர்க்கத் தன் நுதல் கண் சிவப்பு ஏற, மனம் வெம்ப,
                                மண்மீது இழிந்து,
அயர்க்கச் சபித்தோனை வந்தித்து, வேறு ஓர் அடல் தேரின்மேல்,

233
உரை
   

கண்ணன் கன்னன் வலி குறைதலை விசயனுக்குக்
குறிப்பிக்க, அவன் கன்னனது உயிர்க் காற்று
அவியுமாறு பாணம் தொடுத்தல்

ஏறி, தன் வலவன் செலுத்த, தடக் கையில் இகல் வில்லுடன்,
சீறி, கொடுஞ் சாயகம் கோடி முகிலூர்தி சேய்மேல் விட,
காறிக் கனன்று அக் கடுந் தேர் செலுத்தும் கரும் பாகனார்
கூறிக்கொடுத்தார், அருக்கன் குமரன் வன்மை குறைகின்றதே.

234
உரை
   

குறை அற்ற தன் வில்லை, மகவற் குமாரன், குனித்து, ஆசுகம்
சிறை அற்ற கிரி போல நிற்கின்ற தினகாரி சிறுவன்தன் மெய்,
மறையத் தொடுத்தான், உயிர்க் கால் அவிப்பான்,
                                மயிர்க் கால்தொறும்-
கறை அற்ற மதி போல நிலவு ஈனும் முத்தக் கழற் காலினான்.

235
உரை
   

போரை நிறுத்துமாறு கண்ணன் விசயனுக்குக் கூறி, வேதியர்
வடிவு கொண்டு கன்னனை அடைதல்

எத் தலங்களினும் ஈகையால், ஓகை வாகையால், எதிர் இலா வீரன்,
மெய்த்தலம் முழுதும் திறந்து உகு குருதி வெயிலவன்
                                கரங்கள்போல் விரிய,
கொத்து அலர் அலங்கல் மகுடமும் கவச குண்டலங்களும்
                                உருக் குலைந்தும்,
கைத்தலம் மறந்தது இல்லை-விற் குனிப்பும், கடுங் கணை
                                தொடுத்திடும் கணக்கும்.

236
உரை
   

அத்த வெற்பு இரண்டு விற்கிடை எனப் போய் ஆதவன்
                                சாய்தல் கண்டருளி,
முத்தருக்கு எல்லாம் மூலமாய், வேத முதல் கொழுந்து
                                ஆகிய முகுந்தன்,
சித்திரச் சிலைக் கை விசயனை, 'செரு நீ ஒழிக!' எனத்
                                தேர்மிசை நிறுத்தி,
மெய்த் தவப் படிவ வேதியன் ஆகி, வெயிலவன்
                                புதல்வனை அடைந்தான்..
237
உரை
   


வேதியன் 'இயைந்தது ஒன்று அளி' எனலும், கன்னன்,
'தரத்தகு பொருளை நீ சொல்லுக!' என்ன, வேதியன்
அவனது புண்ணியத்தை உதவ வேண்டுதலும்

'தாண்டிய தரங்கக் கருங் கடல் உடுத்த தரணியில் தளர்ந்தவர்
                                தமக்கு வேண்டிய தருதி நீ எனக்
கேட்டேன்; மேருவினிடைத் தவம் பூண்டேன்;
ஈண்டிய வறுமைப் பெருந் துயர் உழந்தேன்; இயைந்தது ஒன்று இக்
                                கணத்து அளிப்பாய்!-
தூண்டிய கவனத் துரகதத் தடந் தேர்ச் சுடர் தரத் தோன்றிய
                                தோன்றால்!'

238
உரை
   

என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது
                                எனக் கேட்டு,
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து
                                இரதமேல் விழுவோன்,
'நன்று!' என நகைத்து, 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என,
                                நான் மறையவனும்,
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும்,
                                உளம் மகிழ்ந்தான்.

