அந்த வெம் சிலை வினோதன்உம் - அந்தவெவ்விய சிலையைக் கொண்டு விளையாடுபவனாகிய புத்திரனும், தான்உம்-,- ஓ தம் வெள்திரையின் மதியுடன் உதித்தஒள் மலர் கொடி என - பெருக்கைக் கொண்ட வெண்ணிறமுள்ள அலைகளையுடையபாற்கடலினின்று சந்திரனுடனேயுதித்த அழகிய மலரைக் கொண்ட கொடிபோன்றஇலக்குமிபோல், ஓடி - விரைந்துவந்து, தூதுளைகனி வாய் மலர்ந்து -தூதுளங்கனியையொத்த [செந்நிறமான] வாயைத் திறந்து, இனிது அழைத்து -இனிமையாகக் கூப்பிட்டு, (அந்தச்சந்தனுவை), சூடகம் செம் கையால் - சூடகமென்றவளையலை யணிந்த (தன்னுடைய) அழகிய கைகளால், எடுத்தாள்-; (எ -று.) ஓதவெண்டிரை - பாற்கடலுக்கு அன்மொழித்தொகைப் பன்மொழித்தொடர்: ஒண்மலர்க்கொடி யென்பதும்அவ்வாறே. வெண்ணிறமுள்ள கங்கைநீர் வெள்ளத்தினின்றுகலைகள்நிரம்பிய புத்திரனுடனே கங்கையாள் வந்தது - பாற்கடலினின்றுபதினாறுகலைகளும் நிரம்பிய சந்திரனுடனே இலக்குமி வெளிவந்ததுபோலுமென விரித்துப் பொருள் காணலாம். "நிதிநேவலக்ஷ்மீ:" என்று பாலபாரதத்திலிருப்பதற்குஏற்ப, 'நிதியுடனுதித்த வொண்மலர்க்கொடி' எனப் பாடமிருப்பினுமாம். இனி,சிலைவினோதனும் தானும் எடுத்தாள் - பால் விரவிச் சிறப்பினால் ஒருமுடிபைப்பெற்றது. (93) 86.- கங்கையாள் மன்னவனைத் தழுவிப் புத்திரனைக் கொடுத்திட்டுப் பின்வருமாறு கூறலுறுதல். வாடியதருவின்மழைபொழிவதுபோன் மடவரல்கருணைநீர் பொழியக், கூடியவுணர்வோடெழுந்தகாவலனைக் கொங்கைமார் புறத்தழீ இக்கொண்டு, நாடியகருமம்வாய்த்ததென்றுவகை நலம்பெறத்தந்தை பைங்கழற்கால், சூடியமகவைக்கைக்கொடுத்தவளுந் தோன்றலோடிவையிவை சொன்னாள். |
(இ-ள்.) வாடிய தருவில் - (வெயிலின் வெப்பத்தினால்) வாட்ட மடைந்தமரத்தினிடத்து, மழைபொழிவதுபோல்-, (மூர்ச்சித்துக் கிடக்கும் மன்னவன்மீது),மடவரல் - கங்காதேவியாகிய பெண், கருணை நீர் பொழிய - (தான்)கருணைநீரைச்சொரிய, கூடிய - மீண்டு வந்து சேரப்பெற்ற. உணர்வோடு - உணர்ச்சியுடனே, எழுந்த-, காவலனை - அந்தச்சந்தனுமன்னவனை, கொங்கை மார்புறதழீஇக் கொண்டு - ஸ்தநங்களோடுகூடிய மார்பிலே கட்டி யணைத்துக் கொண்டு, 'நாடிய கருமம் வாய்த்தது - (நாம்) கருதிய காரியம் சித்தித்தது,' என்று-, உவகை -மகிழ்ச்சியோடு, நலம்பெற - அழகு பொருந்த, தந்தை பைங் கழல் கால் சூடிய மகவை- தந்தையின் பசும்பொன்னாலியன்ற வீரக்கழலையணிந்த பாதங்களைச்சூடியஅந்தவீரனாகிய புத்திரனை, கைக்கொடுத்து - (தந்தையின்) கையிலே ஒப்பித்துவிட்டு,அவள்உம் - அந்தக் கங்கையாளும், தோன்றலோடு - ஆண்களிற்சிறந்தோனாகியசந்தனுமகாராசாவினிடத்தில், இவை இவை - இவ்விவ்வார்த்தைகளை, சொன்னாள்-:(எ-று.)- இவை யிவைஎன்று சுட்டியவற்றை, மேலிரண்டுகவிகளிற் காண்க. காவலனைஎன்றவிடத்துக் காதலனை என்றும் பாடம். |