மிகைப் பாடல்கள்

காப்பு

நீடு ஆழி உலகத்து, மறை நாலொடு ஐந்து என்று நிலைநிற்கவே,
வாடாத தவ வாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன நாள்,
ஏடு ஆக வடமேரு வெற்பு, ஆகவம் கூர் எழுத்தாணி தன்
கோடு ஆக, எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம்அரோ.

1
உரை
   


முருகு ஆர் மலர்த் தாம முடியோனை, அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மத யானை வதனச் செழுங் குன்றினை,
புருகூதன் முதலாய முப் பத்து முக் கோடி புத்தேளிரும்
ஒரு கோடி பூதேவரும் கைதொழும் கோவை, உற உன்னுவாம்.

2
உரை
   


சூழ் ஆழி அகிலத்து மறைநாலு தமிழாகவே செய்தான், அவன்
கேழான மண நாறு கிளையான வரி வண்டு முகைகண்ட....ர
சூழான நற வேறு மகிழ் வீசு குருகூரன், உள்ளன்பர் கீழ்
ஆழாதபடி நாலு பதம் ஏற அருள் கூரும் அடி பேணுவாம்.

3
   

வாழி, வலம்புரி, தண்டு, எரி சக்கரம், வாள், அரி கைப் படையும்;
வாழி, நெடுஞ் சிலை; வாழி, அடுங் கணை; வாழி, மலர்ப் பதுமம்;
வாழி, தலம், புகழ்; வாழி, சவுந்தரி; வாழி, மலர்த்திருவும்;
வாழி, நலம் திகழ் பாடல்கள் ஏற்றுவர்; வாழி, தரித்தவரே.
4
   

வான் நாறு பெருஞ் சீர்த்தி வளர் குருகை, நம்பொருட்டு வந்து, தெய்வக்
கான் நாறு நறுந் துணர் வான் திருப்புளிக்கீழ் அமர்ந்து, நனி கருணை பூத்து,
தேன் நாறு தமிழ் மறைமுன் கிளந்தருளும் சிறுமுனிவன் செழு மெய்ஞ் ஞானப்
பால் நாறு பதகமலம் நமது பதக மலம் அறப் பழிச்சுவாமால்.
5
   


(இராசகோபாலப் பிள்ளை)

எவன் சொல் வாய்மையது என்று அருமறை எடுத்து இயம்பும்,
எவன் கொல் சாநவிப்புடைக் கரம் உயர்த்தி மெய் இசைத்தான்,
எவன் பொன்றாப் பரஞ் சுடர் ஒரு கூறு என இயைவான்,
அவன் செம் மாண் அடி அடைதும் நல் அருள்பெறற்பொருட்டே

6