239
உரை
   

கன்னன் மகிழ்ந்து, தான் செய் புண்ணியம்
அனைத்தையும் நீர் வார்த்துக் கொடுத்தல்

'ஆவியோ நிலையின் கலங்கியது; யாக்கை அகத்ததோ?
                                புறத்ததோ? அறியேன்;
பாவியேன் வேண்டும் பொருள் எலாம் நயக்கும் பக்குவம்தன்னில்
                                வந்திலையால்;
ஓவு இலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன்;
                                கொள்க நீ! உனக்குப்
பூவில் வாழ் அயனும் நிகர் அலன் என்றால், புண்ணியம்
                                இதனினும் பெரிதோ?'

240
உரை
   

என்ன முன் மொழிந்து, கரம் குவித்து இறைஞ்ச, இறைஞ்சலர்க்கு
                                எழிலி ஏறு அனையான்,
கன்னனை உவகைக் கருத்தினால் நோக்கி, 'கைப் புனலுடன்
                                தருக' என்ன,
அன்னவன் இதயத்து அம்பின்வாய் அம்பால் அளித்தலும்,
                                அங்கையால் ஏற்றான்-
முன்னம் ஓர் அவுணன் செங் கை நீர் ஏற்று மூஉலகமும்
                                உடன் கவர்ந்தோன்.

241
உரை
   

வேண்டும் வரம் கேள்' என முனிவன் கன்னனுக்குக்
கூறுதலும், அவன், 'எப்பிறப்பினும் இல்லை என்போர்க்கு
மறுத்து உரையா இதயம் அளி' என்றலும்

மல்லல் அம் தொடையல் நிருபனை முனிவன் மகிழ்ந்து,
                                'நீ வேண்டிய வரங்கள்
சொல்லுக; உனக்குத் தருதும்!' என்று உரைப்ப, சூரன் மா
                                மதலையும் சொல்வான்:
'அல்லல் வெவ் வினையால் இன்னம் உற்பவம் உண்டாயினும்
                                ஏழ் எழு பிறப்பும்,
"இல்லை" என்று இரப்போர்க்கு "இல்லை" என்று உரையா இதயம்
                                நீ அளித்தருள்!' என்றான்.

242
உரை
   


கன்னன் வேண்டிய வரம் அளித்து, முத்தியும்
பெறுவாய் என்று முனிவன் உரைத்தல்

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர்
                      உகந்து உகந்து, அவனைக்
கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை
                      நீர் ஆட்டி,
'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும்
                       செல்வமும் எய்தி,
முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்-மூவரும்
                      ஒருவனாம் மூர்த்தி.

243
உரை
   

வேதியன் தன் உண்மை உருவைக் காட்டக் கண்டு,
கன்னன் அகம் மகிழ்ந்து துதித்தல்


போற்றிய கன்னன் கண்டு கண் களிப்ப, புணரி மொண்டு
                           எழுந்த கார் முகிலை
மாற்றிய வடிவும், பஞ்ச ஆயுதமும் வயங்கு கைத்தலங்களும், ஆகி,
கூற்று உறழ் கராவின் வாயின்நின்று அழைத்த குஞ்சர ராசன்
                           முன் அன்று
தோற்றியபடியே தோற்றினான்-முடிவும் தோற்றமும் இலாத
                           பைந் துளவோன்.

244
உரை
   

அமரரானவரும், அமர யோனிகளும், அமரருக்கு அதிபனானவனும்,
கமல நான்முகனும், முனிவரும், கண்டு, கனக நாள்மலர்
                                கொடு பணிந்தார்;
'சமர மா முனையில் தனஞ்சயன் கணையால் சாய்ந்து உயிர் வீடவும்,
                                செங் கண்
அமல நாரணனைக் காணவும், பெற்றேன்!' என்று, தன் அகம்
                                மிக மகிழ்ந்தான்.

245
உரை
   

'அருந் தழல் மா மகம் புரிந்தும், கடவுள்-கங்கை ஆதியாம் புனல்
                                    படிந்தும், அனில யோகத்து
இருந்தும், அணி மலர் தூவிப் பூசை நேர்ந்தும், எங்கும் ஆகிய
                                    உன்னை இதயத்துள்ளே
திருந்த நிலைபெறக் கண்டும், போகம் எல்லாம் சிறுக்கி, அனைத்து
                                    உயிருக்கும் செய்ய ஒண்ணாப்
பெருந் தவங்கள் மிகப் பயின்றும், பெறுதற்கு எட்டாப் பெரும்
                                    பயன், நின் திருவருளால் பெறப்பெற்றேனே.

246
உரை
   

'நீல நெடுங் கிரியும் மழை முகிலும் பவ்வ நெடு நீரும் காயாவும்
                                நிகர்க்கும் இந்தக்
கோலமும், வெங் கதை, வாளம், சங்கு, நேமி, கோதண்டம், எனும்
                                படையும், குழையும் காதும்,
மாலை நறுந் துழாய் மார்பும், திரண்ட தோளும், மணிக் கழுத்தும்,
                                செவ் இதழும், வாரிசாதக்
காலை மலர் என மலர்ந்த முகமும், சோதிக் கதிர் முடியும்,
                                இம்மையிலே கண்ணுற்றேனே!.
247
உரை
   

'தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து,
                                தறுகண் ஆண்மைச்
செருவில், எனது உயிர் அனைய தோழற்காகச் செஞ்சோற்றுக் கடன்
                                கழித்தேன்; தேவர் கோவுக்கு
உரைபெறு நல் கவசமும் குண்டலமும் ஈந்தேன்; உற்ற பெரு நல்
                                வினைப் பேறு உனக்கே தந்தேன்;
மருது இடை முன் தவழ்ந்தருளும் செங் கண் மாலே! மா தவத்தால்,
                                ஒரு தமியன் வாழ்ந்தவாறே!

248
உரை
   

'வான் பெற்ற நதி கமழ் தாள் வணங்கப்பெற்றேன்; மதி பெற்ற
                           திருவுளத்தால் மதிக்கப்பெற்றேன்;
தேன் பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும், திருப் புயமும்,
                                தைவந்து தீண்டப்பெற்றேன்;
ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும், உணர்வுடன் நின்
                                திருநாமம் உரைக்கப்பெற்றேன்;
யான் பெற்ற பெருந் தவப் பேறு, என்னை அன்றி, இரு நிலத்தில்
                                பிறந்தோரில் யார் பெற்றாரே!'
249
உரை
   

கண்ணன் கன்னன் பொருட்டுத் தான்
செய்த செயல்களைக் கூறி, மீண்டு சென்று,
விசயனுக்கு வலவன் ஆதல்

என்று மகிழ்வுற, வணங்கும் எல்லி மைந்தன் இன்புற, வண்
                            புறவினில் ஆனிரையின் பின் போய்,
கன்றுகொடு விள எறிந்த கண்ணன்தானும், கன்னனுக்குக்
                            கட்டுரைப்பான்; 'கடவுள் நாதன்
அன்று உனது கவசமும் குண்டலமும் வாங்க அழைத்தேனும்,
                            குந்தியைக் கொண்டு அரவ வாளி
ஒன்று ஒழியத் தொடாத வரம் கொள்வித்தேனும், உற்பவத்தின்
                            உண்மை உனக்கு உணர்வித்தேனும்,

250
உரை
   

'தக்ககன்தன் மகவான உரக வாளி தனஞ்சயனைச் சதியாமல்
                                சாய்வித்தேனும்,
மெய்க் கருணை நின்பொருட்டால், 'யானே' என்று மீண்டும் போய்த்
                                தேர் வலவன் விசயற்கு ஆனான்-
எக் கடலும், எக் கிரியும், எல்லா மண்ணும், இமையோரும்,
                                மானுடரும், எல்லாம் ஆகி,
மைக் கண் இளங் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும்
                                மட நெஞ்சும் வாங்கும் மாலே.

251
உரை
   


கண்ணன் சொற்படி, விசயன் அஞ்சரீகம் எனும்
அம்பை ஏவ, கன்னன் வீழ்தல்

'பகலவன்தன் மதலையை நீ பகலோன் மேல்பால் பவ்வத்தில்
                                படுவதன்முன் படுத்தி' என்ன,
இகல் விசயன் உறுதி உற அஞ்சரீகம் எனும் அம்பால் அவன்
                                இதயம் இலக்கமாக
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான்; அந்த ஆசுகம் உருவி,
                                அப்பால் ஓடி,
தகல் உடையார் மொழி போலத் தரணியூடு தப்பாமல் குளித்தது;
                                அவன்தானும் வீழ்ந்தான்.

252
உரை
   


குற்றுயிருடன் கன்னன் கிடக்க, அசரீரி உரையால்
செய்தி உணர்ந்த குந்தி அங்கு வந்து,
புலம்புதல்

கருடனது திருத் தோளில் கண்ட கோலம் கண்ணினும் நெஞ்சினும்
                                நிற்க, கருணை ஆதி-
புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனி விளங்க,
                                புதைந்து வாளி
வருடம் உடல் குளிப்பிக்க, செம் பொன் தேர்மேல் மன்னர் எலாம்
                                புடை சூழ, வையம் காக்கும்
குருடன் மகன் அருகு இருந்து சோகம் கூர, குற்றுயிரினுடன் கிடந்தான்
                                கொடையால் மிக்கோன்.

253
உரை
   

'முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால், முடி சாய்ந்து
                     இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான்;
அந்தி படுவதன் முன்னே ஆவி போம்'என்று அசரீரி எடுத்து
                          உரைப்ப, அன்னையான
குந்தி தனது உளம் உருக, கண்ணீர் சோர, குழல் சரிய, போர்ககளத்து,
                          'கோ, கோ!' என்று,
வந்து, இரு கை தலைப் புடைத்து, தலைநாள் ஈன்ற மகவின்மேல்
                          வீழ்ந்து அழுதாள், மன்னோ மன்னோ!

254
உரை
   

'என்றே என் தாதையுழைக் கன்னி மாடத்து எழில் இரவி திருவருளால்
                          ஈன்றேன், ஈன்ற
அன்றே பொற் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம் முறையால்,
                          உனை விடுத்தேன், அருள் இலாதேன்;
வென்றே மண் கவர்தரு மன் மதலைக்கு ஆவி மித்திரன் ஆனது கேட்டு,
                          உன் வீரம் கேட்டு,
நன்றே என் தவப் பயன் என்று உன்னி வாழ்ந்தேன்; நாகமும் நீ
                          அரசாள நடக்கின்றாயோ?

255
உரை
   

'ஓர் அஞ்சு பேர் உளரால் அறம் தவாத உதிட்டிரன் ஆதியர், உரகக்
                                கொடியோன் ஆதி
ஈர்-அஞ்சு பதின்மர் உளர் தம்பிமார்கள், இங்கிதங்கள் அறிந்து,
                                அடைவே ஏவல் செய்ய;
பார் அஞ்சும் ஒரு குடைக்கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும்,
                                விதி வலியால் பயன் பெறாமல்,
கார் அஞ்சு கரதலத்தாய்! அந்தோ அந்தோ, கடவுளர்தம்
                                மாயையினால் கழிவுற்றாயே!'

256
உரை
   

குந்தி தேவி கன்னனை நேயமோடு மடியில் வைத்து
அமுதூட்ட, கன்னனது ஆவி பிரிதல்


என்று என்றே அமர்க் களத்தில் நின்ற வேந்தர் யாவரும் கேட்டு
                            அதிசயிப்ப, ஏங்கிஏங்கி,
அன்று அன்போடு எடுத்து அணைத்து, முலைக்கண் ஊறல் அமுது
                            ஊட்டி, நேயமுடன், அணித்தா ஈன்ற
கன்று எஞ்ச இனைந்து இனைந்து மறுகாநின்ற கபிலையைப்போல், என்
                            பட்டாள்-கலாபம் வீசிக்
குன்று எங்கும் இளஞ் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன்
                            திருத்தேவி, குந்திதேவி!
257
உரை
   

அன்னை மடியினும் கரத்தும் உடல் கிடப்ப, அங்கர்பிரான்
                                ஆவி தாதை-
தன்னை மருவுறத் தழுவி, தானம் உறக் கிளர்ந்தது, அவண்
                                தடுமாறாமல்-
மின்னை வலி உற நீட்டி, அண்ட முகடு அசையாமல்,
                                விண்ணோர் தச்சன்,
பொன்னை அழகு எழப் பூசி, ஒளி பிறங்க நாட்டியது ஓர்
                                பொன்-தூண் ஒத்தே.

258
உரை
   

துரியோதனன் சேனைகள் வீமனாலும்
விசயனாலும் குறைந்த தன்மை


மருத்து உதவ வரு சண்ட மருத்தாலும், மருத்துவான் வழங்கும்
                     சோதி உருத் திகழும் கரிய சுடர்
உருத்து எழு வெங் கனலாலும், உகாந்தம்தன்னில்
நிருத்தமிடும் பெரும் பவ்வ நெடு நீத்தம் வறப்பதுபோல்,
                        நிருபன் சேனைப்
பெருத்த கடல் சுவறிய அப் பெருமைதனை எப்படி
                        நாம் பேசுமாறே!

259
உரை
   

துரியோதனன் புலம்புதல்

யஅணையார்தம் படைக் கடலின் அரு நிலைக்குக்
                       கரை ஏறல் ஆன கோலப்
புணையாய், எத் திறங்களினும் பகிராமல், உற்றது எலாம் புகலத்
                       தக்க துணையாய், என் உயிர்க்கு
உயிராம் தோழனும் ஆகிய உன்னைத் தோற்றேன்ஆகில்,
இணை யாரும் இலா அரசே! யாரைக் கொண்டு, அரசு ஆள
                       இருக்கின்றேனே!

260
உரை
   

'சூழ் வேலை உலகு ஆளும் சூழ்ச்சியும், இப் பெருஞ்
                       செல்வத் துவக்கும், நெஞ்சால்
வீழ்வேனோ? அமராட வீமனொடு தலைநாளில்
                       விளைந்த செற்றம்
தாழ்வேனோ? உனை ஒழிந்தும், தம்பியரை ஒழிந்தும்
                       இனித் தனித்து நானே
வாழ்வேனோ? வாழ்வே! என மன வலியே! வருகின்றேன்,
                       வருகின்றேனே!'

261
உரை
   


சூரியன் மறைதல்


எனக்கொண்டு சுயோதனன் பேர் இரக்கமுடன் அழுது
                       அரற்ற, இருந்த வேந்தர்
மனம் கொண்ட வருத்தமுடன், 'வலி இழந்தோம்!' எனக்
                       கலுழ, வானின் எங்கும்
இனக் கொண்டல் முழங்குவபோல் அந்தர துந்துபி முழங்க,
                       இமையோர் ஆர்ப்ப,
கனக் கொண்ட கதிர் புதல்வன் பாடு அறிந்து
                       மூழ்கியதால் கடலினூடே.
262
உரை
   


தாயின் அழுகை கேட்டு ஐவரும் கண்ணனை வினவி
உண்மை தெரிந்து, கன்னனை அணுகுதல்

பேர் அறத்தின் மகன் முதலாம் பிள்ளைகள் ஐவரும்,
                       தம்மைப் பெற்ற பாவை
ஆர் கயற் கண் புனல் சொரிய அழுகின்ற குரலினைக் ,
                       கேட்டு ஆழியானை
ஓர் இமைப்பில் வினவியிட, உள்ளபடி உரைத்ததன்பின்,
                       உரும்ஏறு உண்ட
கூர் எயிற்று நாகம்போல் குலைகுலைந்து, தம்முனைப்
                       போய்க குறுகினாரே.

263
உரை
   

தருமன் முதல் ஐவரும் முறையே வருந்திப் புலம்புதல்


'கன்னி இளம் பருவத்தில் அரியமா எனும் கடவுள் காதல் கூர,
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால்;
                       மறந்தாய் கொல்லோ?
பின்னிய செஞ் சடைக் குழலாய்! ஈது என்ன பேர் அறிவு?
                       பெற்ற தாயின்
அன்னியம் நன்றாய் இருந்தது; இப்படியே பிழைப்பிப்பது
                       அறிந்திலேமே!'

264
உரை
   

'ஊற்று இருந்த விழியினளாய் உனைப் பயந்தாள் மனம்
                       மறுக, உயிராய் நின்று
காற்று இருந்த இடம் தேடிக் கணை பலவும் உடல் குளிப்ப,
                       கன்னா! இன்று
கூற்று இருந்த பதி தேடிக் குடி இருக்க நடந்தனையோ?
                       -கொற்ற வேந்தாய்
வீற்றிருந்து, இங்கு ஐவேமும் அடி வருடப் புவி
                       ஆள விதி இலாதாய்!'

265
உரை
   

'ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன்;
                       உரகத்தால் நீ-
தான் தொடுத்த கடுங் கணைக்குத் தப்பினேன் என
                       மகிழ்ந்தேன்; சஞ்சரீகத்
தேன் தொடுத்த மலர் அலங்கல் தின நாதன் சேயே! நின்
                       திருமார்பத்தில்
யான் தொடுத்த நெடும் பகழி எனைக் கெடுப்பது அறிந்திலேன்;
                       என் செய்தேனே!'

266
உரை
   

'யாய் உரைத்தது அல்லாது, வேறு உரைத்தது, அசரீரி என்னும்
                       தேவின் மகிழ்ந்தேன்;
வாய் உரைத்தது, இன்று அளவும் கேட்டிலேம்; கேட்டனமேல்
                       வாட்டம் உண்டோ?
பேய் உரைத்துத் தாலாட்ட, முலைப்பாலோடு உயிர் உண்ட
                       பித்தா! ஈண்டை
நீ உரைத்த பிறகு அறிந்தோம்; எம்முனை இன்று எமைக்
                      கொண்டே நேர் செய்தாயே.
267
உரை
   

'ஆடகனைப் புதல்வனைக் கொண்டு அழிப்பித்தாய்; இலங்கை
                      நகர்க்கு அரசை அன்று
வீடணனைப் பகை ஆக்கிக் கிளையுடனே வீழ்வித்தாய்;
                     வேலை சூழ்ந்த
நாடு அறியப் புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும்,
                     நரன் கை அம்பால்
ஈடு அழியப் பொருவித்தாய்; இமையோர்கள் வல்ல விரகு
                     யார் வல்லாரே?'

268
உரை
   

ஐவரும் தாயும் பாடிவீடு செல்ல, துரியோதனனைக்
கொண்டு சகுனி முதலியோர் தங்கள்
இருப்பிடம் செல்லுதல்


இவ் வகையே திருத் தமையன் இணை அடிக்கீழ் வீழ்ந்து
                     அலறி, யாயும் தாங்கள்
ஐவரும் போய்த் தம் பாடி வீடு அடைந்தார், ஆகுலத்தால்
                     அழிந்த நெஞ்சார்.
பைவரு மாசுணத் துவசப் பார்த்திவனைக் கொண்டே
                     தம் பாடிபுக்கார்,
தைவரு திண் சிலைத் தடக் கைச் சகுனிதனை
                     முதலான தரணிபாலர்.

269
உரை